Monday, September 30, 2019

GEETANJALI




கீதாஞ்சலி J K SIVAN
ரவீந்திரநாத் தாகூர்
22 வழிமேல்  விழி
22 . In  the deep shadows of the rainy July,
with secret steps, thou walkest,
silent as night, eluding all watchers.
Today the morning has closed its eyes,
heedless of the insistent calls
of the loud east wind,
and a thick veil has been drawn
over the ever-wakeful blue sky.
The woodlands have hushed their songs,
and doors are all shut at every house. Thou art the solitary wayfarer
in this deserted street. Oh my only friend, my best beloved,
the gates are open in my house---do not pass by like a dream.

மழை அறிகுறி  ஜூலை  மாதம்  நன்றாகவே  தெரிந்து  விடும். கிருஷ்ணா,  வாடைக் காற்று உடலை ஊடுருவி செல்லும்.  நீ  நடப்பது சந்தடி இல்லாமல் எவர் கவனமும் கலையாமல், எதிலும் சம்பந்தம் இல்லாதவன். இரவைப் போலவே,   இருளைப் போலவே,  நீ அமைதியானவன்.  யார் பார்த்தால்  என்ன, பார்க்கா விட்டால்என்ன? நினைப்பவனுக்கு  நீ  மனதில் தோன்றுபவன்.

இன்று என்னவோ  காலை வேளையே ஒளிகுன்றி  இருக்கிறதோ  கிழக்கே  மலைகளின் உச்சியிலிருந்து  இருந்து தொடர்ச்சியாக பலமான குளிர் காற்று வீச்சு அதிகரித்தே வருகிறது.  அதோடு  சூரியனை  மறைத்த, திரை போட்ட  மேகங்களினால் பகல் இரவாகவே  காட்சி அளிக்கிறது.   மரங்களின் அசைவு ஒலியோடு.  புழுதி தரையிலிருந்து மேலே எழும்பி காற்றில் புகை மண்டலம் போடுகிறது.  விழித்துக் கொண்டிருக் கும் நீல வானமே தெரியவில்லை. தட்டி
தூங்க வைக்கிறது கரு மேக  கூட்டங்கள்.  ஆம்    சூரியனை சுற்றி  ஒருபெரிய கருப்பு மேகத் திரை.

அடர்ந்த காடுகளில் இருந்து மூங்கில்கள் உராய்ந்து காற்றில் உன் வேணுகானமாக ஏதோ இனிமையான சப்தம் கேட்பது  மெலிதாக குறைந்துவிட்டது.  காற்றில் திசை மாறி  எங்கோ சென்று விட்டு அந்த இனிய ஓசை   எங்கிருந்தோ காற்றில் மிதந்து  வந்து என்  செவியில் இன்பத்து தேனாக  நுழைகிறது.  எங்கள் கிராமத்தில் வீடுகளே  கம்மி. அதில் எல்லாவற்றிலும் கதவுகள் ஜன்னல்கள் எல்லாமே  மூடி  பல ஜாமங்கள் ஆனதை போல் காட்சி அளிக்கிறது.  எல்லோரும் தூங்கிவிட் டார்கள். காற்று கதவுகளைப்  பிய்த்துக் கொண்டு பறக்கிறது.  கிருஷ்ணா, ஜன நடமாட்டமே இல்லாத இந்த தனிமையான நிசப்தமான   ஒற்றையடிப்  பாதையில்  நீ  ஒருவன்  மட்டும்  வழி தவறிய வழிப் போக்கனோ  அல்லது  வழக்கமான  வழி தெரிந்தனா??

கிருஷ்ணா, என்  கதவுகளை  மற்றவர்கள்  போல்  நான்  மூடி வைக்க வில்லை. திறந்தே  வைத்திருக்கிறேன். நீ  ஒருவனே  என் நண்பன். உண்மை அன்பன். வா  கிருஷ்ணா  வா, என் நெஞ்சக் கதவும்  கோட்டை  வாசல் போல்  அகன்று திறந்து இருக்கிறது. நீ வருவாய் என என்னால் உணர முடிகிறது.  கனவு போல் கண் சிமிட்டி மறையாதே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...