Friday, October 2, 2020

GEETHANJALI

 கீதாஞ்சலி  57 J K SIVAN

தாகூர்  

             57   ஆனந்தமய  ஒளி வெள்ளம்  

57 LIGHT, MY light, the world-filling light, the eye-kissing light, heart-sweetening light!
Ah, the light dances, my darling, at the centre of my life; the light strikes, my darling, the chords of my love; the sky opens, the wind runs wild, laughter passes over the earth.
The butterflies spread their sails on the sea of light Lilies and jasmines surge up on the crest of the waves of light
The light is shattered into gold on every cloud, my darling, and it scatters gems in profusion.
Mirth spreads from leaf to leaf, my darling, and gladness without measure. The heaven's river has drowned its banks and the flood of joy is abroad.
ரவிந்த்ரநாத் தாகூர் கற்பனை வ

ளம் மிக்கவர். ஞானி. அவர் எழுதியது பெங்காலி மொழியில். அவரே தனது கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக் கிறார். கிருஷ்ணா என்ற வார்த்தையை காணோம். நான் சேர்த்திருக்கிறேன். அவர் கற்பனை சற்று புரியாதவர்களுக்கு கிருஷ்ணனை சேர்த்து சொன்னால் புரியாதா என்ற ஆசை.
ஆஹா  ஒளியே, உலகத்தை வெளிச்சம்  போட்டுக்  காட்டும்  ஒளியே,  கண்ணில் முத்தமிடும் ஒளியே,இதயத்தை இனிப்பாக்கும்  ஒளியே, ஆ,  இந்த ஒளி எவ்வளவு திவ்யமாக  ஆடுகிறது, என் கண்ணா, கிருஷ்ணா, என் வாழ்க்கையே உன்னைத் சுற்றி தானே  இருக்கிறது.  இந்த ஒளி என்னை வழி நடத்துகிறது. சக்தி வாய்ந்தது.என் அன்பின் அடி நாதமாக  ஒலிக்கிறது, ஒளிர்கிறது. அதோ ஆகாயம் விரிந்து விட்டது, பிளந்துவிட்டது. ஓ வென்ற பேரிரைச்சலோடு எங்கிருந்து இந்த  காற்று பலமாக எதிர்த்து வருகிறது.  பூமியை நோக்கி  ஹா ஹா ஹா என்ற  பூதாகார சிரிப்பின் ஒலியா? ஒளிக்கடலின்  கரையில்  சிறு  பச்சை திட்டுக்கள்  அதில் தான் என்ன லாகவமாக  இந்த வண்ணத்துப் பூச்சிகள் சிறிதும் கவலையே இல்லாமல் குட்டி,  பட்டுச், சிறகை படபடவென்று அடித்துக்கொண்டு அங்குமிங்கும் சுறுசுறுப்பாக இலைகள் மேல் அமர்ந்து கண்ணைப் பறிக்கிறது.எங்கும் பரவியுள்ள ஒளி வெள்ளத்தின்   நுரையாக  அல்லியும் , மல்லியும் காற்றில் நர்த்தனமாடுகிறதே.என்ன மாயாஜாலம் பண்ணுகிறது இந்த ஒளி,  வெள்ளை நிறத்திலிருந்து எல்லாவற்றையும் ஏதோ ஒருமந்திரக்கோலால் பொன்னிறமாக்குகிறது.  இலைகள் நிலையில் இருந்து சொட்டும் பனித்துளிகளில் பலவர்ண  நவரத்ன கற்களின் நிறம் காட்டுகிறதே.  என் ஆனந்தம் பெருகிகிறதே. எல்லை இல்லாத மகிழ்ச்சியில் திளைக்கிறேன். ஆகாய கங்கை  கரையை  உடைத்துக்கொண்டு ப்ரவாஹமாக ஆந்த வெள்ளத்தில் மூழ்கடிக்கிறதே. நன்றி கிருஷ்ணா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...