Sunday, October 18, 2020

THIRUKKOLOOR PEN PILLAI

 

அன்பு நண்பர்களே,  
                                                               
   ஒரு நவராத்ரி பரிசு 
                                                             
ஆவலுடன் எதிர்பார்த்திருந்த  எமது சமீபத்திய  வெளியீடு   நான் எழுதிய   ''கேள்வி ஒன்று, பதில்  எண்பத்தி ஒன்று   வந்து சேர்ந்து விட்டது.    இது  வேறு ஏதோ அல்ல,  திருக்கோளூர்  பெண்பிள்ளை  வார்த்தைகள்  தான்.  
ராமானுஜர் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார் ''அம்மா இந்த திருக்கோளூர் க்ஷேத்ரம்  எல்லோரும்  வாழ்வில் ஒருநாளாவது  இந்த மண்ணை மிதிக்க மாட்டோமா,  ஒரு நாளாவது  இங்கு வாழமாட்டோமா  என்று  ''புகும் ஊர்'',  இதை விட்டு நீ   வெளியேறுவது எதற்காக? ''

மோர்  தயிர் விற்கும் அந்த ஊர்ப் பெண் பிள்ளை, சரமாரியாக  81  உதாரணங்களைக்கூறி  அதில் வரும் உதாரண ஸ்த்ரீ , புருஷர்களை போல் நான் ஏதாவது புண்ய காரியம் பெருமாளுக்
காவது, அடியார்களுக்காகவாது  செய்ததுண்டா, என்ன தகுதி இருக்கிறது எனக்கு இந்த புண்ய க்ஷேத்ரத்தில்  குடியிருப்பதற்கு என்று  பதில் கேள்வி கேட்கிறாள். 

அந்த 81 உதாரண ஸ்த்ரீ/புருஷர்களை பற்றிய விவரம் தான் இந்த புத்தகம்.  240 பக்கங்கள். 
வழக்கம் போல் இதற்கும் விலை கிடையாது, எங்கும்  விற்பனைக்கு கிடைக்காது.  நன்கொடை  ரூபாய் 100  எதற்கு என்றால் மீண்டும்  ஸ்டாக் தீர்ந்தால்  மறு  பதிவு இடுவதற்கு...

வேண்டுபவர்கள்  குறைந்தது 3 or 5, ஐந்தாவது வாங்கி மற்றவர்களுக்கு (அதாவது படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும், இலவசம் என்று வாங்கி கடையில் போடுபவர்களுக்கு அல்ல) பரிசாக அளிக்கலாம்.  நண்பர்களுக்கு  உறவினர்களுக்கு  பரிசளிக்கலாம், அருகில் உள்ள  நூல் நிலையம், பள்ளி லைப்ரரிகளுக்கு தரலாம். முதியோர் இல்லத்தில் படிக்க கொடுக்கலாம். நல்ல காரியங்கள் எவ்வளவோ இருக்கிறதே.  குறைந்தது 3  புத்தகங்களாவது பெற்றுக் கொண்டால் அனுப்புவது எளிது. எனக்கும் வேலை மிச்சம்.  எழுதுவதற்கு தினமும்  18 மணி நேரம் செலவாகிறது.

எங்கள் வங்கி கணக்கு விபரம்: 

SREE KRISHNARPANAM SEVA TRUST,                                    
CURRENT ACCT NO.510909010114902                                     
CITY UNION BANK, NANGANALLUR BRANCH.                                  
 IFSCODE CIUB000010.

நன்கொடைக்கு  ரசீது உண்டு.  நன்றி.  நேரில்  பெற   விரும்புவோர்  கீழ்க்கண்ட விலாசத்தில் சந்திக்கலாம்.ஜே.கே. சிவன்  15 கன்னிகா காலனி, 2வது தெரு, நங்கநல்லூர், சென்னை 600061  
 வாட்ஸாப்ப் 9840279080 
 email;  jksivan@gmail.com
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...