Sunday, October 25, 2020

VIJAYA DASAMI


  விஜய தசமி  -     விஷயம்  2. --- J.K. SIVAN


நவராத்திரி வழிபாடு,  தோன்றிய காரணம், சிறப்பு, அனுஷ்டிக்கும், பூஜா பலன் பற்றி எல்லாம்  தேவி மஹாத்மியம் விரிவாக சொல்கிறது. இது விஷயமான ஒரு கதை: 
சும்பன், நிசும்பன் என இரு ராக்ஷஸர்கள். தவம் செய்ததே தங்களை யாரும்  அழிக்க கூடாது என  வரம் பெற.  வரம் பெற்று,  மமதை கொண்டு தேவர்களை, பூலோக  மக்களை எல்லாம் கொடுமைப் படுத்தினார்கள். வெள்ளையும் சொள்ளையுமாக,  பாக்கெட்டில் யாரோ சிரிக்கும் பொம்மை தெரிய, ரெண்டு கை கூப்பி நெற்றியில் விபூதி குங்குமத்தோடு நம்மை அணுகி பதவி பெற்றதும் நாம் படும் துன்பம் தாங்க முடியாத அனுபவம் நமக்கே இருக்கும்போது, சும்ப நிசும்பர்கள் படுத்திய துன்பம் தாங்காமல் தேவர்கள் மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட மாட்டார்களா? ப்ரம்மா விஷ்ணு சிவனால் அழிக்க முடியாத அந்த ராக்ஷஸர்களை அன்னை ஆதி சக்தியால் மட்டுமே வதம் செய்ய முடியும். ஆகவே பிரம்மா, விஷ்ணு, சிவன் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அம்பாளுக்கு அளிக்க சக்தி இழந்த ப்ரம்மா விஷ்ணு சிவன் தேவர்கள் ரிஷிகள் அனைவருமே வெறும் சிலையாகி விட்டார்கள்.
அதனால் தான் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை திரிமூர்த்திகள் தந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க் கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அந்த ஒன்பது நாட்களை நவராத்திரியாகக் கொண்டாடு கிறோம்.  அந்நாட்களில் . மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். நவராத்திரியில் எவ்வாறு அலங்காரம் செய்ய வேண்டும்? நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர்.

அம்பிகையை.துர்காவாக, முதல் மூன்று நாள் ,  லட்சுமியாக  அடுத்த மூன்று நாள்,  கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும்  முப்பெரும் சக்தியாக வழி படுகிறோம்.   இந்த வருஷம் நவராத்ரி வந்ததும் தெரியவில்லை ஆயுத பூஜை போனதும் தெரியவில்லை.  எல்லாம் கொரோனா சக்தி. 

பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிப்பது தான் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக் கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். எடுத்த காரியம் யாவினும் வெற்றி இன்று. 
இப்படி அம்பாளை வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ அருள் புரிவாள்.. வருஷத்தில் ரெண்டு முறை நவராத்திரி என தேவி புராணம் சொல்கிறது. சித்திரையில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி. இப்போது புரட்டாசியில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி. இந்த ரெண்டுமே எமனுடைய கோரைப் பற்கள.  கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்க  பழைய காலத்தில் இந்த ஏற்பாடு. புரட்டாசி  சாரத  நவராத்திரி தான் பிரபலம். நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது.

நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க  இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் சக்தியாலும், வறுமைசெல்வத்தினாலும், அறியாமைஞானத்தினாலும் வெற்றி கொள்ளப் பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாக காரியங்கள்  துவங்கி  எளிதாக  நன்மை பெறுவார்கள்.  அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை நவராத்ரி  சொல்லித் தருகிறது.   இந்த  ஒன்போது நாளும், ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.

''நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.'' இந்த ஸ்தோத்ரம் நவராத்ரி விரத பூஜாபாலன் பற்றி சொல்கிறேன். 

அடுத்து கடைசியாக  விஜய தசமி விஷயம். 3 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...