Thursday, February 6, 2020

GITANJALI




கீதாஞ்சலி  J K SIVAN
ரபீந்திரநாத்  தாகூர் 

                                         
         
      31    எனக்கு  நானே  நீதிபதி 

31 Prisoner, tell me, who was it that bound you?'
`It was my master,' said the prisoner. `I thought I could outdo everybody in the world in wealth and power, and I amassed in my own treasure-house the money due to my king. When sleep overcame me I lay upon the bed that was for my lord, and on waking up I found I was a prisoner in my own treasure-house.'

`Prisoner, tell me, who was it that wrought this unbreakable chain?'
`It was I,' said the prisoner, `who forged this chain very carefully. I thought my invincible power would hold the world captive leaving me in a freedom undisturbed. Thus night and day I worked at the chain with huge fires and cruel hard strokes. When at last the work was done and the links were complete and unbreakable, I found that it held me in its grip.'

நான்  இந்த  தொடரை எழுதி வருகிறேனே . நீங்கள் யோசித்து பார்த்தீர்களா?  ஏன் ரவீந்திரநாத் தாகூரை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கிறது என்று?  
அவர் ஒரு வேதாந்தி. தனிமை விரும்பி. ஞானி.  தன்னுள்ளேயே  பிரயாணம் செய்பவர்.  அதி அற்புதமான எண்ணற்ற வளமான கற்பனைகள், உணர்வுகளில்  தன்னை மறந்து லயிப்பவர்.  அவர் சொல்லும் கருத்துகள்  இலைமறைவு  காய் மறைவாக  மூடி மறைக்கப்பட்டாலும்  உன்னிப்பாக கவனித்தால் அவர் சொல்ல வரும் உயர்ந்த பக்தியம் சரணாகதியும்  வெளிப்படும்.   அவர் எழுத்து  சக்தி வாய்ந்தது. அவர் உணர்வுகளை வெளிப்படுத்துவது.   நிதானமாக  படிக்கவேண்டும்.  என் வார்த்தைகள்  அப்பட்டமான  தமிழாக்கம் இல்லவே இல்லை.  அவர் கருத்துகளோடு ஒன்றியது. அவ்வளவே.  நான்  அங்கங்கே  கிருஷ்ணனை உள்ளே புகுத்தி இன்னும் மெருகூட்டி என் வந்தனத்தை  தாகூருக்கு அளித்து உங்களுக்கு சமர்ப்பித்து மகிழ்பவன் --   ஜே .கே. சிவன்.

''அடே சிறையில் வாடும் கைதியே, சொல், உன்னை பிணைத்தது யார்?
''என்னை சிறையில் அடைத்தது யாரென கேட்கிறாயா, வேறு யாருமில்லை  அது  என் எஜமானன் தான் .''

செல்வச் செருக்கிலும், அளவற்ற அதிகாரமும் கொண்டு எனக்கு யாரும் ஈடாக கூடாது என்று  பேராசை.  அதனால் நான் என்ன செய்தேன் தெரியுமா?
என் எஜமான், அரசனுக்கு,  அவன் அரசாங்கத்துக்கு  உடைமையான செல்வத்தை  அவனுக்கு தெரியாமல் எடுத்து மலை போல் என் சொந்த  கஜானாவில் சேர்த்தேன்.   
 சந்தோஷத்தில்  எனக்கு தூக்கம் வந்தது, உறக்கம் என்னை ஆட்கொண்டது. கண்  சொக்கியது.  எதிரே என் எஜமானின் சப்ர மஞ்ச கட்டில். அதில் போய் படுத்தவன் தான். எழுந்திருந்து பார்த்தபோது என் கஜானாவே எனது  சிறைச்சாலையாக ஆகி விட்டிருந்தது. 

இப்போது கேள்.
''அடே, சிறையில் வாடும் கைதியே, உன்னை யார் இப்படி ஒரு உடைக்கமுடியாத இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டது?.

''அதை ஏன்  கேட்கிறாய். அது நானே தான். இந்த கனமான உடையாத இரும்பு சங்கிலியை செய்யச் சொன்னதே நான் தான். என்னுடைய செல்வாக்கு, அதிகாரம், அந்தஸ்து எல்லாம் இந்த உலகத்தையே என் காலடியில் ஒரு பந்தாக மாற்றும் என்று எண்ணினேன். இரவும் பகலும் இந்த சங்கிலியை வார்ப்படம் செய்ய என் எதிரில், கண கண வென்று தீ மூட்டி இரும்பை காய்ச்சி ஊற்றி செய்தது. நான் யாரையோ எதையோ என் கட்டுப் பாட்டில் கொண்டுவர தயாரித்த அந்த சங்கிலி கடைசியில் என்னையே பழி வாங்கிவிட்டதே. அந்த இரும்பின் உடும்பு பிடியில் சிக்கியது . கடைசியில் நானே தான். எனக்கு நானே தண்டனை வழங்கியவன்.போதுமா?   
கிருஷ்ணா, மனச்சாட்சிக்கு விரோதமாக, நியாய தர்மங்களுக்கு விரோதமான செயல்களால் தண்டிக்கப்படுவது நாம் தான்.  எது சுகமோ அதுவே  துன்பமாகிறது. .நமக்கு தண்டனை வழங்குவதும் நாம் தான். அது தான் நமக்கு நாமே திட்டமோ?  .    

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...