Tuesday, July 11, 2017

நடராஜ பத்து 7 -- J.K. SIVAN

எதை நினைத்து அழுவேன்?

நமக்கு எப்போது அழுகை வருகிறது? ஏதோ தாங்கமுடியாத துக்கம், உடல் வலி, எதிர்பார்த்து ஏமாற்றம், போன்ற சில மன அழுத்தங்கள் உண்டாகும்போது. அவை தரும் வருத்தத்தால். இது மட்டும் பதில் என்று சொன்னால் பாதி மார்க் தான். ஏதாவது தப்பு கிப்பு பண்ணிவிட்டு, நம் குறையை உணர்ந்து அதற்காக பின்னால் வருந்தும்போது வருகிறதே ஒரு அழுகை அது தான் என்று சொன்னால் கொஞ்சம் மதிப்பும் மார்க்கும் அதிகம்.

ஒரு தூய பக்தரின் குமுறலை கேட்போமா?

''என்னைப் போய் பெற்றார்களே அருமையான சற்குணம் பொருந்திய என் தாய் தந்தையர். அதை நினைத்து அழுவேனா?

அறிவே கொஞ்சமும் இல்லாமல் அவதிப்படுகிறேனே அதற்காக ஒரு மூலையில் அமர்ந்து அழுவேனா?

அடே பிரம்மா எதற்காக வேலை மெனக்கெட்டு என்னை படைத்தாய் என்று அழுவேனா?

நிறைவேறாத ஆசை எத்தனையோஎன்னிடம், என் நெஞ்சின் அடிவாரத்தில் இருக்கிறதே, அதற்காக உருகி அழுவேனா?

என் போறாத காலம், நான் செஞ்ச தீவினை, என்று தலையில் அடித்துக்கொண்டு அழுவேனா?

எதுவும் நடக்காதபடி என்னை அலைக்கழிக்கும் நான் செய்த பாப கர்ம வினையை உணர்ந்து அழுவதா, அது என்னை விட்டு விலகி, உன் மூலம் மோக்ஷம் கிடைக்காதா என்று அழுவேனா?

ஏன் ஏன் ஏன் நான் பிறந்தேன் என்றே நினைத்து அழுவேனா? அல்லது இவ்வளவு கெஞ்சியும் நீ வந்து அருள்புரியாதது ஏன் என்று அழுவேனா?

என் வறுமை, என் உடல் உபாதையில் வருந்தி அழுவேனா?

ஐயோ இதுபோல் இன்னும் எத்தனை பிறவி வரப்போகிறது என்ற பயத்தில் அழுவேனா?
எனக்கு தெரியவிலையே. நீயே வந்து சொல்லேன்.

ஆடும் சிதம்பரேசா.. வா வந்து சொல்லப்பா. என்னப்பா, பொன்னப்பா.

இனி அவர் இவ்வாறு வருந்தும் கெஞ்சும் பாடாய் சுவை குன்றாமல் அவர் வார்த்தைகளிலேயே படித்து மகிழ்வோம்.

இது நடராஜ பத்தில் 7வது பதிகம். இன்னும் மூன்று நாள் தான் இருக்கிறது இது நிறைவு பெற

''அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்று
உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...