Friday, September 24, 2021

THE TRUTH

 நங்கநல்லூர்  J.K. SIVAN

 
இது ஒரு உண்மை.

கோபு கையில் ஏதோ தமிழ் பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே  கோபமாக ஒருவன் முகம் படம்.  ஏன்? எதற்கு அவனுக்கு  அத்தனை கோபம்?                                       
''நம்மை  ஆளுவதற்கு  இத்தனை பேர் ஆவலாக  துடிக்கிறார்களா?' ஒருத்தரை ஒருவர் கோபமாக வன் சொற்களில்  திட்டிக்கொண்டு, ஏன் இந்த போட்டா போட்டி? நம் மேல் அவ்வளவு அக்கறையா?
' கோபு  பேப்பரை படித்துக்கொண்டே என்னை பார்த்தான்.
நான்  பேப்பரை வாங்கி பார்க்கவோ படிக்கவோ இல்லை.  யாரோ ஒருவன் நம்மை ஐந்து வருஷம் ஆளத் துடிக்கும், போட்டி போடும்  மற்றவனை ஆயிரம் குறைகள் சொல்லி திட்டுவான். அதற்கு இவனும் பதில் சொல்வான்.தினமும் பலகாலமாக பத்திரிகைகளில் பாரம்பரியமாக வரும் விஷயம் தானே.  
எதற்கு இந்த சண்டை பேப்பரில் வருகிறது?
''திட்டுபவனை ஆள  வைத்து  பதில் சொல்பவனை திட்ட வைப்பதற்கு தான். வேறெதற்கு?
''இது ஏன் ?
''இதனால்  நமக்கு  ஒரு பயனும் இல்லை.  எவனோ ஒருவன் மாற்றி மாற்றி நம்மை ஆள்வதற்கு ஆசைப்படுகிறான்.
''நம்மை  ஆளுவதற்கு  என்றால் என்ன அர்த்தம் ?
''உன்னை சாக்கிட்டு எவனோ பிழைக்க ''என்று தான் அனுபவம் சொல்கிறது.  இலை  இல்லாமல் எப்படிடா சாப்பிட முடியும்? சாப்பிட்ட பிறகு இலை எதற்கு? நாம் அப்படி தான்''
அது போகட்டும்  நாய் வாலை  நிமிர்த்த முடியாது.  நாமும் மாற்றி மாற்றி இப்படித்தான் ஆளப்படுவோம். நல்ல ஆள் ஒருவன் நம்மைப்பற்றி  கவலைப்பட  கிடைக்கும் வரை  இந்த ஆட்டம் தொடரும்.

அதை விடுங்கள். ''சத்சங்கம் என்கிறீர்களே அது என்னது? என்றான் என்னிடம் கோபு.  
''சொல்கிறேன் . கேள்.  மனத்தின்  பிரதி பிம்பம் தான்  மனிதன். மனசு தான் மனுசன்.  மனதை நல்வழியில் நல்ல சிந்தனைக்கு தூண்ட  சத் சங்கம் மிகவும் அவசியம்.  சேர்க்கை என்போமே அது.  நல்லவனோடு சேர்ந்தால் நல்ல பழக்கம். தீயவனோடு சேர்ந்தால்  கேட்கவே வேண்டாம்.
இரும்புத் துண்டு  சிறிது நேரம்  காந்தத்தின் பக்கம் இருந்தால்  அதற்கும்  காந்த  சக்தி வந்துவிடும். கொதிக்கும் நீரை  பனிக்கட்டியின் மேல்  ஊற்றினால் பனி உருகி  ரெண்டுமே  சாதாரண குளிர் நீராகிறது.
கதைகளில்   ஒரு  மந்திரக்கல் வருமே  அது எதன் மேல்  பட்டாலும்  அந்த  வஸ்து  பொன்னாகும். இது தான் சத் சங்கம்.  அழுகிய ஒரு  பழம்   இருந்தால்  போதும்  கூடையில்   அத்தனை பழமும்  அழுக ஆரம்பிக்கும்.  இது தீயவர் நட்பு.
மனிதர்களும்  இதற்கெல்லாம் சோடை போனவர்கள் இல்லையே.  ஆங்கிலத்தில்  சொல்வார்களே உன் நண்பனை காட்டு  நீ  யார்  என்று  சொல்கிறேன் என்று  SHOW ME YOUR FRIEND, I  WILL TELL  YOU WHO YOU ARE .  அது  வாஸ்தவமானது.   கூட்டத்தில் ஒரு நல்லவன் இருந்தால்  அனைவரும்  நல்லவனாக  மாற  சான்ஸ் உண்டு.  ரெண்டு  பேர் கொஞ்ச  நாள்  சேர்ந்திருந்தால் ரெண்டு பேர்  குணமும்  ஒன்றாகவே  இருக்க முடிகிறதே.  ரெண்டு பேருமே   இணைபிரியாத நண்பர்கள்  ஆகின்றனர்.

இதற்கு  மூல காரணம் ஒருவன்  விடும் மூச்சு.  பிராணன்.   அது  ஒருவன் மற்றொருவனிடம், மிருகத்தினிடம், பறவையிடம்  பரிமாறிக்கொள்ளும்போது ரெண்டு ப்ராணன்களும்  ஒன்று சேர்கிறது.  இடைவெளியில்  இருக்கும்   ஈதர்  என்பது  உள்ளே இருக்கும் ரெண்டு ப்ராணன்களுக் குள்ளும் பிரதிபலிக்கும் உணர்வுகளை ஒன்று சேர்க்கிறது.  மஞ்சளும் நீலமும்  ஒன்று  சேர்ந்து  பச்சையாகிறது.
 மஞ்சள்  கறுப்போடு  சேரும்போது ப்ரௌனாக  மாறுகிறது.  இதை  எல்லாம்  நன்கு  அறிந்து தான்  நமது முன்னோர்   நல்ல  சகவாசம் வேண்டும்  என்று  கவனமாக  இருந்தார்கள்.  கண்டவர்களோடு சேர,  சேர்ந்து விளையாட கூட   சின்ன வயதில் அனுமதிக்கவில்லை.  ஆரம்பத்தில் சொன்ன சத் சங்கம்  என்பது இது தான்.

மந்தரையின்  சேர்க்கை விடாது  இருந்ததால் கைகேயி  என்ற  உத்தம  பெண்ணின்  குணம்  மந்தரையின் குணமாக  சுலபத்தில் மாறியது. தசரதனையும்  உலுக்கியது.   ராமன்  காட்டுக்கு போனான்.  
சில  ரிஷிகள்   ஆயுர்வேத தவ வலிமையால்  வயதற்று   வாழ்ந்தனர்.   இருக்கும் இடம் விட்டு மலை மீதிலிருந்து இறங்கி  நதியோரம்   ஒரு  கிராமத்தில்  வாழ்ந்தனர். அங்குள்ள அண்டை அசலில் இருந்த   மக்கள் கூட   பழகியதில்  அவர்களும்  மற்றவர்கள் போல்  வயதானவர்களானார்கள் என்று  ஒரு கதை உண்டு.
இதே  போல் நல்ல சகவாசத்தால் ஒருமனிதன்  உயர்ந்த  மெச்சத்தகுந்த குணத்தைப்  பெறுவதும்  நிகழ்கிறது.  
ராமன்  கால்   பட்டதுமே  கல்லாயிருந்த  அஹல்யா  ரிஷி  பத்னியாக மீண்டும்  மாறினாள்.
அர்ஜுனன்  கீதா ஞானம்  பெற்று  ஞானியானது  கிருஷ்ணனோடு  பழகியதால்.  
அசத்தியம்,  அசத் விஷயங்கள் நிரம்பியவர்களின்  சகவாசம்  உடல் உள்ளம்   ரெண்டையுமே பாதிக்கும்.   அழிவுக்கு கையைப் பிடித்து அழைத்து  அல்ல,  இழுத்துக் கொண்டு போகும்.
 
சத்சங்கம்  என்றால்  தாடி மீசை  காவி  ஜடை  கொண்டவர்களோடு  மட்டும்  நட்பு  என்று அர்த்தமில்லை  ஸார் . வேதங்களை,  மந்த்ரங்களை கேட்பது, படிப்பது, அது பற்றி சிந்திப்பது,   தூய எண்ணங்களை  அள்ளித்தரும்  நிகழ்ச்சிகளை  நாடுவது  கூடத்தான்.   நல்ல  புத்தகங்களை  படிப்பதும்   அவற்றில் சிந்தனை கொள்வதும்  சத் சங்கம்  தான்.  சான்றோர் சகவாசத்தால்  உள்ளே  ஒரு  பாசிடிவ் விளைவு  ஆத்மாவில் தோன்றும்.

 தாயே எனக்கு   நல்லோர் நட்பு கிடைக்க  அருள் செய்  என்று  வேண்டுகிறோம்.  இருளிலிருந்து  ஒளிமயத்துக்கு  அழைத்துபோ  (தமஸோமாம் ஜோதிர் கமய;) என்கிறோம் . நாம்  எப்படிப் பட்டவர்கள்  சத்சங்கம் பக்கமா  எதிர்மறையா  என்பதை  நமது செயல்கள்  விளக்கும்.    தர்ம  காரியங்களில்  ஈடுபடுகிறோம், ஆத்ம விஷயங்களில்   நேரம் செல்கிறது,  த்யானம் , ஜபம்,  செய்கிறோம்.   போதை, குடி, நாக்கின்  ருசிக்கு அடிமையாகி   பார்ட்டிகள்  கிடைத்தால்  விடுவதில்லையே  அவற்றைத் தேடிப்போகிறோமா  என்று  கவனித்தால்  விடை கிடைக்கும்.   மற்றவர்  யாரும்  உன்னைப்பார்த்து  '' நீ நல்லவன்''  என்று  சொல்ல எதிர்பார்க்க வேண்டாம்.
''உன்னையே  நீ  எண்ணிப்பார்''  என்கிறோமே  அது  இது தான்.  

''நமக்குள்ளே  ரெண்டு  ஓநாய்கள்  உள்ளன என்று  சொல்வீர்களே  அது என்ன  சிவன் மாமா?  உண்மையிலேயே  ரெண்டு  நமக்குள்ளே  இருக்கா?  என்றான் ஒரு அன்பன். 
''ஆமாம்  கோபு,   ரெண்டுக்கும்  எப்போதும்  கொலை சண்டை நடக்கிறது.  எப்பவுமே  தான்.
முதல்  ஓநாய் ரொம்ப  மோசமானது. அது  தான்  கோவம்,  பொறாமை, பேராசை,  துக்கம்,  திமிர்,  அழுத்தம், பொய்   எல்லாம்  உண்டாக்குகிறது.  மனதை   இதால்  நிரப்புகிறது.  
ரெண்டாவது ஓநாய்  இருக்கிறது பார்,  அது  சாது, நல்லது.  நம்பிக்கை,  அமைதி,  அன்பு,  சந்தோஷம், உண்மை,  தான  தர்மம், தாராளம்,  இதெல்லாம் உண்டாக்கி  மனதையும்  இதயத்தையும்   நிரப்புகிறது.   ஆனால் ரெண்டு ஓநாய்க்கும்  சண்டை.  நான் தான் மனதை  நிரப்புவேன் என்று. ''
''எது   ஸார்  ஜெயிக்கும்?''
''நீ  எதுக்கு  சாப்பாடு  போட்டு  வளர்க்கிறாயோ  அது''


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...