Tuesday, June 18, 2019

SOOR SAGARAM


சூர் ஸாகரம் 
சூர் தாஸ் 
           
                                       14      வசிய  ரஹஸ்யம்...

கண்ணில்லாத சூர் தாஸ், கிருஷ்ணனின் வேணுகானத்தை  எண்ணிப் பார்க்கிறார். காதில் இன்பத்தேனாக வந்து பாய்கிறது. ஓஹோ ஏதோ ஒரு குயில் தான் பாடுகிறதோ? இல்லை போல் இருக்கிறதே. குயிலுக்கு இந்த ரசனை கிடையாதே. அதற்கு குரல் ஒன்று தான் இனிமையாக இருக்கும். மனதை பிழியும் இந்த ரசானுபவம், சகல உயிர்களையும் கட்டிப்போடும் மாய சக்தி கிருஷ்ணன் வாயிலிருந்து ஊதும் புல்லாங்குழலிலிருந்து அன்றோ வருகிறது. கொஞ்சம் கவனிக்கிறார். மேலே மேலே அவரை இன்ப சாகரத்தில் குழலிசை ஆழ்ந்து மூழ்க  வைக்கிறது. கண்ணனின்  உதடுகளிலிருந்து வெளிப்படுவது  அவனது மூச்சுக்கு காற்று ஒன்று தான். அதை  முழுதுமாக வாங்கி இனிமையா காந்த சக்தி மிக்க இசையாக  வெளியே சஞ்சரிக்க செய்வது அவனது குழல். சாதாரண மூங்கில் குழல். உலகிலேயே எளிமையான ஒரு சங்கீத கருவி.

''ஓஹோ, சூர் தாஸின் கவனம் இப்போது க்ரிஷ்ணனிடமிருந்து அவனது புல்லாங்குழல் மேல் படிந்துவிட்டதா? . ஆச்சர்யத்தோடு அதை கேட்கிறார் :

''ஹே எளிய மூங்கில் புல்லாங்குழலே,   நாணல் குழலே,   எனக்கு உன் ரகசியத்தை சொல்கிறாயா? நீ என்ன தவம் செய்தாய், என்ன விரதம் இருந்தாய்? எப்படி உனக்கு இந்த கிருஷ்ணன் வாயோடு தொடர்பு கொள்ள முடிந்தது. எப்படி கிரிதாரியின் அதரங்களில் தங்கி அவனை முத்தமிட்டுக்கொண்டே இருக்க முடிந்தது? எப்படி அந்த சியாமள வண்ணனின், தாமரைக்கண்ணனின் பூரண அன்பும் ஆதரவும் உனக்கு கிடைத்தது? அவன் உடலிலும் நீ, அவன் உள்ளத்திலும் நீ, அவன் அதரத்திலும் நீ.     அவனை நீ இன்றி யோசித்து பார்க்கக்கூட முடியாதே. ஹே   மூங்கில் குழாயே ,  கண்ணனோடு  பிரிக்க முடியாத இந்த தொடர்பு பெற என்ன தவம் செய்தனை சொல்? ஜகத் காரணனை, ஜகத் ரக்ஷகனை நீ எப்படி உன் வசப்படுத்தினாய்? நீ இல்லையேல் அவன் இல்லை எனும் அளவுக்கு எப்படி காலத்தால் அழியாத புகழ் பெற்றாய்?   ஏதோ வசியம் செய்திருக்கிறாய். சீக்கிரம்  வசிய ரஹஸ்யம் என்ன என்று சொல் ?

சூர் தாஸின் அந்த பாடல் இது:
Ri bansi kaun tap tein kiyo
Rahat giridhar mukh hi lagi
Adharan ko ras piyo
Shyam sundar kamal lochan
Tohi tan man diyo
Sur shri gopal bas bhayen
Jagat mein yash liyo

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...