Sunday, September 27, 2020

SVKARAI AGRAHARFAM

 

சரித்திரம்  படைத்த சாம்பவர் வடகரை  - 4     
 J K  SIVAN    

       
   ஸ்ரீ  மதுரவாணி சமேத ஸ்ரீ மூலநாத சுவாமி

சாம்பவர் வடகரை  அக்ரஹாரத்தில் ஹனுமான்  நதியின்  கரையோரம்   வடகிழக்கில் பெரிய கோவில்  என்று உள்ளூரார் அழைக்கும்  ஸ்ரீ மதுரவாணி அம்மன் சமேத   ஸ்ரீமூலநாத ஸ்வாமி சிவன் கோவில் அமைந்துள்ளது. ஜாம்பவான் ஸ்ரீ மூலநாத ஸ்வாமியை வழிபட்ட  புராணக்கதை யுடன் சம்பந்தப்பட்டது.   அதனால் தான் ஊர் பெயர் சாம்பவர் வடகரை  என்று ஏற்கனவே சொன்னது ஞாபகமிருக்கிறதா?

இது ஒரு மிக பழமையான  பாண்டிநாட்டு சிவாலயம்.   1200  ஆண்டுகளுக்கு முந்தையது.   ஸ்தல விருக்ஷம் வில்வம். தீர்த்தம் ஹனுமான் நதி.   சிவாகம ஸம்ப்ரதாய  பூஜைகள்.  வழிபாடு.   இந்த  க்ஷேத்ரத்தின் புராண  பெயர்   விந்தை அல்லது விந்தனூர், சாம்பூர் வடகரை, சதுர் வேதிமங்கலம்  என்பது  புராண த்தில்  காணும்  பெயர்கள்.  

இந்த ஆலயத்தில் ஒரு அதிசயமான  விஷயம்  இருக்கிறது.  தெற்கே  திருவிடைமருதூரில் ஒரு  சோழன் ப்ரஹ்மஹத்தி இருந்து கொண்டு உள்ளே சென்றவர்கள் திரும்பிவரும்போது   பிடித்துக் கொள்ள காத்திருப் பது போல் இங்கேயும்  ஒரு பிரஹ்ம ஹத்தி சிலை, சதியன் தம்பிரான்,என்ற  பெயரோடு இருக்கிறது. அரிகேசரி பராக்கிரம பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க  இங்கே வந்து இந்த  ஆலயத்தில் உள்ள சுயம்பு லிங்கமான  ஸ்ரீ மூலநாத சுவாமியை வணங்கி தோஷம் நீங்க பெற்றான்   என்று வரலாறு.

ஆகவே  திருவிடை மருதூரில் போலவே  இங்கே யும்   உள்ளே வந்த  நுழைவாயில் வழியாக  யாரும்  வெளியே போவதில்லை. போவதற்கு இன்னொரு வாசல் இங்கேயும் இருக்கிறது.  இதற்கென்றே  கருங்கல் சுவற்றை உடைத்து வழி பண்ணி இருக்கிறார்கள்.  

 ராம லக்ஷ்மணர்களால் வழிபடப்பட்ட  சிவன் தான்  சுயம்புவாக நிற்கும்  ஸ்ரீ மூலநாதர்.  அம்பாள் மதுரவாணி எனும் கனிவாய் மொழி அம்மன். சுந்தரர் பதிகம் பாடிய ஸ்தலம்.

இந்த ஸ்தலத்தில் மதுரவாணி அம்பிகை தவம் புரிந்து ஸ்ரீமூலநாத பெருமானை  அடையப்  பெற்றாள்  என்று ஐதீகம்.   காசி முதலான 8 சிவஸ்தலங்களுள் ஒன்றான இந்த ஸ்ரீமூலநாத  க்ஷேத்ரம். சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை வழிபட்டு பலனடைந்தோர்  பலர்.

இந்த கோவில்  விஷயமாக நான் கேள்விப்பட்ட ஒரு கதை சொல்கிறேன் விந்தன் கோட்டை ராஜாவுக்கு தீராத வயிற்று வலி. என்ன செய்தா னோ அவனுக்கு  ப்ரம்மஹத்தி தோஷம் ஒட்டிக் கொண்டது.    ஒவ்வொரு  தரமும் கோவி லில் நுழைந்ததும் வயிற்று   வலி நின்று விடும்.  ஆலயத்தை விட்டு வெளியேறியவுடன் மீண்டும்  வலி  ஆரம்பித்துவிடும்.

ராஜா மூல நாதர் பக்தன்,  சிறந்த சிவ பக்தன்.   ''ஈஸ்வரா நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்'' என்று வேண்டிக்கொண்டான்.

மூலநாதர் அவனுக்கு கனவில் தோன்றி,  ''பக்தா உன்னைப்பிடித்த  ப்ரஹ்ம ஹத்தி தோஷம்  நாளை  விலகும். உன் குதிரைகளை தெற்குப் பக்கமாக அவிழ்த்துவிட்டு விட்டு என்னை வந்து தரிசிக்கலாம். தெற்கு வாசல்  நிலையை  இடித்து வெளியேறும் வாசல் செய்து கொள்.  அதன் வழியாக  வெளியேறு '' என்கிறார் மூலநாதர்.
அவ்வாறே  செய்து  ராஜா  ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி தெற்குவாசல் வழியாக வெளியேறி விட்டான்.

காத்திருந்த பிரஹ்ம ஹத்தி  மூலநாதரை  வேண்டிக்கொண்டு   ''பகவனீ, தோஷம் உள்ள விந்தன் கோட்டை  ராஜாவை நான் எப்படி பிடித்துக் கொள்வது ?'' என்று கேட்டதாம் ..

''ராஜாவின் தோஷம் நிவர்த்தி ஆகி  விட்டது.  இனி நீ அவனை நெருங்க முடியாது.  அது மட்டும் அல்ல, இனி நீ எங்கும் செல்ல முடியாது.  என் ஆலய வாசலில் நீ   சதியன் தம்பிரான்  என்ற  நாமகரணத்தோடு  ஒரு தனி சந்நிதியோடு இனிமேல்  இருக்கப்போகிறாய்.  முதல் பூஜை உனக்கு தான். அப்புறம் தான்  எனக்கு '' என்று அருளினார் ஈஸ்வரன்  மூலநாதர்.  
 
இந்த கோவில்  கிராமங்கள் பகுதியெல்லாம்  ஒரு காலத்தில் திருவாங்கூர்  சமஸ்தானத்தை சேர்ந்தி ருந்ததால் மலையாள பெயர்கள்,  மொழி, பேச்சு, எல்லாம் இன்னும் கூட  வழக்கத்தில் கலந்து இருக்கிறது.  இந்த கோவில் ஒன்றில் தான்  ப்ரஹ்மஹத்திக்கு பூஜை, தோஷம் விலக பிரார்த்தனை எல்லாம்.

 நோய்   நீங்கி,தோஷம்  நீங்கிய விந்தன் கோட்டை ராஜா, கோவிலை புனருத்தாரணம் செய்து பெரிதாக   கட்டினான்.   ப்ராஹ்மண குடும்பங்களை கொண்டு வந்து பூஜை நித்ய அனுஷ்டானங்கள் இன்றும் சிறப்புற நடந்து வருகிறது.  

இன்னொரு விஷயம் .  சாம்பவர் வடகரை  மூலநாதர் கோவிலில்  நடராஜாவுக்கு  முன்னும் பின்னும்  முகங்கள்.  இந்த பக்கத்தில்  பௌத் தர்கள் நடமாட்டம் அந்த  காலத்தில் இருந்தி ருக்கிறது  என்பதை  மூல  நாதர் ஆலயத்தின் முன்புறத்தில் உள்ள  ஒரு புத்தர்  சிலை இருந்த தில் தெரிகிறது. அந்த புத்தர்  சிலை  தற்போது  ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளது.  

சாம்பவர் வடகரை கிராமம்  முதலில் விந்தன் கோட்டை பகுதியில் தான் இருந்தது. இன்றும் அங்கே கல்வெட்டு இருக்கிறது.

ஒரு காலத்தில்  இந்த  விந்தன் கோட்டை பகுதியில் வாழ்ந்த மக்கள்  குடும்பங்களோடு இப்போது  இருக்கும் அதே பெயர் கொண்ட சாம்பவர் அக்ரஹாரத்தில்  குடியேறினார்கள்.  அவர்கள் சுபிக்ஷமாக  வாழ, கிராமங்களை மானியமாக  கொடுத்தான் விந்தன் கோட்டை மஹாராஜா.இப்போதுள்ள சாம்பவர் வடகரை  அக்ரஹாரம் இப்படித்தான்  தோன்றியது.   முதலில் தெற்கு அக்ரஹாரம் உருவாகி  அதில் வேத பண்டிதர்கள் சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் குடும்பமாக  குடியேறினார்கள்.

 நூறு  நூற்றிருபது  வருஷங்களுக்கு  முன்பு சங்கராண்டி தீக்ஷிதர்  அங்கே  யாகம் பண்ணினார் என்று   கேள்வி.    ஏற்கனவே சொன்னதுபோல் இந்த  கிராமம்   கேரள திருவாங்கூர்  சமஸ்தான ஆட்சிக்குட் பட்டிருந்ததால்  பழக்கவழக்கங்கள், பேச்சு எல்லாமே  மலையாளம்  கொஞ்சம் கலந்த தமிழ்.

கோவில் அர்ச்சகர்கள், வேலையாட்களுக்கு   திருவாங்கூர் ராஜா சமஸ்தானம்  மானியமாக நிலம் வழங்கி  தேவைக்கு மேற்பட்ட வருமானத்தோடு  சுகமாக வாழ்ந்தார்கள். 

தினமும்  திருவாங்கூர்  சமஸ்தான ராஜாவுக்கு   மாலை  7   மணிக்கு  லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை, பாடல்கள்.   சித்திரை திருவிழாவில்  9 நாளும்  கோலாகலம்.  தேர்  நிலைக்கு திரும்பின பிறகு தான் ராஜா சாப்பிடுவான்.  இந்த பகுதி தமிழக ஆட்சி கட்டுப்பாட்டில் வ







ந்ததும்  இது  அனைத்தும்  நின்று போய்விட்டது.
 
சுவாமி திருமண  கோலத்தில் காட்சி தருவதால் திருமணத்தடை தோஷம் நிவர்த்தி    கடன்   தொல்லை,வியாதி போன்றவை நீங்க மூல நாதரை  வழிபடும்  பக்தர்கள் உள்ளூரிலும் வெளியூர்களிலும்  அதிகம்.  காரிய சித்திக்கு   பிரசித்தமான   புராதன ஆலயம். ஆலயத்தில் மொத்தம் 3 வாசல்கள்  உள்ளது.  அதில் ஸ்வாமிக்கு ஒன்றும் அம்பாளுக்கு ஒன்றும் மற்றொன்று இந்த அரிகேசரி பராக்கிரம பாண்டியனுக்கு (பிரம்மஹத்தி தோஷம் தோஷம்  நீங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது.  பிரகாரத்தில் ஒரு லிங்கம் உள்ளது.  வில்வலிங்கம் எனப்  பெயர்.  .
 கேரளாவின் நுழைவு வாயிலாக சாம்பவர்  வடகரை கிராமம்  1951 -ம் ஆண்டு நவம்பர் 1 -ம் தேதி வரை விளங்கியது.  இதற்கு ஆதாரமாக   இன்னும் கேரளாவின் சின்னமான சங்கு முத்திரை ஆலயத்தில் உள்ளது.      இந்த  ஆலயத்தில் சுரங்கப்பாதை  இருக்கிறது என்கிறார்கள்.  மூலநாதர்  ஆலயத்தில் இருந்து  விந்தன் கோட்டை ஆலயத்திற்கு அது சுரங்கப்பாதை.  ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி  அன்று தேரோட்டம்.

சிறப்பு திருவிழாக்கள்:சித்ரா பௌர்ணமி ,சித்திரை விசு,, நவராத்திரி, ஐப்பசி விசு, திருக் கல்யாணம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை

 நித்திய 3 கால பூஜை விவரங்கள்
  காலை:06:00-10.00am
   சாயரட்சை:06:00pm

   அர்த்தஜாமம்:08:00pm  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...