Monday, September 28, 2020

GEETHANJALI



கீதாஞ்சலி 55     J K  SIVAN 
தாகூர் 

                          55. பாதையின் முடிவில் பரமா!

55  LANGUOR is upon your heart and the slumber is still on your eyes.

Has not the word come to you that the flower is reigning in splendour among thorns? 

Wake, oh awaken! Let not the time pass in vain!
At the end of the stony path, in the country of virgin solitude my friend is sitting all alone.
 
Deceive him not. Wake, oh awaken!
What if the sky pants and trembles with the heat of the midday sun
What if the burning sand spreads its mantle of thirst-
Is there no joy in the deep of your heart? 
At every footfall of yours, will not the harp of the road break out in sweet music of pain?

ஒன்றுமே  தோன்றாத, அசையாத, பேசாமல்   உணர்வு ஒன்றுமே  இல்லாமல் கிடக்கும் மரக்கட்டை  இதயமாக  
 இருக்கட்டும், 
 ஆழ்ந்த தூக்கம் கண்களை விட்டு  அகலாமல் ஒரு அரை மயக்க சக்தியற்ற நிலையில்  இருக்கட்டுமே. 
எங்கு பார்த்தாலும் கூரான முள் இலையோடு இருந்தாலும்  கவலையே இல்லாமல்  மலர்ந்து ஆட்சி புரியும்  மென்மையான மலரைப் பற்றி அறிந்ததுண்டா?

விழித்துக்கொள், படுக்கையும் விட்டு ஏழு.  நேரம்  வீணாக  செலவழிய வேண்டாம்.

என் நண்பன் கிருஷ்ணனை உனக்கு தெரியுமா?இந்த  கடினமான  கூரிய  கற்கள் நிரம்பியக  நடக்கமுடியாத பாதையில்,  எவரும்  இல்லாத, பாழ்படுத்தப்படாத தனிமையான,  அமைதியான,  ஊரில் கிருஷ்ணன் எவருமின்றி உட்கார்ந்திருக்கிறான்.   அவனை ஏமாற்றாதே.  எழுந்திரு   விழித்துக் கொள் . 
கொளுத்தும்  உச்சி வேளை   சூரியனின் கருணையில்லாத  உஷ்ணத்தில்  ஆகாசம் திணறுகிறது. பெருமூச்சு விடுகிறது. நடுங்குகிறது.  எங்கும் சுடு மணல்.  ஆவி பறக்கிறது. தாகத்தை கிளப்பிவிடுகிறது.

உன் இதயத்தின் ஆழத்தை சோதித்து, தொட்டுப்பார்   கொஞ்சமாவது  சந்தோஷம் இருக்கிறதா  பார்.கட்டாயம் சந்தோஷம், ஆனந்தம் அதில் நிரம்பி இருக்கவேண்டுமே. தேடு. 
உன் ஒவ்வொரு காலடி வைக்கும்  ஓசையிலும், எனக்கு கேட்பது  கூரிய  கல் பாதையில்  எதிரொலிக்கும்  துன்ப கீதம், துயர சங்கீதம்.  வேறென்ன சொல்வது?.  என்று  இந்த கொடிய  வாழ்க்கைப்பாதையில் இருந்து விடுபடுவது. 

கிருஷ்ணா  அதோ அங்கே   பாதை முடிவில்  தனியாக என்னை எதிர்நோக்கி அமர்ந்திருக்கும் உன்னை என்று அடைவது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...