Saturday, September 5, 2020

GEETANJALI

 

கீதாஞ்சலி  43      J K   SIVAN 

தாகூர்                                        
 
                                                                
                     43.  கருணா சாகரா   வா 


43 The day was when I did not keep myself in readiness for thee; 
and entering my heart unbidden even as one of the common crowd, unknown to me, 
my king, thou didst press the signet of eternity upon many a fleeting moment of my life.
And today when by chance I light upon them and see thy signature,
I find they have lain scattered in the dust mixed with the memory of joys
 and sorrows of my trivial days forgotten.
Thou didst not turn in contempt from my childish play among dust, 
and the steps that I heard in my playroom are the same that are echoing from star to star.

கிருஷ்ணா, நீ எப்போது வருவாய் என்று தெரியாதே. நான் தயாராகவில்லையே .
 அழைக்காமலே வருபவன், சொல்லாமலே வந்து நிற்பவன் நீ. முன் பின் அறியாத ஏதோ வெளியூரான் போல, என் ராஜா, கிருஷ்ணா, நீ என் மாறி மாறி தோன்றும் எண்ணற்ற கணங்களில் உன் அழிவற்ற அன்பின் முத்திரையை என் மீது பதிவிடுபவன்.. 

ரொம்ப  ஆச்சர்யம்  கிருஷ்ணா.   இன்று   அதிர்ஷ்டவசமாக  நான் உன்  அன்பின் அடையாளத்தை  என் எண்ணங்களில் தேடினேன்.
அடப்பாவி எவ்வளவு முட்டாள்  நான்.   உன் அருமையான  தூய கருணையை   குப்பை குப்பையான என்  இன்ப துன்ப எண்ண  புழுதியில்  கலக்கும்படி விட்டுவிட்டேன் என்று தெரிந்தது.

நீ எங்கே  நான்  எங்கே?   துளியும்  என் செயலுக்காக  என் மீது நீ அருவருப்பைக் காட்டவில் லையே.
 எங்கும் பரவி இருப்பவனாயிற்றே.   சிறு குழந்தை அப்படி தான் நல்ல பொருளைக் கொடுத்தால்    அதன் அருமை பெருமை தெரியாமல் டப்பென்று  தூக்கி எறிந்து  உடைக்கும் என்று பெரும்போக்காக  என்னை  அரவணைத்தவன்.
என் குடிசையில் உன் காலடி சத்தம் கேட்கிறது கண்ணா,  நீ   பெரிய  மாட  மாளிகை, புழுதி மிகுந்த குடிசை ரெண்டுமே ஒன்றாக  கருதுபவன்.   என் சுக துக்க கணங்களில் நான் உழல்பவன் .நான்  சிறுவன், புழுதியில் புரண்டு விளையாடுபவன். நீ என்னை புறக்கணிக்கமாட்டாய்.    அடடா,   நீ  என்னை நெருங்கி வரும் காலடி சப்தம், ஆகாயத்தில் ஒரு நக்ஷத்ர மண்டலத்திலிருந்து இன்னொன்றுக்கு நீ நகரும் எதிரொலியோ?


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...