Tuesday, September 15, 2020

 

கீதாஞ்சலி    46              J K   SIVAN                                                                                                  தாகூர் 


                                      46     அருகில் வாராய்  கண்ணா                                         

46.  I know not from what distant time thou art ever coming nearer to meet me.Thy sun and stars can never keep thee hidden from me for aye.

In many a morning and eve thy footsteps have been heard and thy messenger has come within my heart and called me in secret.

I know not only why today my life is all astir, and a feeling of tremulous joy is passing through my heart.

It is as if the time were come to wind up my work, andI feel in the air a faint smell of thy sweet presence.

கிருஷ்ணா, நீ எங்கோ  வெகுதூரத்தில் இருப்பவன் என்று மட்டும் தெரியும். எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால்  நீ  கிட்டேயும் இருப்பவன் என்று புரிவதில்லை. ஆகவே   எந்த நேரம் என் அருகில் நீ வருவாய் என நான் அறியேன். நீ படைத்த சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் உன்னை  நான் பார்க்கவிடாமல் தடுக்க முயன்றாலும் நான் விடமாட்டேன்.  ஆமடா,  என் கண்ணில் நீ படாமல் போக முடியாது. 

எத்தனையோ காலை  வேளைகளிலும், சாயந்திரங்களிலும் நீ வரும் காலடி சத்தம் என் காதில்  கேட்டிருக்கிறேன். நீ அனுப்பிய ஆள் என் மனக்கதவை தட்டி உள்ளே புகுந்து ரகசியமாக என்னை கூப்பிட்டதுண்டு. 

அனால்  இன்று   ஏனோ என் மனது அளவுகடந்த குதூகலத்தில் ஆடுகிறது.  ஒரு படபடப்பு  நடுக்கம்  இன்றுமட்டும்  ஏன்? எங்கோ ஆகாயத்தில் பறப்பது போல் ஆனந்தத்தில் ஆடுகிறேன்! எங்கும் எதுவுமே சந்தோஷமாக தான் கண்ணில் படுகிறது. என் இதயம் மகிச்சியில் பெருத்து விட்டது.

ஒருவேளை  என் காரியங்கள் எல்லாம் முடிந்து விட்டதோ? என்னை சுற்றிலும் வீசும்  காற்றில் உன் மீதிருந்து பரவும்  சுகந்தம் மெலிதாக மணக்கிறது. ஆம்  எனக்கு  புரிந்துவிட்டது.  இன்று  நீ என்  அருகில் வந்துவிட்டாய் கண்ணா!


 கண்ணனை அருகில் இருப்பவன் கூடவே உள்ளவன்  என்று புரிந்துகொண்டுவிட்டால்  அவன்  வெகு தூரத்தில் எப்போதுமே இல்லை. என்னுள்ளே  எப்போதும் என்னுடனே வாழ்பவனை நாம் அறிந்துகொள்ளாவிட்டால் தவறு அவனுடையதில்லை. 


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...