Friday, January 5, 2018

ADVICE


  சின்ன சின்ன விஷயங்கள் ​   ஜே.கே. சிவன்


​ ​

நாம் எப்படிப்பட்டவர்கள் என்று தீர்மானிக்க வேண்டுமானால் இந்த கதையை படித்துவிட்டு  அந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செ
ய்திருப்பீர்கள் என்று யோசித்தால் போதும்.

குப்புசாமிக்கு வழி தெரியவில்லை.  பெரிய பாலைவனத்தில் நடந்தவன் கிழக்கு மேற்கு தெரியாத வெட்டவெளியில் சுடும் வெயில் கிழிந்த செருப்போடு மாட்டிக்கொண்டான்.  வெயில் சுட்டெரிக்கும்போது தாகம் வராதா? கிருஷ்ணா கிருஷ்ணா என்று அம்மாவை நினைத்துக்கொண்டான். அவன் அம்மா ''டேய்  குப்பு எப்போ எல்லாம் உனக்கு கஷ்டம்னு  தோணுதோ அப்போ கிருஷ்ணா கிருஷ்ணான்னு சொல்லு. கூப்புடு.  ஹெல்ப் பண்ணுவான்''  என்று சொல்லியிருந்தாளே .

விடாது அப்படி சொல்லிக்கொண்டே  கிழிந்த செருப்போடு நடந்த குப்புவின் கண்ணில் ஒரு பழைய சின்ன வீடு கண்ணில் பட மெதுவாக அங்கே போய் சேர்ந்தான். ஜன்னலில்லாத, கதவில்லாத, யாருமில்லாத ஒரு ஓட்டு வீடு. பின் வாசலில் ஒரு தண்ணீர் பம்ப்.

​   ​
தெருவில் பெண்கள் கெட்டவார்த்தையில் ஒருவரை திட்டிக்கொண்டு சண்டைபோட்டுக்கொண்டு  தண்ணீர் பிடிக்க  கையால் அடிப்பார்களே அது போல ஒன்று.
 பக்கத்திலேயே  சின்ன  ஆழமான குட்டி கிணறுபாதாளத்தில்  தண்ணீர் கண்ணில் பட்டு முகம் தெரிந்தது.   தெய்வத்தை நேரில் பார்த்தது போல் இரு

​​
ந்தது குப்புவுக்கு.

லொட்டு லொட்டு என்று கைப்பிடியை இழுத்து பம்ப்  அடித்தான். குழாய் ஏப்பம் விட்டது.

தண்ணீர் மட்டும் வரவில்லை.  சக்தி ஏற்கனவே குறைந்து தாகத்தில்

​ தவிக்கையில் ...

அட  இது கண்ணில் படாமல் போனதே என்று  ஓரமாக இருந்த ஒரு சொம்பை பார்த்தான். அதில் நீர்.  மேலே  ஒரு தகர  தட்டு. அதில் ஏதோ எழுதியிருந்தது.

''இந்த சொம்பில் உள்ள நீரை குழாயில் ஊற்றி பம்ப்அடி . தண்ணீர் வரும். மறக்காமல் போகும் முன்பு  மீண்டும் சொம்பை நீரால் நிரப்பி வை.''

குப்பு என்ன செய்தான். தாகத்தில் தவிக்கும்போது இருக்கும் சொம்பு நீரை குடித்துவிட்டு கிளம்பினானா? குழாயில் கொட்டி பம்ப் அடித்து அதில் நீர் வந்து குடித்துவிட்டு மீண்டும்  சொம்பை நிரப்பினானா?

குப்பு  கெட்டிக்காரன்.  தன்னைப் போல் இனி வரும் எவனும் கஷ்டப்படக்கூடாது என்று தகரம் சொன்னபடியே சொம்பு  நீரை குழாயில் கொட்டி பம்ப் அடித்து நீர் வந்து குடித்து விட்டு சொம்பை மீண்டும் நிரப்பியதோடு அல்லாமல்  ஒரு வரி தகரத்தில் எழுதிவைத்தான்.  ''தாராளமாக சொம்பை காலி பண்ணலாம். நம்பலாம். குழாய் வேலை செய்கிறது '

''உபயோகித்தபின் மறக்காமல் தண்ணீர் ஊற்றவும்'' என்று ரயிலில் கழிவறையில் படித்தும் நீர் ஊற்றாத  மெத்த படித்தவர்களாயிற்றே நாம். கழிவறையை அடுத்த பெட்டியில் துர்நாற்றத்தோடு  பிரயாணம் பண்ண தயங்கமாட்டோமே. ''துப்பாதே, குப்பை போடாதே, பூ பறிக்காதே''  என்றெல்லாம் படிப்போம், அர்த்தம் மட்டும் புரியாதே.   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...