Sunday, January 28, 2018

ADITYA HRUDHAYAM

சூரியா, இதோ என் நமஸ்காரம் - 1 J.K. SIVAN

ராமன் மனிதனாக அவதரித்தான். பராக்கிரமம் மிகுந்த அரக்கன் ராவணனை வதம் செய்ய முனைந்தான். அந்த நேரத்தில் அகஸ்திய மகரிஷி ராமனை சந்திக்கிறார். ராமனுக்கு சூரியனின் அனுக்ரஹம் கிடைக்க மந்திரம் உபதேசிக்கிறார். விஞ்ஞான காலத்தில் நாம் வாழ்கிறோம். சூரிய ஒளியின் மஹத்வம் நமக்கு தெரியும். அதுவே ஜீவாதார சக்தி என்று புரியும். அதை உணர்வதற்காகவாவது இதை படிப்போம். அகஸ்தியர் கூறும் மந்திரத்தின் பொருள் அறிவோம். ராமன் அதால் பயன் பெற்றதைப் போல் நாமும் தினமும் இதை உச்சரித்து பயனடைய ஒரு காசும் செலவில்லை.

இந்த மந்திரம் பற்றிய சில விவரங்கள்: அகஸ்தியர் இதற்கு ரிஷி. ஸ்வரம்: அனுஷ்டுப் (சந்தஸ் ) தெய்வம்: சூரியநாராயணன் ஆதித்யனின் ஹ்ருதயத்தில் இருப்பவன். அவனே ராமன் அவனே நாராயணன் அவனே எல்லாம். பரம்பொருள்.

atha dyanam:
jayathu jayathu soorya saptha lokaika deepam
kirana samitha papam klesa dukhasya nasam
aruna nigama gamyam chadhi adithya moorthim
sakala bhuvana vandhyam, bhaskaram tham namami

ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமிதா பாபக்லேஷ துக்கசஸ்ய நாஸ
ம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||

ஸ்ரீ ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். ஏழு உலகங்களுக்கும் (பூலோகம், புவர் லோகம், ஸ்வர் லோகம், மஹர லோகம், ஜனர் லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம்) நீ ஒளியேற்றும் விளக்காக இருக்கிறாய். உன்னிடமிருந்து பரவும் ஒளிக்கதிர்கள் துக்கங்களையும் கவலைகளையும் போக்கும். உனது கிரணங்கள் எம்மை ஆட்கொள்கின்றன. நீயே முதல்வன். முதன்மையானவன். ஸகல உலகங்களும் உனை வணங்கும். ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

''சூரிய பகவானே. உனக்கு ஜெயம், ஜெயம், ஜெயம். இந்த ஏழுலகின் ஒளி விளக்கு. தீபம் நீயே. உன்னுடைய கதிர்கள் படும் இடம் எல்லாம் சகல பாபங்களும் தொலையும். வலி தீரும். துயரம் துன்பம் எல்லாமே காணாமல் போகும், வேதங்கள் உன்னை அடைய வழிகாட்டும். இந்த பிரபஞ்சத்திற்கு நீ ஒருவனே தேவன் சூரியநாராயணன். சர்வலோகமும் உன்னை வழிபடுகிறதே ஆதித்ய. சூர்ய நாராயணா. என்னுடைய நமஸ்காரங்களையும் அவற்றோடு சேர்த்து உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன். சூரிய நமஸ்காரம். எனது நாள் உன்னருளால் இன்று நன்றாக துவங்கட்டும்.

ततो युद्धपरिश्रान्तं समरे चिन्तया स्थितम्।
रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम्॥

Tato yuddhapariśrāntaṃ samare chintayā sthitam
rāvaṇaṃ jāgrato dṛṣṭvā yuddhāya samupasthitam

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்த்தயா ஸ்திதம் |
ராவணம் ச்சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்த்திதம் || 1 ||

२. दैवतैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम्।
उपागम्याब्रवीद्राममगस्त्यो भगवान् ऋषिः॥

2. Daivataiśca samāgamya draṣṭumabhyāgato raṇam
upāgamyābravīdrāmamagastyo bhagavān ṛṣiḥ

தெய்வ தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: || 2 ||

ராவணசுர யுத்தம் முடிவுறும் தருவாயில், ராமனுக்கு சோர்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில், ராவணாசுரன் வல்லமை படைத்தவனாக தென்பட்டான். இந்த மகத்தான யுத்தத்துக்கு. ராம ராவண யுத்தத்திற்கு எல்லா தேவதைகளும் சாட்சியாக வந்திருக்கிறார்கள். ராமனின் பராக்கிரமம் காண வந்துள்ளார்கள். இதோ அகஸ்தியரும் வந்திருக்கிறாரே.
போர்க்களத்தின் வாயிலிலே, அகஸ்த்ய முனிவர், ராமபிரானை சந்தித்தார். அவரது சோர்ந்த நிலையைக் கண்டு பின்வருமாறு கூறினார். ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் இழந்து கொண்டே வந்த ராவணன் கவலையோடு களைப்போடு நிற்கிறான் . ராமனின் எதிரே வாழ்வா சாவா போராட்டத்தில் தயாராக உள்ளான்

राम राम महाबाहो शृणु गुह्यं सनातनम् ।
येन सर्वानरीन् वत्स समरे विजयिष्यसि ॥ 3 ॥
Rama rama maha baho srunu guhyam sanathanam
yena sarvaanareen vatsa samare vijayishyasi

''அப்பா என் மகனே ராமா, கண்ணே, இதைக் கேளடா. எது பரம ரஹஸ்யமோ, சாஸ்வதமோ, அதைச் சொல்கிறேன், உச்சரிப்பாயாக. உனக்கு இதனால் வெற்றி நிச்சயம்'' என்கிறார் அகஸ்தியர் வாத்சல்யத்தோடு. ராமனிடம் யாருக்கு தான் வாத்சல்யம் இல்லை.

आदित्य हृदयं पुण्यं सर्वशत्रु विनाशनम् ।
जयावहं जपेन्नित्यम् अक्षय्यं परमं शिवम् ॥ 4 ॥

adithya hrudayam punyam sarva sathru vinasanam
jayavaham japen nithyam akshayyam paramam shubham

இந்த ஸ்லோகம் எல்லோரும் அறிந்தது. பரம சந்தோஷத்தை அளிக்கும் மந்திரம். இதற்கு தான் ஆதித்ய ஹ்ருதயத்தில் முக்ய ஸ்தானம். இந்த ஆதித்யனின் ஹ்ருதயத்தில் உள்ள சூர்யநாராயணனை எவர் மனம் கனிந்து வேண்டினாலும் அவர்களைப் போல் வெற்றிசாலி வேறெவரும் இல்லை. சாஸ்வதமான காரண்டீயான உண்மை இது.

सर्वमङ्गल माङ्गल्यं सर्व पाप प्रणाशनम् ।
चिन्ताशोक प्रशमनम् आयुर्वर्धन मुत्तमम् ॥ 5 ॥

sarva mangala mangalyam sarva papa pranasanam
chinthasoka prasamanam ayur vardhanamuthamam

இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்கிற ஸ்லோகமானது எல்லாவிதமான 'கொடிய பாபங்களையும் அழித்திடும். துக்கம், துயரம், துன்பம் எல்லாவற்றிற்கும் கைகண்ட நிவாரணி. நமது மருந்துகள் உப விளைவுகள்(SIDE EFFECTS ) ஏற்படுத்தும். தலைவலிக்கு மருந்து சாப்பிட்டால் வயிற்று வலியை கிளப்பும். முதுகு வலிக்கு மருந்து விழுங்கினால் உடலெல்லாம் சொறி போல் அரிக்கும். புண்ணாகும். சிலருக்கு மார்பில் வலி ஆரம்பிக்கும். விஷம் அதெல்லாம். இந்த மருந்து அப்படியல்ல. நூறு ஆண்டுகளையும் தருவது. ஒரு போனஸ்.

रश्मिमन्तं समुद्यन्तं देवासुर नमस्कृतम् ।
पूजयस्व विवस्वन्तं भास्करं भुवनेश्वरम् ॥ 6 ॥

rasmi mantham samudhyantham devasura namaskrutham
poojayaswa vivaswantham bhaskaram bhuvaneshwaram

' இதோ பார் ராமா, சூரியனை பிரார்த்தனை செய்துகொள். அவன் தான் உலகமெல்லாம் பரவி நிற்கும் சூரிய காந்தி, ஒளிக்கதிரின், சொந்தக்காரன். கீழேயிருந்து, கடலோ மலையோ, நிலமோ மேலே மெதுவாக தினமும் எழுகிறான். அவனை தேவர்கள் அசுரர்கள் எவருமே அன்றாடம் வணங்குகிறார்கள். பிரபஞ்சமே தொழும் தேவன் அந்த சூர்யநாராயணன். ஆதித்யன்.

सर्वदेवात्मको ह्येष तेजस्वी रश्मिभावनः ।
एष देवासुर गणान् लोकान् पाति गभस्तिभिः ॥ 7 ॥

sarva devathmako hyesha tejaswai rasmi bhavana
esha devasura ganan lokan pathi gabasthibhi

இந்த சூரியனை ஏதோ ஒருவன் என்று நினைத்து விடாதே. அவனுள் தான் முப்பது முக்கோடி தேவர்களும் ஐக்கியம். ஒளிக்கு ஒளி கொடுப்பவன். இந்த பிரபஞ்சத்தை தனது ஒளிக்கதிர்களால் வியாபித்து ஆள்பவன். தேவர்கள் அசுரர்கள் அனைவருக்கும் உலகிற்கும் அவனே ஜீவாதாரமானவன்.

एष ब्रह्मा च विष्णुश्च शिवः स्कन्दः प्रजापतिः ।
महेन्द्रो धनदः कालो यमः सोमो ह्यपां पतिः ॥ 8 ॥

esha brahma cha vishnuscha shiva skanda prajapathi
mahendro dhandha kalo yama somo hyapam pathi

ஆதித்ய நாராயணன் யார்? அவனே பிரம்மா. அவனே விஷ்ணு. அவனே சிவன். அவனே ஸ்கந்தன். அவன் தான் உலக மனித உயிர்களுக்கு மூல காரணன். தேவராஜன். அவனையே குபேரன் என்கிறோம். சகல சம்பத்துக்கும் அதிபதி. அவன் காலன். யமன். வாழ்விக்கறவன் போலவே சம்ஹரிக்கிறவனும் கூட. குளிர்ந்த நிலவு, சந்திரனும் அவனே. தாரையாக பொழியும் மழைக்கதிபதி வருணனும் அவனே.

पितरो वसवः साध्या ह्यश्विनौ मरुतो मनुः ।
वायुर्वह्निः प्रजाप्राणः ऋतुकर्ता प्रभाकरः ॥ 9 ॥

pitharo vasava sadhya hyaswinou marutho manu
vayur vahni praja prana ruthu hartha prabhakara

ஆதித்யன் தான் பித்ரு தேவன். அஷ்ட வசுக்களும் அவன் பிம்பங்களே. சாத்யாவும் அவனே. அஸ்வினி தேவதைகளும் அவன் ஸ்வரூபமே. வாயுவானவனும் அவனே. ஆதித்யன் அக்னி தேவனும் கூட. சகல ஜீவராசிகளின் உயிர் அவன். ஆத்மாவும் அவன் தானே. காலங்களை உருவாக்குகிறவன் அவன் தான். பிரகாசிப்பவன் அவனே. அவனைப் பற்றி போற்றி பாடுவது தான் ஆதித்ய ஹ்ருதயம். மேற்கொண்டு போற்றுவோம்......

.. (தொடரும். மீதி நாளைக்கு )




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...