Wednesday, January 31, 2018

ADITYA HRIDHAYAM 3

சூரியா உனக்கு நமஸ்காரம் 3 J.K. SIVAN
ADITYA HRIDHAYAM SLOKAS
आदित्यः सविता सूर्यः खगः पूषा गभस्तिमान्।
सुवर्णसदृशो भानुर्हिरण्यरेता दिवाकरः॥
adithya savitha soorya khaga poosha gabasthiman
suvarna sadhrusho baanuhiranyaretha thivakara:
ஆதித்ய சவிதா சூர்யா காக பூஷா கபஸ்திதான்
சுவர்ண ஸத்ருசோ பானு: ஹிரண்யரேதா திவாகர: || 10 ||
ஹே சூர்ய நாராயணா. நீ அதிதி புத்திரன். அதனால் உன்னை ஆதித்யன் என்று வணங்குகிறோம். லோக சிருஷ்டிகர்த்தா. எங்கள் ஒவ்வொரு செயலும் உன்னால். உன்செயலால் அன்றி எது ஆகும்? வானவெளியில் வலம் வருபவன். நீ இன்றி மழை ஏது. மழை இன்றி உலகேது? தங்க ஒளி படைத்த கதிரவனே, பொன்வண்ணனே , பிரகாசமே, திவாகரா, தினகரா, உன்னால் தானே தினங்களே உருவாகிறது.
हरिदश्वः सहस्रार्चिः सप्तसप्तिर्मरीचिमान्।
तिमिरोन्मथनः शम्भुस्त्वष्टा मार्ताण्ड अंशुमान्॥
'haridaswa sahasrarchi saptha sapthir mareechiman
thimironmadhana shambhu thwashtwa marthanda amsuman
ஹரித்ஸ்வ: ஸஹஸ்ரார்ச்சி: சப்த சப்தி: மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்புஸ்த்வஷ்ட மார்த்தாண்ட அம்ஷுமான் || 11 ||
சூரிய தேவா, உனது ரதத்தில் பூட்டிய பச்சை நிற ஏழு குதிரைகளுடன், ஆயிர ஒளி கிரணங்களுடன் இருளை விரட்டுபவனே, ஆனந்தமய வாழ்வு உன்னால் தானே சூரியநாராயணா, ஜனன மரண காரணா, சொல்லொணா புகழ் மிக்கவனே, உனக்கு நமஸ்காரம்.
hiranya garbha shisira thapano bhaskaro ravi
agni garbha adithe puthra sanka shisira nasana
ஹிரண்ய கர்ப்ப ஷிஷிரஸ்தாபனோ பாஸ்கரோ ரவி: |
அக்னி கர்ப்போ திதே புத்ர: ஷன்க: ஷிஷிர நாஷன: || 12 ||
ஸூர்ய பகவான் சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர். கடுங்குளிரை அகற்றுபவர். நெருப்பே உருவானவர். தீய எண்ணங்களையும் தீமைகளையும் அகற்றுபவர்.ஹிரண்ய கர்பா, உள்ளும் புறமும் சுவர்ண பிம்ப மயமானவனே, மனக் கிலேசம் எல்லாம் நீக்குபவனே, உஷ்ணத்தை அளித்தாலும் அதிலிருந்து தாபத்தை அகற்றுபவனே, ஒளி ஊட்டுபவனே, எல்லோராலும் விரும்பி போற்றப்படுபவனே, இணையற்ற அக்னியை தன்னுள் கொண்டவனே, அதிதியின் புத்ரனே, விருப்பமுடன் ஆகயமார்கமாக பிரயாணிப்பவனே, பனி,குளிர் ஆகியவற்றை நாசம் செய்பவனே, உனக்கு நமஸ்காரம்.
व्योमनाथस्तमोभेदी ऋग्यजुःसामपारगः।
घनवृष्टिरपां मित्रो विन्ध्यवीथीप्लवङ्गमः॥
vyomanadha sthamobhedi rig yajur sama paraga
ghana vrushtirapam mithro vindhya veedhi plavangama
வ்யாமனாத ஸ்தமோபேதி ருக்யஜுஸ்ஸாம பாரக: |
கனவ்ரிஷ்டி ரபாம்மித்ரோ விந்த்யவீதி ப்லவங்கம: || 13 ||
ஸூர்ய பகவான் அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர். மழையை பொழிவிக்கிறார். நீர் நிலைகளை நேசிக்கிறார். விந்த்ய மலைகளை தெய்வீகமாக கடக்கிறார்.
வானவெளி மன்னவனே, இருள் நீக்கி, நான்கு வேதம் உணர்ந்த நிபுணனே, உலகம் ஜீவிக்க உன் ஒளியுடன் மழையும் அளிப்பவனே, வருணனின் நண்பனே, எந்த உயரமான மலைகளையும் தாண்டி உலவுபவனே, உனக்கு நமஸ்காரம்.
आतपी मण्डली मृत्युः पिङ्गलः सर्वतापनः।
कविर्विश्वो महातेजाः रक्तः सर्वभवोद्भवः॥
aathapee mandali mruthyu pingala sarva thapana
kavir viswo maha thejaa raktha sarvodbhava
ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கள ஸர்வதாபன: |
கவிர்விஷ்வோ மஹாதேஜா ரக்த ஸர்வபவோத்பவ: || 14 ||
சூரியதேவா, நீ உஷ்ணத்தை அளித்தாலும் அதன் தாபத்தையும் போக்குபவன். சக்ரம் போன்ற உருளை வடிவானவன். காலனின் ஒரு உரு. ஹிரண்மயன் எனும் பொன்னன், உயிர்வாழ தீயை அளிப்பவனே, ஞானத்தை அளிக்கும் உன்னைத் தானே ஞான சூரியன் என்று வாழ்த்துகிறோம், உயிர்களின் முதலும் முடிவும் நீயே. பிரபஞ்சத்தை நிர்வகிப்பவனே நீ தான், உலகின் ஒளியே, ஒவ்வொருவர் மனத்திலும் உறைந்து ஒவ்வொரு செயலும் நிறைவேற்றுபவனே, சூர்யநாராயணா, உனக்கு நமஸ்காரங்கள்.
नक्षत्रग्रहताराणामधिपो विश्वभावनः।
तेजसामपि तेजस्वी द्वादशात्मन् नमोऽस्तु ते॥
nakshtra gruha tharanam adhipo viswa bhaavana
thejasam aphi thejaswi dwadasathman namosththe
நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விஷ்வ பாவன: |
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஷாத்மன் நமோஸ்துதே || 15 ||
ஸூர்ய பகவான் நக்ஷத்ரங்களுக்கும் க்ரஹங்களுக்கும் தலைவர். அவரே இந்த அகிலத்தை உருவாக்கிக் காக்கிறவர். கதிரவனின் பன்னிரெண்டு (தத, அர்யாமா, மித்ரா, வருணா, இந்த்ரா, விவஸ்வன், த்வஷ்டா, விஷ்ணு, அம்ஷுமான், பாகா, புஷா, பரஞ்ஜா) உருவிலும் ஒளி மயமாக இருக்கிறார். ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். நமஸ்காரம் நமஸ்காரம் சூர்ய நாராயணா நக்ஷத்திர, நவக்ரஹ, புவன மண்டலாதிபதி, சர்வ பிரகாச காரணா , ஒளிக்கு ஒளியூட்டுபவனே, பன்னிரண்டு ஆத்ம ஸ்வரூபனே எம்மை ஆசிர்வதிப்பாய்.
nama poorvaya giraye, paschimayadraye nama
jyothirgananam pathaye dhinadhipathaye nama
நம: பூர்வாய கிரயே பஷ்சிமாயாத்ரயே நம: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம: || 16 ||
ஸூர்யன் உதிக்கும் கிழக்கு மலைகளுக்கும் ஸூர்யன் அஸ்தமிக்கும் மேற்கு மலைகளுக்கும் நமஸ்காரம். வானுலகில் உள்ள அனைத்து தேவதைகளுக்கும் தினமும் உதிக்கும் நாளுக்கும் அவரே அதிபதி.
சூரிய பகவானே, கிழ்வானம் சிவக்க உதயமாகின்றவனே, அன்றைய பிரயாணம் முடித்து மேலைவானில் செக்கர்வானமாக மறைபவனே, எதையும் பொன்னிறமாக்குபவனே, தினமும் நாம் வழிபடும் தினகரனே ஆதித்யா உனக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
जयाय जयभद्राय हर्यश्वाय नमो नमः।
नमो नमः सहस्रांशो आदित्याय नमो नमः॥
jayaya jaya bhadraya haryaswaya namo nama
namo nama sahasramso adithyaya namo nama
ஜயாய ஜயபத்ராய ஹர்யஶ்வாய நமோ நமஃ |
நமோ நமஃ ஸஹஸ்ராம்ஶோ ஆதித்யாய நமோ நமஃ || 17 ||
''சூர்யா, நீ வெற்றிக்கு காரணமானவன், ஜெயன். ஜெய பத்ரன். பச்சை குதிரை பூட்டிய ரதன் . உனக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள். அதிதி புத்ரா அசகாய சூரா, சூர்யநாராயணா, உன்னை வணங்கும்போதே நெஞ்சில் தைர்யம் நிரம்புகிறதே. எடுத்த காரியம் யாவினும் வெற்றி தருபவனல்லவா நீ.
nama ugraya veeraya sarangaya namo nama
nama padma prabhodaya, marthandaya namo nama
நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நமஃ |
நமஃ பத்மப்ரபோதாய மார்தாண்டாய நமோ நமஃ || 18 ||
சூர்யநாராயணா, பாபம் செய்தவர் அஞ்சும் பரிசுத்தனே, ரட்சிக்கும் நாயகனே, வேகத்தில் ஈடற்றவனே, காலத்தை நடத்திச் செல்பவனே, காத்திருக்கும் தாமரை மொட்டுக்களை மொட்டவிழச் செய்பவனே, உயிர்கொடுப்பவனே, உயிர் காப்பவனே, உனக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.
brihamesanachuthesaya sooryadhithya varchase
bhaswathe sarva bhakshaya roudraya vapushe nama
ப்ரஹ்மேஶானாச்யுதேஶாய ஸூர்யாயாதித்ய-வர்சஸே |
பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே நமஃ || 19 ||
சூர்யா நாராயணா , சுட்டெரிக்கும் செழுஞ்சுடரே, நீயே பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரின் தேவனாகவும், அதிதி மைந்தனாகவும், சாஸ்வத பிரகாசனாகவும்,சர்வத்தையும் சாம்பலாக்கும் சக்தி படைத்தவனாகும் எதிரிகள் கண்டஞ்சும் பறக்க்ரமனாகவும் உள்ளாய். இதோ எங்கள் நமஸ்காரங்கள் உனக்கு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...