Monday, January 29, 2018

aditya hridhayam 2

' சூரியா, இதோ என் நமஸ்காரம் -.2 
''ADITYA HRUDHAYAM''. 2ND PART. - J.K. SIVAN 

आदित्यः सविता सूर्यः खगः पूषा गभस्तिमान् । 
सुवर्णसदृशो भानुः हिरण्यरेता दिवाकरः ॥ 10 ॥ 

adithya savitha soorya khaga poosha gabasthiman 
suvarna sadrusa bhanu hiranya retha divakara 

ஆதித்யஃ ஸவிதா ஸூர்யஃ ககஃ பூஷா கபஸ்திமான் | 
ஸுவர்ணஸத்றுஶோ பானுஃ ஹிரண்யரேதா திவாகரஃ || 10 || 

'ஹே சூர்ய நாராயணா. நீ அதிதி புத்திரன். அதனால் உன்னை ஆதித்யன் என்று வணங்குகிறோம். லோக சிருஷ்டிகர்த்தா. எங்கள் ஒவ்வொரு செயலும் உன்னால். உன்செயலால் அன்றி எது ஆகும்? வானவெளியில் வலம் வருபவன். நீ இன்றி மழை ஏது. மழை இன்றி உலகேது? தங்க ஒளி படைத்த கதிரவனே, பொன்வண்ணனே , பிரகாசமே, தினகரா உன்னால் தானே தினங்களே உருவாகிறது. 

हरिदश्वः सहस्रार्चिः सप्तसप्ति-र्मरीचिमान् । 
तिमिरोन्मथनः शम्भुः त्वष्टा मार्ताण्डको‌உंशुमान् ॥ 11 ॥ 

haridaswa sahasrarchi saptha sapthir mareechiman 
thimironmadhana shambhu thwashtwa marthanda amsuman 

ஹரிதஶ்வஃ ஸஹஸ்ரார்சிஃ ஸப்தஸப்தி-ர்மரீசிமான் | 
திமிரோந்மதநஃ ஶம்புஃ த்வஷ்டா மார்தாண்ட அம்ஶுமான் || 11 || 

''சூரிய தேவா, உனது ரதத்தில் பூட்டிய பச்சை நிற ஏழு குதிரைகளுடன், ஆயிர ஒளி கிரணங்களுடன் இருளை விரட்டுபவனே, ஆனந்தமய வாழ்வு உன்னால் தானே சூரியநாராயணா, ஜனன மரண காரணா, சொல்லொணா புகழ் மிக்கவனே, உனக்கு நமஸ்காரம்''. 

हिरण्यगर्भः शिशिरः तपनो भास्करो रविः । 
अग्निगर्भो‌உदितेः पुत्रः शङ्खः शिशिरनाशनः ॥ 12 ॥ 

hiranya garbha shisira thapano bhaskaro ravi 
agni garbha adithe puthra sanka shisira nasana 

ஹிரண்யகர்பஃ ஶிஶிரஃ தபனோ பாஸ்கரோ ரவிஃ | 
அக்னிகர்போ‌உதிதேஃ புத்ரஃ ஶங்கஃ ஶிஶிரனாஶனஃ || 12 || 

''ஹிரண்ய கர்பா, உள்ளும் புறமும் சுவர்ண பிம்ப மயமானவனே, மனக் கிலேசம் எல்லாம் நீக்குபவனே, உஷ்ணத்தை அளித்தாலும் அதிலிருந்து தாபத்தை அகற்றுபவனே, ஒளி ஊட்டுபவனே, எல்லோராலும் விரும்பி போற்றப்படுபவனே, இணையற்ற அக்னியை தன்னுள் கொண்டவனே, அதிதியின் புத்ரனே, விருப்பமுடன் ஆகயமார்கமாக பிரயாணிப்பவனே, பனி,குளிர் ஆகியவற்றை நாசம் செய்பவனே, உனக்கு நமஸ்காரம். 

व्योमनाथ स्तमोभेदी ऋग्यजुःसाम-पारगः । 
घनावृष्टि रपां मित्रो विन्ध्यवीथी प्लवङ्गमः ॥ 13 ॥ 

vyomanadha sthamobhedi rig yajur sama paraga 
ghana vrushtirapam mithro vindhya veedhi plavangama 

வ்யோமனாத ஸ்தமோபேதீ றுக்யஜுஃஸாம-பாரகஃ | 
கனாவ்றுஷ்டி ரபாம் மித்ரோ வின்த்யவீதீ ப்லவங்கமஃ || 13 || 

வானவெளி மன்னவனே, இருள் நீக்கியே, நான்கு வேதம் உணர்ந்த நிபுணனே, உலகம் ஜீவிக்க உன் ஒளியுடன் மழையும் அளிப்பவனே, வருணனின் நண்பனே, விந்திய மலை போன்ற எந்த உயரமான மலைகளையும் தாண்டி உலவுபவனே, உனக்கு நமஸ்காரம். 

आतपी मण्डली मृत्युः पिङ्गलः सर्वतापनः । 
कविर्विश्वो महातेजा रक्तः सर्वभवोद्भवः ॥ 14 ॥ 

aathapee mandali mruthyu pingala sarva thapana 
kavir viswo maha thejaa raktha sarvodbhava 

ஆதபீ மம்டலீ ம்றுத்யுஃ பிங்களஃ ஸர்வதாபனஃ | 
கவிர்விஶ்வோ மஹாதேஜா ரக்தஃ ஸர்வபவோத்பவஃ || 14 || 

''சூரியதேவா, நீ உஷ்ணத்தை அளித்தாலும் அதன் தாபத்தையும் போக்குபவன். சக்ரம் போன்ற உருளை வடிவானவன். காலனின் மறு உருவே, ஹிரண்மயன் எனும் பொன்னனே , உயிர்வாழ தீயை அளிப்பவனே, ஞானத்தை அளிக்கும் உன்னைத் தானே ஞான சூரியன், ஞான பானு, என்று வாழ்த்துகிறோம், பிரபஞ்சத்தை நிர்வகிப்பவனே நீ தானே சூர்யா, உலகின் ஒளியே, ஒவ்வொருவர் மனத்திலும் உறைந்து ஒவ்வொரு செயலும் நிறைவேற்றுபவனே, சூர்யநாராயணா, உனக்கு நமஸ்காரங்கள். 

नक्षत्र ग्रह ताराणाम् अधिपो विश्वभावनः । 
तेजसामपि तेजस्वी द्वादशात्मन्-नमो‌உस्तु ते ॥ 15 ॥ 

nakshtra gruha tharanam adhipo viswa bhaavana 
thejasam aphi thejaswi dwadasathman namosththe 

நக்ஷத்ர க்ரஹ தாராணாம் அதிபோ விஶ்வபாவனஃ | 
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஶாத்மன்-நமோ‌உஸ்து தே || 15 || 

நமஸ்காரம் நமஸ்காரம் சூர்ய நாராயணா நக்ஷத்திர, நவக்ரஹ, புவன மண்டலாதிபதி, சர்வ பிரகாச காரணா , ஒளிக்கு ஒளியூட்டுபவனே, பன்னிரண்டு ஆத்ம ஸ்வரூபனே எம்மை ஆசிர்வதிப்பாய்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...