Monday, December 3, 2012

MORAL STORY தலைக்கு மேல் பாரம்



குட்டிகதை. 8
தலைக்கு  மேல் பாரம் 
அந்த ஊரின்  பெயரே கல்லுடைச்சான் பட்டி . கத்திரி வெய்யில்  பட்டையை  கிளப்பிகொண்டிருக்கும்  வேளை.  குப்பனுக்கு கைவந்த கலை கல்  தூக்கும் வேலை!!!.  அதில் வரும்  கூலியில் அவன் குடும்பம்  வயிறு  கழுவியது.   இதே வேலை தான் என்றும்; என்றபோதும் அன்று என்னவோ அவன்  சுமையை  தூக்கியபோது  ரொம்ப  களைத்து விட்டான்.ஒருகட்டிடத்தின்  நிழலில்  தூக்கி வந்த  கல்லை  கீழே  வைத்து இளைப்பாறினான். 
"கடவுளே,  என்னால் தூக்கவே  முடியவில்லையே.  ரொம்ப  கனமான  சுமையாக இருக்கிறதே" என்று பிரார்த்தித்தான்.
"கடவுளின்  குரல்  கேட்டது --  
"அப்பனே,  இந்த சுமை ரொம்ப  கனமாக இருந்தால்  நீ இந்த கட்டிடத்தின்  உள்ளே சென்று உன் சுமையை  இறக்கிவிட்டு  அதோ  எதிரில் தெரியும்  கதவை  திறந்து பார். அங்கு இதே போன்று  நிறைய கல்  இருக்கிறது 
சிறியதாக  ஏதாவதொன்றை எடுத்து கொண்டு போ".அவ்வாறே  செய்தான்  குப்பன். முதல்  அறையில் தன்னுடைய கல்லை   தன்னுடைய  கல்லை  இறக்கி வைத்து விட்டு அடுத்தஅறை உள்ளே சென்று அங்கு நிறைய  கற்கள்  அடுக்கி வைத்திருந்ததை  பார்த்தான். அங்கு இங்கு எல்லாம்  தேடி  கடைசியில் கனம் கொஞ்சமாக  இருப்பதாக தோன்றிய  ஒரு கல்லை  எடுத்துகொண்டான்.
"கடவுளே!!   உனக்கு  நன்றி,  இதோ  இந்த கல்  கொஞ்சம்   சிறியதாகவும்  வெயிட்  குறைந்ததாகவும்  உள்ளது. இதை  எடுத்து  செல்கிறேன்  என்றான்"  குப்பன்.  இறைவன் சிரித்தது  கண்டு   “கடவுளே! நீ  ஏன்  சிரிக்கிறாய்?”  என்று கேட்டான் குப்பன்  
"அப்பா,  குப்பா,  நீ  செலக்ட்  பண்ணிய  கல்  நீ   கொண்டுவந்ததே தான்"  என்று  கடவுள்  குரல் கேட்டது.
நீதி: 
நமக்கு  நம்முடைய  கஷ்டங்கள்  மலையாக தோன்றும்போது  மற்றவர்கள் படும்  அவஸ்தைகளையும் எண்ணற்ற  துன்பங்களையும் நோக்கினால் நாம்  எவ்வளவு  அதிர்ஷ்டசாலிகள்  என்பது  புரியும். நம்முடைய  துன்பம்  கொசுவாகிவிடும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...