Thursday, December 13, 2012

MORAL STORY 44 அஸ்வத்தாமன் ஆசை




KUTTI KADHAI   44           அஸ்வத்தாமன்  ஆசை 

 ஆச்சார்யனுக்கு  எது சந்தோஷம்?   தன் சிஷ்யன்  தன்னை  மிஞ்சும்  அளவுக்கு  தேறி  விட்டான் என்பதே.    
"நான்  கற்றுக்கொண்ட அஸ்த்ர  வித்தையில் தலை  சிறந்தது பிரம்மாஸ்திரம்.   நேரம் வந்து  விட்டது  அதை  
உனக்கு கற்பிக்கிறேன் அர்ஜுனா!   நீயே தகுதியானவன் அதை பெற"   என்றார்  துரோணர்.  இது  கேட்டதும் 
பற்றி  எறிந்தான் அவர்  மகன் அஸ்வத்தாமன்பெற்றமகன்  நானிருக்க  வேரெவனுக்கோவா  இந்த  வித்தை 
அளிப்பீர் எனக்கும்  கூட  கற்றுத்தரவேண்டும்  என்று அரித்தான்  அஸ்வத்தாமன்.   வேறு  வழியின்றி அதை  
அவனுக்கும்  கற்றுத்தந்த துரோணர்   ஒரு  கண்டிஷன் போட்டார்."இது  எக்காலத்திலும்  என்ன காரண மானாலும்  என்ன   தவறு  செய்தாலும் மானுடர்கள்  மீது பிரயோகப்படாது"  என்றுபோதுமே எப்போது  அஸ்வத்
தாமன்  தேவர்கள் மீதும் இறைவன் மீதும்  பிரம்மாஸ்திரம் போட போகிறான்?":    
 சமயம் பார்த்து கொண்டிருந்தான்  அஸ்வத்தாமன் .  பாண்டவர்கள்  வனவாசம் சென்றிருந்த போது  கிருஷ்ணனை  பார்க்க  த்வாரகை போனான்.  கிருஷ்ணன் கடற்கரையில்  உலாவ சென்றிருந்தான். அவனை  தனியே  பிடிப்பதே வெகு துர்லபம்
"அட,  அஸ்வத்தாமா!   எங்கே இந்த  பக்கம்  வந்தாய்?".
"கிருஷ்ணா,  உன்னை காணத்தான் வந்தேன். நீ  இங்கு இருப்பாய்  என்று சொன்னார்கள்.  நல்லவேளை  உன்னை சந்தித்தேன்."
"என்ன விஷயம்  சொல் அச்வத்தாமா?".
"எனக்கு  உன்னிடம் வெகு நாட்களாக மனம் விட்டு  ஒரு விஷயம்  பேச  ஆவல். இன்று  அது  நிறைவேறும்  என்றும் தோன்றுகிறது". 
"பீடிகை  வேண்டாம்  விஷயத்துக்கு  வாயேன் அஸ்வத்தாமா
"என்னிடம்  பிரம்மாஸ்திரம்  இருப்பது  அனைவருக்கும்  தெரிந்ததே அல்லவா. அதை  உன்னிடம்  கொடுத்துவிட்டு  உன்னிடம்  உள்ள  சுதர்சன சக்ரத்தை  பெற ரொம்ப  ஆசை".
"அஸ்வத்தாமா  என்னிடம்  உள்ள வில்,  அம்பு, கதை,  சக்ரம்  எதை வேண்டுமானாலும்  நீ  பெறலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை.  ஆனால்  அவற்றுக்கு  உன்னிடம்  வர ஆட்சேபணை இருக்குமா  என்று  நீ  அவற்றை  தான்  கேட்கணும். எனக்கு  உன்  பிரம்மாஸ்திரத்தை  நீ  தரவேண்டாம். எனக்கு  அது  வேண்டாம். உனக்கு தேவையானதை  நீயே  எடுத்துக்கொள்". 
சுதர்சன  சக்ரத்தின் மீதே  கண்ணாக  இருந்த  அஸ்வத்தாமா  அதையே  எடுக்க  முயற்சித்தான். இடது கையால்  எடுக்க முயன்று  முடியாமல்  வலது கையாலும்  பிறகு  இரண்டு கைகளாலும் முயன்று முடியாமல்  முழுபலத்துடன்  கிருஷ்ணன்  கையினின்றும்  அதை  அகற்ற  பிரயாசை பட்டான்  பல மணி நேரம்  ஆகியும்  களைத்து போய் கிஷ்ணன் காலடியிலே  விழுந்தான்.  .
"அஸ்வத்தாமா,   நல்ல  வேடிக்கை இது   என்  சிறந்த  நண்பன்  அர்ஜுனனோ,  என்  மகன்  பிரத்யும்னனோ, சாம்பனோ, என் சகோதரன்  பலராமனோ இதுவரை  கேட்காததை  நீ  கேட்டாய்.  அது போகட்டும்  யார் மீது  பிரயோகபடுத்த  இதை  கேட்டாய்  அதை  முதலில்  சொல்?". 
"உண்மையை  சொல்கிறேன். உன் மீதே  அதை  பிரயோகித்து  உன்னை கொன்றால்  பிறகு  என்னை  எவராலும்  வெல்ல முடியாதே  என்ற   தீய எண்ணம்  என் மனதில்  இருந்தது  கிருஷ்ணா.  இப்போது  புரிந்து கொண்டேன்.  உன்னை தவிர  எவராலும்  உன்  ஆயுதங்களை  அசைக்க கூட  முடியாது  என்பதை  தெரிந்து கொண்டேன்." 
கிருஷ்ணன்  சிரித்தான்  பெருமூச்சும்  விட்டான்.  ஆசார்யர்  துரோணருக்கு தப்பாமல்  பிறந்தவன் என நினைத்தேன்  அவன்  தப்பாக பிறந்தவன் என்று  நிரூபித்துவிட்டானே

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...