Tuesday, December 4, 2012

KOORATHTHAZHWAR



பல  நாட்களாக  என்  உள் மனதில்  பொங்கியெழுந்த  ஆவல்  இன்று  நிறைவேறியுள்ளது.      ராமானுஜ -- கூரத்தாழ்வான்  குரு- சிஷ்ய  பாவம்  என்னை மிகவும்  கவர்ந்த  ஒரு விஷயம்.  இது சம்பந்தமாக  நான்  தேடி எடுத்த சில  சம்பவங்களை  என் சிற்றறிவுக்கு  எட்டிய  வரை  எனக்கு  தெரிந்த  தமிழில்  எழுதியுள்ளேன்.  (கொஞ்சம்  பெரிய  செய்தி மடல்) .  நான் எடுத்துக்கொண்ட  பிரயாசைக்கு நீங்கள்  இதை படித்து  எனக்கு  உங்கள் அபிப்ராயங்களை  தெரிவிக்கலாமே
அருமையான  குரு  அபிமான  சிஷ்யன்
கூரேசனை (கூரம் என்கிற ஊர்காரர்--  பின்னர்   கூரத்தாழ்வான்பற்றி  எவ்வளவோ பேர் எத்தனையோ  சொன்னாலும்   எழுதினாலும்  பாடினாலும்  அலுக்காத   காரணம்  அவருடைய  குரு பக்தி. .ரொம்ப  வசதியான குடும்பம். நிலம்  நீச்சு என்று ஏராளமான சொத்துஅருமையான ஒரு மனைவி (ஆண்டாளம்மாஅமைந்தது தான் விசேஷம். தம்பதியர் இருவருமே  தான தர்மத்தில்  ஒருவரை யொருவர்  மிஞ்சினர்கஞ்சி வரதனிடம்  அளவற்ற  பக்தி . காஞ்சிபுரத்திற்கு  அடிக்கடி போன போதெல்லாம் அங்கு புதிதாக  விசிஷ்டாத்வைத பிரசாரம்  பண்ணிக்கொண்டிருந்த  ராமனுஜரிடம்  அமோக  பக்தி கூரேசருக்கு.    காந்தம் போல்  கவரப்பட்டார். அவரது         எண்ணற்ற  சீடர்களில்  தானும்  ஒருவராக   இணைந்துகொண்டார்ராமானுஜரிடம்  வேத சாஸ்த்ரங்களை கற்று  மீமாம்ச சூத்ரங்களையும்  தெரிந்துகொண்டார்இருவருக்குள்ளும் பிரிக்க முடியாத  நேசம், நட்பு , பாசம்சகலமும்  உண்டானது. காஞ்சியே  வாசமானார்  கூரேசர். ஸ்ரீரங்கத்தில்  வைஷ்ணவர்களை ஆதரிக்க, ஊக்குவிக்க, ராமானுஜர்  போக நேரிட்டது.  .அங்கு  அப்போது  சைவர்களின் ஆக்ரமிப்பு கெடுபிடி கொஞ்சம் அதிகம்சூரியனை  தாமரை பிரிந்ததுகூரேசன் கூரத்திலேயே  ஐக்கியம்ஆனால்  காஞ்சி  வரதனும்  பெருந்தேவி தாயாரும்   வேறு திட்டம் வைத்திருந்தார்களே!!!!!
 நாள்தோறும் கூரேசர் ஆண்டாள் ஜோடியின்  தான தர்மங்கள்  இரவு வரையும்  தொடரும்ஒருநாள்   இரவு அன்னதானம்  முடிந்து  அவர்களின்  மாளிகை கதவு தாழ்  போடப்பட்டதுகோட்டைகதவு போல  அது சாத்தப்பட்ட  சப்தம்  நிசப்தமான  இரவில்  காஞ்சியிலும் கேட்டதுவரதராஜ பெருமாளை  பெருந்தேவி  தாயார்    " நாதா!   இது  என்ன சப்தம்?.  எங்கிருந்து ? என கேட்டாள்.  "தெரியவில்லையேகேட்டு சொல்கிறேன்””  என்று  வரதராஜ பெருமாள்  ஆலயத்தின் பிரதான  பட்டாசாரியாரான  திருக்கச்சி நம்பிகளை அழைத்து  கேட்டார். "சுவாமிநானும்  கேட்டேன்அது  கூரத்தில்   அன்றாட  அன்னதானம்  முடிந்து  இரவில்  கூரேசர் வீட்டு வாசல்  கதவு  மூடப்பட்டு  தாழ்ப்பாள்  போடும்  சப்தம்" கபட நாடக  சூத்ரதாரி ஆயிற்றே   பெருமாள்!!!.  தெரியாதது போல்   "அடே  அப்படியாகூறேசனும்  ஆண்டாள் அம்மாளும் அவ்வளவு  தர்மிஷ்டர்களாஎனக்கு  அவர்களை  பார்க்க வேண்டும்   அழைத்து  வாஎன  திருக்கச்சி நம்பிக்கு  கட்டளை இட்டார். அம்பு போல்  விரைந்து  கூரேசரிடம்  பெருமாளின் விருப்பத்தை  தெரிவிக்க கூரேசர் வெகுண்டார்.  "என்ன  அக்ரமம்  செய்துவிட்டேன்பாவிநான்? அன்னதானம்  செய்வதை ஊருக்கெல்லாம்  பிரபல்யம்    செய்வதுபோல்  கதவு  தாழ்ப்பாள்   சத்தம்  போட்டு  தம்பட்டம்  அடித்துவிட்டேனேபெருமாளுக்கும்  தாயாருக்கும்  சத்தத்தால் அமைதி இழக்க  செய்து  மகா பாவத்தை  தேடிக்கொண்டு விட்டேனே?!!”.  ஆடிப்போய்  விட்டார்  கூரேசர். இனி  நான் செய்யவேண்டியது   சொத்து  சுதந்திரம்  பூரா  அப்படியே எல்லாவற்றையும்  துறந்து  ஸ்ரீரங்கத்துக்கு  ஓடி  குரு நாதர்  ராமானுஜரை  சரண்  அடைவது ஒன்றே.  ‘’அடியே  ஆண்டாளுகட்டின துணியோட  உடனே  கிளம்பு. ஸ்ரீரங்கம் போவோம்”” . அவ்வாறே  இருவரும்  ஸ்ரீரங்கம் நோக்கி நடந்தனர்வழியே  சில இடம்  காட்டு பாதைகள்வர் பயம்  ஆண்டாளை  கலக்கியது கண்டார்.  "என்ன  பயம்நம்மிடம் என்ன இருக்கிறதுஉன்னிடம்  எதாவது  பொருள்  உள்ளதா, சொல்என்று  கேட்ட  கூரேசரிடம் உண்மையை உடைத்தாள் ஆண்டாள்  அம்மாள். வழியில்  உங்களுக்கு  எதாவது தாக  சாந்திக்காவது  உதவுமே  என்று நினைத்து  இந்த  சிறிய தங்க பாத்திரத்தை  கொண்டு வந்தேன்  என்று புடவை முடிச்சிலிருந்து  அந்த  சிறிய  பாத்திரத்தை  நீட்டினாள் ஆண்டாள்  அம்மாள். “பேதை பெண்ணே!! ,  எல்லா வற்றையும்  துறந்து  என்று   சொன்னபோது  அதில் இந்த  பாத்திரமும்  சேர்ந்தது தான்””  . அந்த பாத்திரத்தை  வாங்கி  வீசிஎறிந்தார். "அப்பாடா!!  இனி உனக்கு  பயம் தேவை இல்லையே, எது காரணமோ  அதை  வீசி எறிந்தாயிற்றே.”” ஸ்ரீரங்கத்தில்  ஸ்ரீ  ராமானுஜருக்கு  நீண்ட  நாள்  பிரிந்திருந்த  குழந்தைகளை  பார்த்த  மகிழ்ச்சிவிரைவில்  ஸ்ரீ  ராமானுஜரின்  பிரதம  சிஷ்யனானார் கூரேசர்ஆச்சர்யனின்  வலது கரமாகவும்கண்ணாகவும், செவியாகவும் ஏன்,   மனசாட்சியாகவுமே  சேவை சாதித்தார்சுருக்கமாக  சொன்னால்,    கூரேசர்   ஸ்ரீ  ராமானுஜரின்  நிழலானார்!!  . ஸ்ரீ  ராமானுஜரின்  விசிஷ்டாத்வைதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.   அனேக வைஷ்ணவர்கள் பின் பற்றினர்.   அடியார்  கூட்டம் பலத்ததுதத்துவம் கொள்கை, சீர் பட வேண்டுமெனில்  முறை ஒன்று  தேவைஎனவே  ஸ்ரீ  ராமானுஜர்   "ஸ்ரீ  ராமானுஜ தர்சனம்எழுத  ஆரம்பித்தார் 4 முக்ய  சீடர்கள் (கூரேசர்தாசரதி, தேவராட், எம்பார்உதவினர்  இரவும் பகலும்  வேத சாஸ்த்ரங்கள், சூத்ரங்கள்  திருவாய் மொழி போன்று எல்லாவற்றையும்  அலசினர். விசிஷ்டாத்வைத  சித்தாந்தம் படிப்படியாக உரு பெற்றது.   ஸ்ரீ  ராமானுஜர்  வியாசரின்  பிரம்ம சூத்ரதுக்கும்   பாஷ்யம்  எழுத  தொடங்கினார். " கூரேசா, நீ தான்  நான்  சொல்ல  சொல்ல என்னோட  பாஷ்யத்தை எழுதணும்  .  எதாவது தடம்  மாறி  சொன்னா  எழுதறதை நிருத்தணும். உடனே  நான்  புரிஞ்சிப்பேன் ".  இப்படி தான்   ஸ்ரீ  ராமானுஜரின்  ஸ்ரீ பாஷ்யம் தோன்றியது.   ஒருநாள் ஸ்ரீ  ராமானுஜர்  ஜீவாத்மா    பற்றிய  விளக்கம்   சொல்லிக்கொண்டு வந்தபோது  கூரேசர்  எழுதுவதை  நிறுத்தினார். குருவை  நோக்கினார் . பல  நாட்கள்  இரவுகள் சிந்தித்த  எண்ண ஓட்டம்  தடை பட்டதில்   ஆச்சர்யனுக்கு  கோவம்  வந்ததுவயதாகி விட்டதல்லவா? எழுதுவது  நின்றால்  சிந்தனை தொடரில்  பிசகு  என்றல்லவா  அர்த்தம்?   வெடித்து  விட்டார்  ஆச்சர்யன். " கூரேசாஎன்னைக்காட்டிலும்  நீ வியாசரின்  சூத்ரத்துக்கு  பாஷ்யம்  சரியாக  எழுதுவதாக  நினைத்தால்  நீயே  எழுதுபோ””   என்று  கூரேசரை விரட்டினார்மற்ற  சீடர்கள் ஏன்  இவ்வாறு செய்தாய்  என வினவினர்   என்ன  விபரீதம்  இது  என  நடுங்கினர்.  “”நண்பர்களே   கவலை வேண்டாம்நான்   ஆச்சர்யனின்  அடிமை. அவர்  என்னை  என்ன வேண்டுமானாலும்  சொல்லலாம்செய்யலாம்."     இதற்கிடையில்  கூரேசர் எழுதியிருந்ததை  படித்த ஸ்ரீ  ராமானுஜர்  தான்  சொல்லிக்கொண்டுவந்த  வாசகத்தில் ஓரிடத்தில்   முரண்பாடு  இருந்ததையும்  கூரேசர்  அதை சுட்டிக்காட்டியது  சரி  என்பதையும்   உணர்ந்தார். ஜீவாத்மா  தனித்வம்  கொண்டதாக இருந்தாலும்  இறைவனிடம்  சேஷத்வம்  கொண்டது என்று தான் கூரேசன்  திருத்திய படி   இருக்கவேண்டும் என தனது  தவறை  அறிந்தார்.   அடேடே , வெளிச்சத்தை  பற்றி  சொல்லும்போது  அதற்கு  காரணமான  சூரியனை  மறந்து போனேனே என்று வருந்தினார், மஹா புருஷரல்லவா." “”என்  மகனேநீ தான்  ரைட்ஜீவாத்மா  ஸ்வரூபத்தை   நீ  விளக்கியவாறே எழுதுமேலே  தொடர்வோம்" இவ்வாறே  ஸ்ரீ  ராமானுஜரின்  ஸ்ரீ  சம்ப்ரதாயம்ஸ்ரீ  பாஷ்யம்வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதார்த்த   சங்க்ரகம், கீதா பாஷ்யம்  உரு பெற்றது  . எங்கேயோ  ஒரு  நிரடல்  ஸ்ரீ  ராமானுஜருக்குவிசிஷ்டாத்வைத  சித்தாந்தம்  பூரணமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால்  வியாசரின் " போதாயன   வ்ருத்தி" என்கிற ஓலை  சுவடு   நூல்  அவசியம்அதிலிருந்து  மேற்கோள்  காட்ட வேண்டும். அதை  எங்கே  தேடுவது?   காஷ்மீரத்தில்  ராஜாவுடைய  லைப்ரரியில்  கிடைக்குமாமற்ற  பாஷ்ய  காரர்கள் உரை  ( குகதேவர், பருசிதங்கா, திராமிடர்) எல்லாம்  கூட  ஒரே  இடத்தில் காஷ்மீரத்தில்  கிடைக்கலாமே    ஸ்ரீ  ராமானுஜர்  வயதான  காலத்திலும்   கால்நடையாக  திக்விஜயம்  கிளம்பினார்போகுமிடமெல்லாம்   விசிஷ்டாத்வைத  பிரசாரம்!!    அப்படியே  காஷ்மீரம்.----   எங்கெங்கெல்லாம்  தங்கினாரோ  அங்கெல்லாம்   ராமானுஜ  கூடங்கள்   மடங்கள் எல்லாம்  உருவாயின. கூரேசன்  முதலான  சிஷ்ய கோடிகள்  ஸ்ரீரங்கத்திலிருந்து பின் தொடர்ந்தனர். காஷ்மீர்  ராஜா  அவ்வளவு சீக்கிரத்தில்  ராமானுஜரையும்  விசிஷ்டாத்வைத சித்தாந்தமும்  ஏற்றுக்கொள்வானாநாட்கணக்கில்  பண்டிதர்களுடனும், வேதாந்தி களுடனும்  விவாதம். முடிவில்  ராமனுஜரின்  மகிமை பெருமை எல்லாம்  ராஜா  உணர்ந்தான்குரேசனுக்கு ராஜாவின்  லைப்ரரியில் வேண்டிய  ஓலைச்சுவடி தேட  அனுமதி கிடைத்தது. தோற்ற அரண்மனை  பண்டிதர்களுக்கு  பொறாமை  ஞாயம்  தானேபோதாயன  வ்ருத்தி  ஓலைச்சுவடி  கிடைக்காதபடி  செய்ய  எண்ணம்  வந்ததுஓலைச்சுவடி  லைப்ரரியை விட்டு  வெளியே  நகரக்கூடாதுஅங்கேயே  படிக்கப்பட  வேண்டும்  என்று  ராஜா அனுமதி பெற்றார்கள்ஸ்ரீ  ராமானுஜரும்  கூரேசரும்   அங்கேயே  படிக்க  ரெடி. ஓலைச்சுவடியிலிருந்து   குறிப்பு எடுக்ககூடாது  என்று  மற்றொரு  கெடுபிடியும்  போடப்பட்டதுவிடுவாரா  கூரேசர். ஆஹா  அப்படியே  அன்று  அனைத்து  ஓலைச்சுவடிகளையும்  மனப்பாடம்  செய்ய  ஆரம்பித்தனர்  இருவரும்.   வேறு வழியில்லை  இந்த  இருவரையும்  கொல்வது தான்  முடிவு  என  பண்டிதர்கள்  தீர்மானிக்க  இருவரும்  காஷ்மீரை  விட்டு  வெளியேறினர்ஸ்ரீரங்கம்  திரும்பியதும்   ஸ்ரீ பாஷ்யம்  எழுத தொடங்கினர். கூறேசரின்  அபார ஞாபக  சக்தியால்  ஓலைச்சுவடியின்  அத்தனை விஷயங்களும்  எழுத்தில்  மிளிர்ந்ததுபல வருஷங்கள்  ஆயிற்று இந்த  அதிசயத்தை  பூர்த்தி செய்யஸ்ரீ  ராமானுஜருக்கு  பரம திருப்தி. கூறேசனின்  புத்தி கூர்மையால்  தான்  தன் எத்தனையோ  வருட  கனவு  நிறைவேறியது என  மன நிறைவுஸ்ரீ வைஷ்ணவமும்  ராமானுஜ ப்ரபாவமும்  நாடெல்லாம் இப்போது  பரவியதுஅநேக  சிஷ்யர்களும்  தொண்டர்களும் அவர்  பின்  இப்போது. ராமானுஜர் வாசம் செய்த  ஸ்ரீ ரங்கம்   தான்  வைஷ்ணவத்தின்  தலைநகர்  என ஆயிற்று. ஆசார்யனுக்கு  தனது குருவுக்கு  வாக்களித்ததை  நிறைவேற்றியதில்  களிப்பு, . கூரேசருக்கு  மட்டும் தனக்கு  ஒரு  பிள்ளை இல்லை  என்ற  குறைஉஞ்சவ்ரத்தியில் தான்   காலம்  சென்றது அவருக்கு. ஒருநாள்  கொட்டும்  மழை நிற்கவில்லைஎனவே  கூறேசருக்கும்  ஆண்டாள்  அம்மாளுக்கும்  உஞ்சவ்ரத்திக்கு  வெளியே  போக முடியாததால்  உணவில்லை.  
பெருமாளின்  துளசி ஜலம்  தான்  ஆகாரம். அன்றிரவும்  வாயு பக்ஷணம்  தான்  போலும். ஆனால் கூறேசருக்கோ  பரம சந்தோஷம்இன்று  திருவாய் மொழி  படிக்க  நிறைய  நேரம்  கிடைத்ததே என்று!!!. ஆண்டாளுக்கோ  நெஞ்சிலும் வயிற்றிலும் வலிதனக்கு  பசி என்பதற்காக  அல்லகணவர்  பட்டினி கிடப்பதை பார்த்து!!!. ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயில்  மணி சாயந்தர  நைவேத்ய பூஜையை  அறிவித்ததுஆண்டாள் அம்மாள்  கண்களில்  தாரை தாரையாக கண்ணீர்  அவள்  மனம்  "ஹே!!  ரங்கநாதா  உன் பக்தன்  இங்கே  ஆகாரமின்றி  வாட  உனக்கு மட்டும்  உண்ண மனம் வருகிறதா?””   ரங்கன்  இதை கேட்டு  சும்மாவா இருப்பான்?    கோவில் பிரதான  பட்டாச்சார்யர்  உத்தம  நம்பியின்  கனவில்  ரங்கனின்  கட்டளை : “”உடனே  பிரசாதங்களுடன்  கூரேசன் வீட்டுக்கு போ. பசியோடு  உள்ளான்என் ஆசிகளையும்  பிரசாதத்துடன்  அனுப்பினேன்  என்று சொல்".   உத்தம  நம்பிக்கு உடல் சிலிர்த்தது   வியர்க்க விருவிருக்க  ஓடினார்.     மேள தாளங்களுடன் ரங்கனின் நைவேத்ய  பிரசாதங்களுடன் அனைவரும்  புடை சூழ  நள்ளிரவில் கூரேசன் வீட்டுக்கு  நடந்தார்.   வெறும்  ஜலம் அருந்தி படுத்திருந்த  கூரேசன் திடுக்கிட்டார்.   உத்தம நம்பி  சொன்னதை  அவரால்  நம்பவே முடியவில்லைரங்கனின் கருணை  அவரை திக்குமுக்காட  வைத்ததுஆண்டாள் அம்மா மனதில்  நன்றியுடன்  ரங்கனை  வணங்கினாள்.  “”இது ரங்கன்  அனுப்பியது. அவசியம்  நீங்கள் ஏற்றுகொள்ள வேண்டும்”” என்றாள்.   கூரேசன்  மனதில்  ஒரு  ஐயம்இது  ஆண்டாளின்  வேலையோ?? என்றுஅவரது  கேள்விகளுக்கு  விடையாக  தான்  ரங்கனிடம் முறையிட்டதை சொன்னாள்.   " ஆண்டாள்   நீ என்ன  காரியம்  செய்து விட்டாய்   ஒரு  கவளம்  சோற்றுக்காக அந்த  பேர் அருளாளனை  சோதிக்கலாமா? "  இரவு ரங்கன்  கூரேசன்  கனவில் தோன்றி  "  கூரேசா!!!   நான் உனக்கு  அனுப்பியது வெறும் சோறு  மட்டும்  அல்லஉனக்கும் ஆண்டாளுக்கும்  பிறக்கப்போகிற  இரண்டு  குழந்தைகளுக்கான வரப்ரசாதமும்  கூடஅவர்கள்  எம்  குழந்தைகளும் ஆவர்எம்மை  அவர்களில்  நீங்கள்  இருவரும்  காண்பீர்””   கூரேசர்  குதித்து எழுந்தார். அடியே  ஆண்டாளே   இந்த  அதிசயத்தை  கேள்  என்று  கூரேசர்  அவளை  எழுப்பி விவரம்  சொன்னதில்  அவளது  சந்தோஷத்தை  எழுத  எனக்கு  வார்த்தை  இல்லைராமானுஜருக்கு  விவரம்  சென்றதுஒரே வருடத்தில்  இரு  பிள்ளைகள்  பிறந்தனராமானுஜரே  அவர்களுக்கு    “வியாச பட்டர்”  “ பராசர பட்டர்என  நாமகரணம்  செய்வித்தார்பிற்காலத்தில்  பராசர பட்டரே  ராமானுஜரின் வாரிசாக  ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ  சம்பிரதாய  ஆன்மீக  சாம்ராஜ்யத்தை  நிலை நிறுத்தியவர்,   ஸ்ரீ  ராமானுஜருக்கு  வயது  ஆகிவிட்டது. ஸ்ரீ வைஷ்ணவம்  வேரூன்றி விட்டதுஎண்ணற்ற  வைஷ்ணவர்கள்  அவரை   போற்றினாலும்  சில  எதிரிகளும்  முளைத்தனர்சைவ சமயம்  அவரை  எதிர்க்காவிட்டாலும்  சில  சைவர்கள்  அவர் வளர்ச்சியில்  கவலை கொண்டனர். கங்கைகொண்ட சோழ புறத்தில்  ஒரு  கிளர்ச்சிஅவருக்கும்  ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் தீவிர  எதிர்ப்பாக  அமைந்ததுஅந்த  சோழ தேச  ராஜா குலோத்துங்கன்  வம்ச  கிருமி கண்ட சோழன் ஒரு  வீர சைவன்தனது  ராஜ்யத்தில்  வைஷ்ணவ  பூண்டை  வேரோடு  ஒழிக்க  நினைத்தான்அது  ராமானுஜரை   அழித்தால் மட்டுமே  முடியும் . "அழைத்து வாருங்கள்  அந்த  ராமானுஜனை  இங்கே””    , கட்டளை பிறந்தது. ராமானுஜரை  தனது  சைவ  குருமார்களுடன்  விவாதம்  செய்யவைத்து  தோற்கடிக்க வேண்டும்  வைஷ்ணவத்தை  விட்டு  சைவத்தை  ஏற்க செய்யவேண்டும், மறுத்தால்  கொன்றுவிடவேண்டும்.   இந்த  எண்ணம்  செய்தியாக  கசிந்து  சில  பக்தர்கள் ராமானுஜரிடன்  ஓடினர்எக்காரணம் கொண்டும்  நீங்கள்         கங்கைகொண்ட  சோழபுரம்  செல்ல கூடாது. உடனே  சோழநாட்டை விட்டு  வெளியேறுங்கள்  என்று  கெஞ்சினர். அரசனின்  ஆட்கள் வந்துவிட்டனர்  ராமானுஜரை தேடி.    கூரேசர்  எப்படியோ  ராமானுஜரை  சம்மதிக்க வைத்து  தான்  அரசனை  சந்தித்தார்விரக்தியுடன்  ராமானுஜர்  சிலருடன் மட்டும்  கர்நாடகாவில்  மேல் கோட்டையை (திருநாராயணபுரம்நோக்கி  நகர்ந்தார்அங்கு  பன்னிரண்டாண்டுகள் அந்த  முதியவருக்கு  வனவாசம்  விதிவசமாகியது . மீண்டும்  ஆரம்பத்திலிருந்து  ஸ்ரீ வைஷ்ணவத்தை  அங்கு  பரப்பினார். ஸ்ரீ  சம்பத் குமாரன் கோயில்  கட்டினார்அவரது  விடா முயற்சியில்  மேல்கோட்டை  ஸ்ரீ ரங்கத்துக்கு  அடுத்ததாக சிறந்த  ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலமாகியது.   ஒரு  நாள்  ஸ்ரீரங்கத்திலிருந்து  ஒரு  வைஷ்ணவர்  ராமானுஜரை சந்தித்தார்ஆர்வத்துடன்   ஆசார்யன் மூச்சு விடாமல்  “” என்  உயிரான  ஸ்ரீரங்கம்  எவ்வாறு  இருக்கிறதுஎன்  பிள்ளைகள்  ஸ்ரீ  வைஷ்ணவர்கள்  எல்லாம்  நலமா???”
நீங்கள் இல்லை என்கிற  குறை தவிர  எல்லாம் சுமுகமாகவே இருக்கிறது  அங்கு”   என்றார்  வைஷ்ணவர்
என்  சீடன்  கூரேசன்  எப்படி இருக்கிறான்  ??அவனை  இழந்து  நான்  தனியனாகிவிட்டேனே!!! “ என்று  ஆதங்கத்தோடு  கேட்டார்  ஆசார்யன்கண்களில்  நீர்  பெருகநா  தழுதழுக்க   ஸ்ரீ  வைஷ்ணவர்  சொன்னார்:
 "சுவாமி  தங்களை  ஜாக்ரதையாக  அனுப்பிவிட்டு  கூரேசரும்  மஹா பூரணரும்  அரசன்  ஆணைக்கு  கட்டு பட்டு  கங்கை கொண்ட சோழ புரம்  அழைத்து செல்லப்பட்டனர்.   ராஜா  அவர்களிடம்  "சிவனை  காட்டிலும்  பெரிதொன்றும் இல்லைஎன  சம்மதித்து  எழுதிகொடுங்கள்   என்றான். கூரேசன் மறுத்தார்வேதம் சாஸ்த்ரம், உபநிஷத் ஸ்ம்ரிதி  புராணம்  இவற்றிலிருந்து எல்லாம்  மேற்கோள்  காட்டி நாராயணனே  மேலானவன்  போற்றதக்கவன் என  நிருபணம் செய்தார்ஏற்க  மறுத்தான்  சோழன்கையொப்பமிட்டு கொடு  இல்லாவிட்டால்  உன் கண்  இங்கே  பிடுங்கப்படும்  என  ஆணையிட்டான். “”கெடுமதி  கொண்ட  அரசனேஉன் விருப்பம்  நிறைவேறாது.   உனக்கு வேலை  மிச்சம்  பண்ணுகிறேன்நானே  என்  கண்களை பிடுங்கி கொள்கிறேன் என்று  அவன்  நீட்டிய  எழுத்தாணியால்  கண்  விழி கோளங்களை வெளி  கொணர்ந்து  அவன்  காலடியில்  எறிந்தார். உன்னை பார்த்ததால்   அந்த  கண்கள்  செய்த  பாவத்திற்கு  இது  தண்டனையாகட்டும். “”நீ  கையொப்பமிடு  என  மஹா  பூர்ணர்    நம்பிகளை  ஆணையிட்டு  அவரும்  மறுக்கவே  அரசனின்  சேவகர்கள்  அவர்  நேத்ரங்களை  அழித்தனர்கூரேசர்  வயதில்  இளையவராதளால்   நம்பிகளை  தாங்கி வர ரத்தம்  பீறிட  வழியெல்லாம்  ஆறாக   பெருக  அரண்மனை விட்டு  வெளியேறினர்கங்கை கொண்ட சோழபுரம்  தாண்டி  வந்தவுடன்  நம்பிகளின்  பெண் அத்துழாய்  பிராட்டி  அவருக்காக  காத்திருந்தவள்  கண்ணற்ற  தந்தையை கட்டிக்கொண்டு  கதறினாள். நம்பிகளால்  மேற்கொண்டு  நகர இயலவில்லைகூரேசன் மடியில்  தலையும்  அத்துழாய்  மடியில்  காலுமாக  சோழ மண்ணிலே  சாய்ந்தார். “””சுவாமி!!  ரங்கனை விட்டு பிரிந்ததும்,    ஸ்ரீரங்கத்தை  பிரிந்ததும்ராமானுஜரை  பிரிந்ததும் எங்கோ கங்கை கொண்ட சோழபுரத்துக்கு  வெளியே  ஒரு  காட்டு பிரதேசத்தில் வாழ்வு  முடிவதால்   உங்களுக்கு  மனமொடிந்து விட்டதா??”  என  கூரேசர்  வினவ  “கூரேசா!!!  நீ  அறியாததா??  ஒரு  வைஷ்ணவனின்  அந்திம  நேரத்தில்  நாராயணனே  அருகில்  இருப்பான்ஜடாயுக்கு  ஸ்ரீ  ராமன் அருகில்  வந்து  அருளவில்லையாஇதில்  காடென்ன  நாடென்ன??   மேலும்  கேள் , ஒரு  சுத்த  ஸ்ரீ வைஷ்ணவன் மடியிலோ  வீட்டிலோ  மரணம்  சம்பவித்தால்  அதற்கு  மேல்  எது  சிலாக்கியம்?? நான்  ஸ்ரீரங்கத்தில்  மரணமடைந்தால்  அனைவரும்  ஸ்ரீ ரங்கத்தில்  மரணம் தான் வைஷ்ணவனுக்கு  சிறந்தது  என  நினைப்பரே!!!. நமது  ஸ்ரீ வைஷ்ணவ  சம்ப்ரதாயம்  என்ன  சொல்கிறது?   பெருமாளிடம்  பிரபத்தி சரணாகதி   பண்ணினவனுக்கு  எங்கு  மரணம்  சம்பவித்தாலும்    நாராயணன்  அருகில்  இருப்பது  சத்ய வாக்காயிற்றே!!!.  இதென்ன  அனாமதேய  இடமா  இங்கல்லவோ  என் குருநாதர்கள்  நாதமுனிகளும்  குருகை காவலப்பனும்  வைகுண்ட ப்ராப்தி  பெற்ற  இடம்விசனப்படாதேநான்  மகிழ்ச்சியோடு  விடை பெறுகிறேன்”””. மஹா பூர்ணர் பெரிய நம்பிகள் மறைந்தார். “””
நிகழ்ந்ததை  பூரா  கேட்ட  ராமனுஜரின்  கண்களில்  பிரவாகம்தனது  குரு  பெரிய நம்பிகளுக்கு   தான்  எவ்வளவு  கடன் பட்டிருக்கிறோம்  என்று  நினைவு  கூர்ந்தார்தனக்காக அவர்  உயிர் தியாகம் செய்தது ராமானுஜரை  வாட்டியது. அந்திம  நேரத்தில் அருகிருந்து  மஹா  பூர்ணருக்கு சேவை  செய்யும்  பாக்கியம்  கிட்டவில்லையே என  நொந்தார். பெருமாளே  என்ன பாக்கியம்  கூரேசனுக்கு என்னால்  முடியாததை  அவன்  நிறைவேற்றினானே அவனல்லவோ  குருவை  மிஞ்சிய  சீடன்  கூரேசன்  ஸ்ரீரங்கம்  திரும்பினார்திருக்கோஷ்டி  நம்பிகள், திருமலை  ஆண்டான் , திருவரங்க  பெருமாள் அரையர்  என்று  ஒவ்வொருவராக மஹா புருஷர்கள்  எல்லாம்  மறையலானார்கள்  திருப்பதியில் ராமானுஜரின்  நெருங்கிய உறவினர்  ஸ்ரீ சில  பூரணரும்  திரு கச்சி நம்பிகளும் விண் எய்தினர்.   கூறேசருக்கு  ஸ்ரீ ரங்கம்  வெறிச்சோடியது  போல்  தோன்றியது. தனிப்பட்டு விட்டோமோ? கண்ணற்ற  கூரேசர்  ரங்கநாதனே  கதி என்று  தனிமையில்  மன வியாகூலத்தை ரங்கனிடம்  கொட்ட ஆலயம் சென்றபோது  காவலர்கள்  தடுத்தனர்அரசனின்  ஆணை  யார்  ராமானுஜரை தம்முடைய  குரு அல்ல  என  ஒப்புக்கொள்கிறார்களோ  அவர்கள்  மட்டும்  ஆலயத்தில்  அனுமதிக்கபடுவர்.   “அய்யா!!   உங்கள்  அரசரிடம் சொல்லுங்கள்  ராமானுஜரை  இகழ்ந்து  புறக்கணித்துவிட்டு    கூரேசனுக்கு  ரங்கன்  இந்த  ஜென்மத்தில் மட்டு மல்ல  வரும்  ஜென்மத்திலும்  தேவையில்லை””  என்றார்  வீடு  திரும்பினார். “” ஆண்டாள்,   பசங்களை  கூப்பிடு  இனி ஸ்ரீரங்கம்  நமக்கில்லைவேறெங்காவது  செல்வோம்”” .  அவர்கள்  அவ்வாறே  திருமாலிருன்சோலை (மதுரை அருகேகுடியேறி  தனிமையில்  வாழ்ந்தனர்.   காலம்  மாறியது. கிருமி கண்ட சோழன் மாண்டான்கொடிய ஆட்சி விலகியதுபல  வருஷங்கள்  சென்றதுநூறு  வயதான  ராமானுஜரும்  ஸ்ரீரங்கம் மீண்டார்கோலாகல  வரவேற்பு  பிரபந்தங்கள்  பாசுரங்கள்  எதிரொலிக்க  ஸ்ரீவைஷ்ணவ  பக்த கோடிகள்  உற்சாகமாக  அவரை  வரவேற்றனர்.   அவர் கண்களோ  கூரேசனை  தேடியதுகூரேசர்  வீட்டு  வாசலை அடைந்தார்
திருமாளிருன்சோலையிலிருந்து  கூரேசர்  குடும்ப  சகிதம்  ஸ்ரீரங்கம்  விரைந்தார்கண்ணிழந்த  கன்று  தாய்  பசுவை  ஆர்வமாக  நாடியது. தன் வீடு  தேடி  ஆசார்யன்  வந்தார்  என  கேட்டு  புளகாங்கிதம்  அடைந்தார்  கூரேசன்ஆச்சர்யனும்  பிரதம  சீடனும்   பல வருஷங்கள்  கழித்து  சந்தித்தனர்நா  எழவில்லை  இருவருக்கும்எண்ணங்கள்  ஓடினகாஞ்சியில், ஸ்ரீரங்கத்தில்காஷ்மீரில்  ஸ்ரீபாஷ்யம்  எழுதியது  என்று  எத்தனையோ  எண்ண  ஓட்டத்துக்கு  எல்லையே  இல்லை. எத்தனை  எத்தனை இடையூறுகள், இன்னல்கள்,எதிப்புகள், விவாதங்கள்  ஒன்றாக அல்லவா எல்லாம்  கடந்தோம். ராமானுஜர்  கண்களில் காவேரி  கூறேசருக்கோ  கண்ணே  இல்லையே.!!  விழி  யற்று  பேச்சற்று   தடுமாறி தத்தி ராமானுஜரின்  கால்களில்  விழுந்தார்  கூரேசன்குருவின்  பாத கமலங்களை  கெட்டியாக  இரு கரங்களாலும்  பிடித்து கொண்டார்.    அமைதி  நிலவியதுபாசத்தோடு  கூரேசனை  தொட்டு  தூக்கி மார்போடு  அணைத்து கொண்டார்   ராமானுஜர்.  “என்  குழந்தாய்!!!   என்ன  செய்தாய்  நீ  எனக்காகவும்  ஸ்ரீ வைஷ்ணவதுக்காகவும்  உன் கண்களையே  தியாகம்  செய்தாயே””!!!   
பன்னிரண்டு  வருஷங்கள்  கழித்து  மீண்டும்  ஆச்சர்யனின்  அமுத  குரலை  கேட்ட  கூரேசர்  வானில்  பறந்தார்.  
சுவாமி  நான்  எங்கோ  எப்போதோ  யாரோ  ஒரு  சிறந்த   ஸ்ரீ வைஷ்ணவனின்  நெற்றியை  பார்த்து இவன்  எவ்வளவு  அலங்கோலமாக  ஊர்த்வ  புண்ட்ரம் சாத்திகொண்டிருக்கிறான்  பார்””  என்று  கேலி  செய்திருப்பேனோ  என்னவோ. அந்த  பாவ  பிராயச்சித்தமாக  எனக்கு  விழிகள்  இழக்கும்  தண்டனை  கிடைத்ததாக கருதுகிறேன்”’
“” நீயாவது  பாவம்  செய்வதாவது!!!.  குழந்தாய்!,   நான்  செய்த  பாபத்திற்காக தான்  உனக்கு  இந்த  தண்டனை..  நடந்ததெல்லாம்  போகட்டும்  என்னோடு  வாநீயும்  நானும்  செய்ய வேண்டியது  அநேகம்  இன்னும்  உள்ளது”” .   கை பிடித்து  கூரேசனை  ஆசார்யன் கூட்டி  சென்றார், நிஜமும்  நிழலும்  ரங்கநாதர்  ஆலயம்  அடைந்தது.    ஸ்ரீ  வைஷ்ணவம்  மீண்டும்  துளிர்த்தது. கிருமி கண்ட  சோழன்  ஆலயத்தையும்ஸ்ரீவைஷ்ணவ  சம்பந்தமான  அனைத்து  பள்ளிகள், மடங்கள்  நூலகம்  எல்லாம்  நாசமாக்கியிருந்தான்.    இருவரும்  தவறுகளை  எல்லாம்  திருத்துவதில்  முனைந்தனர்ராமானுஜர்   ஆதிசேஷன்  அவதாரம்.   லக்ஷ்மண பெருமாளாக   ராமருக்கு  அவர்  ஆற்றிய  தொண்டு  ராமரை  நெகிழ வைத்து  எப்படி  கைம்மாறு  செய்வது  என தோன்றி  கூறேசனாக  அவதரித்து  ராமானுஜருக்கு  சேவை செய்வதன் மூலம்  கடனை  தீர்த்து கொண்டார்  என  சொல்வதுண்டு.    ராமானுஜருக்கு  115  வயதாகிவிட்டதுகூரேசரும்  இப்போ  கிழவர், கண்ணற்றவர்   ஒரு நாள்  ரங்கநாதரை  தரிசனம்  செய்துவிட்டு  அங்கேயே  நின்றார்  கூரேசர்.
 “”என்ன  கூரேசா  ஏதோ சொல்ல  நினைக்கிறாய்  போலிருக்கிறதே???””  என்றான்  ரங்கன் 
எனக்கு  குறை யொன்று மில்லை  கோவிந்தா!! .  எதோ  உன்  முன்னால் நின்று ஆத்ம  திருப்திக்கு மனசுக்குள்ளேயே  பாடவேண்டும்  என  தோன்றியது.””
“"எனக்கு  இன்று உன்னை கண்டதில் ரொம்ப  மகிழ்ச்சியாக  உள்ளது. எதாவது  என்னிடம்  கேளேன் ??”
“ரங்கா !  என்ன  விளையாடுகிறாயா   எனக்கு  தான் ஒரு குறையும்  நீ  வைக்கவில்லையேநான்  என்ன  கேட்பது உன்னிடம்??”
“அப்படியொன்றுமில்லைநீ எதாவது கேட்டே ஆகவேண்டும் உனக்கில்லை என்றால் ரங்கநாயகிக்காகவாவது, என்  ராமானுஜனுக்காவாவது எதையாவது கேள்!!”
“சரி  ரங்கா, என்னை இந்த  உடலில் இருந்து  விடுவித்து  உன்  பாத கமலத்தில்  சேர்த்து கொள்ளேன் !!!!”
“”ஹும்” “ ஹும்””   வேறே  எதாவது கேள்  கூரேசா !!”
“வேறே  ஒன்றுமே  இல்லையே  என்ன கேட்பேன்.??!”” 
“சரி  உன் விருப்ப படியே  ஆகட்டும். உனக்கு மட்டும்  அல்லஉன்னை  சார்ந்த  அனைவருக்கும்  நீ கேட்ட  வரம்  அளிக்கிறேன் !!”
பரம  திருப்தியோடு கூரேசன்  திரும்பினார்.      ராமானுஜருக்கு   மேற்கண்ட  சம்பாஷனை  தெரியவந்ததுஆனந்தத்தில்  கூத்தாடினார்.
ஒரு சிஷ்யன்  கேட்டான்   ஆச்சர்யரே என்ன  ஆயிற்று ??  “ ச்ரேஷ்டன்  கூறேசனால்  எனக்கும்  நாராயணனின்  பாத கமலப்ராப்தி வரம்  கிட்டியதுநானும்  கூரேசனை  சார்ந்தவனல்லவா”” . தொண்டு கிழவர்  கூரேசர் வீடு சென்றார்.
“கூரேசா”,    நீ என்ன  கார்யம்  செய்துவிட்டாய் உன்  குருவாகிய   என்னை கேட்காமலேயே ??”
கூறேசருக்கு  புரியவில்லைபதில் சொல்லவில்லை  விழியின்றி விழித்தார்
“ஏன் பேசமுடியவில்லை  உன்னால்??    எதற்காக  ரங்கனிடம் உடலிலிருந்து  விடுபட  கேட்டாய்?நான்  உன்னைவிட  முதியவன் இருக்கும்போது எனக்கு  முன்பு  நீ இடம் பிடிக்கவா??  சொல் கூரேசா  ஏன்  அவ்வாறு  கேட்டாய்??”
“சுவாமி!!  நாராயணன் திருவடியில்  பரமபதம்  பெற  முறையாகவே  வேண்டினேன்”
“புரியும்படியாக  சொல்  கூரேசா.   மழுப்பாதே””
“”நீங்கள்  சொல்லிகொடுப்பீர்களே  "முடியுடைஎன்கிற  பாசுரம். அதில் வருமே   "பரம பதம்  சென்ற மூத்தவர்கள்,   இளையவர்கள்  பரமபதம்  அடைய வரும்போது  வாசலில்  நின்று  வரவேற்பர் என்றுஎனக்கு  அதில் உடன்பாடில்லை. இளையவர்கள்  முன்பாக சென்று  மூத்தவர்கள்  வரும்போது  முறையாக மரியாதையுடன்  அவர்களை  வரவேற்க வேண்டும்ஆகவே  நான் முன்பாக செல்ல  வரம் கேட்டேன்””. என்றார்  கூரேசர்.   ஆடிப்போனார்  ஆசார்யன் 
சிரித்துகொண்டே  " என்னருமை  கூரேசா  வைகுண்டத்தில்  வயது  ஏது?  இளையவர் யார்?  முதியவர் யார்?   பாபி யார் ? புண்யசாலி யார்? ஞானி  யார்?  அஞ்ஞானி  யார்?    தெரிந்தும்  கூட,    இங்கு செய்தது போல்  அங்கும்  எனக்கு  சேவை செய்ய  உன் மனம்  விழைந்தது  புரிகிறதுஎன் குழந்தாய் !!  உனக்கு  ஈடேது??”  ஆசார்யன் கண்களில்  நீர்மல்க  கூரேசனை  தழுவிக்கொண்டார் .””நீ தான்  என்  ஆத்மா  உன்னை நான்  எப்படி  பிரிய முடியும்??  இந்த  தள்ளாத  115  வயது  கிழவனை விட்டு  போக பார்க்கிறாயாஎன்னையும்  உன்னோடு  கூட்டி செல்””. கூரேசன் . சிலையாக நின்றார்இறைவன்  முன்பு  நின்றிருந்தபோதும்  இந்த  எண்ணம்  தோன்றாமல்   போனதே  என சிந்தித்தார் . “”என்னை  மன்னித்தது விடுங்கள்  பிரபோ!!” என்று  ராமனுஜரின்  கால்களை  பிடித்தார்.
“கூரேசா  உனக்கு  வரமளித்த  ரங்கநாதன்  எனக்கும்  வரமளிப்பான்  என  எனக்கு  நம்பிக்கை  உள்ளதுநேரே  போகிறேன் எனக்கு முன் போகாமல்  உன்னை  தடுக்க வரம்  தேடுகிறேன்---- இல்லை.    தவறு.   தவறு,   ரங்கனின் ஆக்னையை  மாற்ற  நான்  யார்???நாராயணன் சித்தம்  அவ்வாறென்றால்  அதற்கு  உட்படுவதே  என்  கடமை””
ஒரு கணம்  யோசித்த  ஆசார்யன்  தொடர்ந்தார்  “”கூரேசா!!   நீ போய்விட்ட பிறகு  நான்  எப்படி  இங்கு வாழ முடியும்? பரமபத  நாராயணன்  உன்னை கவர்ந்தான். நீ  அங்கே செல்நான்  இங்கே  ரங்கனாக  உள்ள நாராயணன்  நிழலில் இருக்கிறேன்.””    சில மணி துகள்கள்  உருண்டன  கூரேசன் பரமபதம் அடைந்தார்,   ராமானுஜரை  அனேக  சீடர்கள் சென்றடைந்தனர்அவர்களில்  ஒருவராவது  கூறேசனாக முடியுமா..........?
J.K. SIVAN


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...