Monday, December 3, 2012

MORAL STORY 17 வேணுகானம்




KUTTI  KADHAI   17                           வேணுகானம்

இது  அன்றாடம்  நடப்பது.ஆயர்பாடி  சிறுவர்கள்  சேர்ந்தே  போவர் வருவர் எங்குமேஎப்போதும் உற்சாகமாக இருக்கும்  அவர்களை  பார்த்து ஆயர்பாடி  மக்கள்  அனைவரும்  பெருமிதம்  அடைவார்கள். 
இத்தனை  மகிழ்ச்சி  ஆரவாரம்  எல்லாம்.அவர்களுக்கு  எங்கிருந்து  வருகிறது  என்பதன் ரகசியம்  அனைவரும்  அறிந்ததே.கிருஷ்ணன்  என்கிற  சிறுவன்  தான்  அவர்களை  இவ்வாறெல்லாம்  ஆட்டி  படைக்கிறவன்.  அந்த  சிறுவனே  அவர்களுக்கு  தலைவன்.  பசுக்களும்  கன்றுகளும்  கூட  மறக்காமல்  அன்றாடம் ஒருமுறை  கூட்டத்தில்  மற்ற சிறுவர்களிடையே  கண்ணன்  இருக்கிறானா என்று  முதலில் பார்த்துகொண்டு  தான்  சந்தோஷமாக இரை தேட  செல்லும்.   கன்றுகள்  தாவி தாவி குத்தித்து  ஓட  தாய்  பசுக்கள்  பெருமிதமாக  மிதந்து செல்லும்.  கண்ணன்  ஏதாவதொரு பசுவின் அருகில் 
தான்  நிற்பான்   கூடவே அதன்  கழுத்தை கட்டிக்கொண்டு  நடப்பான் அவன்  இடையில்  இருக்கும்  சிறு  மூங்கில்  குழல்  பகல் பூரா சில சமயம் அந்த  காட்டு பிரதேசத்தில்  அவனது வேணு கானத்தை  பரப்பும்.  சில  சமயங்களில்  சிறுவர்கள் யமுனை நதியில்  குதித்து  நீச்சல் அடிப்பார்கள் விளையாடுவார்கள் . சில சமயங்கள் கூடி பேசி பாடி ஆடுவார்கள்.  கண்ணன் வேணுகான நேரங்களில்  பசுக்கள் எல்லாம் வயிறு   நிரம்ப உண்டு  ஒன்றாக  கூடி  அவனருகே   மர  நிழல்களில்   கூட்டமாக அமர்ந்து   அசை போட்டுக்கொண்டு   கண்மூடி தலையாட்டி கண்ணனின்  குழலிசையை  கேட்கும்.
ஒரு  கன்று  குட்டி  தாயை கேட்டது 
 " அம்மா  உனக்கு  என்னை பிடிக்குமா  கண்ணனின்  குழல் இசை பிடிக்குமா?
"   ஏன்  இரண்டுமே பிடிக்கும்.!  
"   ரெண்டுலே  எது  ரொம்ப  பிடிக்கும்?
".  உன்னை   பார்த்துக்கொண்டே இருக்க  ரொம்ப  பிடிக்கும் ;"  கண்ணன்  குழலிசை கேட்டுக்கொண்டே  இருக்க ரொம்ப  பிடிக்கும் "   என்று  பசு  சொன்னது. 
ஒரு  கன்றுக்குட்டி  மற்றொரு  ஆயர்பாடி  சிறுவன்   ஊதிய குழலை  கேட்டது. "ஏன்  உன்னிடம்  கண்ணன்  ஊதும்  குழலின்  ஓசை  வரவில்லை? அந்த  குழல்  சொன்னது:   " நானும்  கண்ணன்  கையில்  இருக்கும்  மூங்கில்  குழலும்  ஒரே  மரத்தில் இருந்து வந்தவர்கள்  தான்என்னை இந்த  சிறுவன்  கண்ணன் போல்  உபயோகிக்கவில்லை"
இதை கேட்ட  அந்த  சிறுவன்  தன  குழலை  கண்ணனிடம்  கொடுத்து அவன்  குழலை  வாங்கி ஊதினான்.  ஓசையில்   எந்த  மாற்றமும்  இல்லைஅப்போது  கண்ணனின்  குழல் சொல்லியது:    
,  சிறுவா,  நான்  மாற்றமே  இல்லாத மரத்துண்டு  தான்.  நீ ஊதினால்  நான்  அதுவாகவே இருக்கிறேன்.  கண்ணன்  என் மீது  அவன்  காற்றை  செலுத்தும்போது  எனக்கு  ஜீவன்  கிடைத்து  அவன்  அருளால்  அவனின்  ஒரு  பகுதியாகவே  மாறிவிடுகிறேன்.  ஆகவே  தான்  கண்ணன்  ஊதும்போது நான்  அவன்  ஜீவ நாதமாகி  காற்றில்  கலக்கிறேன்".
ஆயர்பாடி  பூலோக  சுவர்க்க பூமியாக  திகழ்ந்ததில்  என்ன  ஆச்சரியம்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...