Saturday, December 22, 2012

moral story 56 மாயை என்றால்.......??



குட்டி கதை  56                         மாயை என்றால்.......??

நாரதரும்  கிருஷ்ணனும்  நல்ல  நண்பர்கள் அல்லவா?.  அடிக்கடி ஏதாவது  நாரதர்  சந்தேகம் கேட்க  அதை  கிருஷ்ணன்  நிவர்த்தி பண்ணுவார்.  அன்று  காலை  இருவரும்  வழக்கம்  போல வாக்கிங் போகும்போது  திடீரென்று நாரதருக்கு  ஒரு  சந்தேகம்.  "கிருஷ்ணாமாயை  மாயை  என்று  நொடிக் கொரு தரம் சொல்கிறோம் உண்மையில்  மாயை என்றால்  என்ன   என்று  கொஞ்சம்  புரியும் படியாக  சொல்லேன்"

"சரி, யோசித்து  பார்க்கிறேன், எப்படி அது  உனக்கு புரிய வைக்கிறது என்று.  நாம்  ஏதோ பேசிக்கொண்டே வந்தோம்  குறுக்கே இந்த சந்தேகம்  கேட்டு  எனது சிந்தனை தொடரை அறுத்து விட்டாயே நாரதா!,. அதோ  தெரிகிறதே  அந்த  மலை வரை  நடந்து செல்வோம்  வா  என்று  இருவரும்  ஏதோ  பேசிக் கொண்டே  நடந்தனர்வழியில்  கிருஷ்ணன்  கொஞ்சம்  நாம்  இங்கே  அமர்வோம்.   "நாரதாஎனக்கு  
ஒரு  உதவி  செய்கிறாயா?"
"சொல்லுங்கள், பிரபு!" 
"ரொம்ப  தாகமாக  இருக்கிறது.  ஒரு  செம்பு  ஜலம்  அதோ அந்த வீடுகளில் ஏதாவது ஒன்றிலிருந்து சீக்கிரம்  வாங்கி வாயேன்".  
" இதோ, நொடியில்   வருகிறேன்"  என்று  சென்ற  நாரதன்  ஒரு  குடிசை  வாசலில்  நின்றான். உள்ளேயிருந்து  ஒரு  அழகிய  பெண்  வெளியே வந்து  என்ன என்று கேட்க,  நாரதன்  ஒரு  செம்பு நீர்  கேட்கப்  போய்  அவள் அழகில் மயங்கி  அவள்  குடும்ப விஷயம்  எல்லாம் கேட்டு அவள் மேல் காதல் கொண்டு அவளை  கல்யாணம் செய்து கொள்ள விரும்பி, அவள்  என் அப்பாவிடம் சொல்லி அவர் அனுமதி வாங்கு என்று சொல்லி, அவன்   மெதுவாக அவரை அணுகி அவர் கடைசியில்  அனுமதி வழங்கி, இருவருக்கும் மணமாகி,  இரண்டு குழந்தைகள்  பிறந்து  ஒருநாள்  அந்த  கிராமத்தில் வெள்ளம் வந்து  அனைவரும்  மூழ்கிவிட  நாரதன்  தன்  மனைவியை  தன்  இடுப்போடு  பிணைத்துக் கொண்டு  தலையில்  ஒரு  சிறு குழந்தையை சுமந்து  மற்றொரு கையில் பெரிய  குழந்தையை  பிடித்தவாறு  தண்ணீரில்  ஒருவாறு தத்தளித்து நீந்தி   கரை சேர  முயற்சிக்கும் போது  வெள்ளத்தில்  தலைமேல் இருந்த  குழந்தை  அடித்துப்  போகப் பட்டு, அதை பிடிக்கப் போய் வலது கையை  சுதாரிக்கும்போது  அந்த  கையில்  பிடித்திருந்த  பெரிய  குழந்தை நழுவி  நீரில்  அடித்துக்கொண்டு போன பின் , ஐயோ  என்று குமுறி,  இடுப்பில் பிணைக்கப்பட்ட   மனைவியையும்  வெள்ளத்தில்  கோட்டைவிட்டு   நிறைய  தண்ணீர்  குடித்து  மயங்கி  கரையில்  ஒருவாறு  தள்ளப்பட்டு  விழுந்தான்.    மெதுவாக  சுய நினைவு  வந்து விழித்து பார்த்த  நாரதன்  எதிரே  கிருஷ்ணன்  நின்று கொண்டிருந்தான்.  ":ஐயோ,  இது என்ன  கொடுமை  பதினைந்து வருஷங்கள் ஆகி விட்டனவே"  என்று  அவன்  வருந்த  கிருஷ்ணன்  சிரித்தான் 
"என்ன,   நாரதா!   நொடியில்  தண்ணீர்  கொண்டு வரேன்  என்று சொல்லி  அரைமணி  நேரமாக   காத்திருக்க  வைத்தாய்  என்னை!"   என்ற கிருஷ்ணனிடம்   "என்ன  அரை மணி நேரமா   பதினைந்து வருஷம்  அல்லவோ  ஆனது 
"  நிஜமாக  தோன்றும்  இது தான்  மாயை  புரிகிறதா"  என்றான்  கிருஷ்ணன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...