Wednesday, December 26, 2012

krishna story 53 தூய பக்தி




குட்டிகதை 53          தூய பக்தி 

ஒரு  தடவை துக்காரம்   பண்டரிநாதனுக்கு ஒரு  லெட்டர் எழுதி   அது  பண்டரிபுரம்  போகும் பக்தர்கள்  மூலமாக கொடுத்து அனுப்பப்பட்டது.  அந்த பக்தர்  நேரே  பாண்டுரங்கன் ஒரு  செங்கலில் நின்று காட்சியளிப்பது  கண்டு சேவித்து வருத்ததுடன்  சொன்னார்
பாண்டுரங்கா,   பாவம், துக்காரம்   ரொம்ப உடம்பு  சரியில்லாமல்  இருப்பதால் நடந்து வந்து  உன்னை பார்க்க முடியவில்லை என்று வருத்தத்துடன்   உனக்கு  ஒரு  கடிதம் எழுதியுள்ளார்  நான்  அதை படிக்கவா --- தேவையே இல்லை ,உனக்குதான் அதில் என்ன  எழுதியிருக்கிறார் என்றே தெரியுமே-- என்று  அந்த  கடிதத்தை ரங்கனின் பாதத்தில் வைத்தார்.    
"ருக்மணி, நம்  துக்கா, ரொம்ப நோய்வாய்பட்டு  நம்மை பார்க்க  வரமுடியவில்லை என்று   விசனத்தோடு எழுதியதை பார்"
'நாதா,   நாமே சென்று அவரைப்   பார்த்து வருவோமே" என்றாள்  ருக்மணி. 
"நீ சொல்வது சரி,  ஆனால்   இங்கு நம்மை காண  வரும் பக்தர்கள்  எமாற்றமடைவார்களே,  நாம்  நம்   கருடனை அனுப்பி அவரை இங்கு  கொண்டுவர செய்வோம்.  என்று   துகாராமுக்கு ஒரு  பதில்  கடிதம்  எழுதினான்  விட்டலன் -  " அன்பு துக்கா, உன்னை  பார்க்காமல் எந்நாளும் இருக்க முடியவில்லை. கருடனை இந்த கடிதம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன்  அவன் மீது  ஆரோகணித்து  உடனே புறப்பட்டு வா. மற்றவை நேரில்-  உன்  பாண்டுரங்கன்"

தான்  போகமுடியாததால் தெருவில் பண்டரிபுரம் போகும்  பக்தர்களையாவது பார்ப்போமே என்று  வாசலில்  படுத்திருந்தார் துக்காராம். அவர் முன் நின்று கருடன் "விட்டலன் உங்களை  கையேடு அழைத்து வரச்சொன்னார். இதோ கடிதம்"  என்ற போது 
' ஐயோ, இது அபசாரம். நீங்கள்  நாராயணனை  தாங்கி செல்பவர், நானோ அவர் காலணி யிலிருந்து  விழும் தூசிக்கும் கீழானவன்  உங்கள்  மீது  ஏறி உட்காருவதா?   தங்கத்தால்  செய்தாலும்  செருப்புக்கு  இடம் காலின் கீழ் தானே, தலையில் அல்லவே!"  அவரையே  முடிந்தால் வரசொல்லுங்களேன்"  என்றார்  துக்காராம் 
கருடனிடம் செய்தி அறிந்த  விட்டலன் "  வா  ருக்மணி  நாமே  செல்வோம்"
பண்டரிபுரம் செல்வோர் வருவோரையே  ஏக்கமுடன் பார்த்திருந்த போது ஒருநாள்  கருடன் சர்வாலங்காரமுடன்  ருக்மணியோடு விட்டலனை துக்கா ராம் வீட்டுக்கு முன் இறக்கியவுடன் கிருஷ்ணன்  ஓடோடி வந்து துக்காராமை மார்போடு அணைத்து கொண்டான்.    பக்தனும்  பகவானும் ஒருவரையொருவர்   மனமார தழுவினர்.  

 இதுவல்லவோ  இணையில்லாத பக்தி பரவசம் 
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...