Tuesday, December 11, 2012

MORAL STORY 39 ஜாதகம் - ராசி பலன்



KUTTI KADHAI 39        ஜாதகம் - ராசி பலன்

ந்த குழந்தை பிறந்தபோது,  அதை கொஞ்ச யாரும்  வரவில்லை. இரவோடு  இரவாக அதை  தாயிடமிருந்து பிரித்தாகிவிட்டது. பிறந்ததே  வெளியே  தெரியாதபோது  பிறந்ததை  யார்  கொண்டாட
முடியும்?.  வளர்ந்ததும் எங்கோ! . அதற்கு  ஜாதகம் பார்த்தார்களா?
 நல்ல  நாள்  பார்த்து  பேர்  வைத்தார்களா?  கருப்பழகன்  ஊரில்  
யாராலும்  கிருஷ்ணன்  என்றே  அழைக்கபட்டான்.  
அதெல்லாம்  சரி,    இதற்காக  அவனுக்கு  ஜாதகம்  என்று  ஒன்று  
இல்லாமலா  போய் விடும். அவன்  பிறந்த நாள், நேரம்  எல்லாம்  
சரியாக  தெரிந்ததால்  அதை வைத்து கொண்டு  பல   ஜோசியர்கள்  
கணித்தது  அவன்  வாழ்க்கையை  படம்  பிடித்து காட்டி  விட்டதே! அவன்  ஏன்  மற்றவர்களை  விட  வித்யாசமாக   இருந்தான்??அவன்  ஏன்  ஒரு  காந்த சக்தியாக  இருந்தான்? . 
கண்ணற்ற சூர்தாசை கேட்டால்  அவர்  கவிதை ரூபமாகவே  அவன்
ஜாதகத்தை  பாடிவிடுகிறார்! .  அவர் சொன்னது தான்  என்ன?
அவன்  பெரும்  புத்திசாலிபேர் அழகன்,  பெரிய செல்வந்தன், மாணிக்கம், மரகதம், வைரங்கள் ஜொலிக்கும்  16000 மாளிகைகளாம்.அவனுக்கு!  
சொன்னது எல்லாமே  அவன் செல்வத்தின்  அளவில்  துக்குணியூண்டு  
என்றால்  பார்த்துகொள்ளுங்களேன்!  எல்லா கிரகங்களும் அவன் சொற்படியே கேட்கும்.  தியாக செம்மல்.  அவன்  ஒரு தனிப்பிறவிஇறைவனின்  மானுடஉரு.  
அன்பை  தருவதிலும்  தானே  அதுவாகவும்  ஆனவன்அவன்  ரிஷப 
ராசிக்காரன்யா!! . லக்னாதிபதி சுக்ரன்!  கேக்கணுமா?”  ரோஹிணி  நக்ஷத்ரம் வேறே! .  சந்திரன்,  சனிஅங்காரகன் எல்லாம் உச்சத்திலே இருக்கா.   அவா அவா   கிரகத்திலே சூரியன்குரு,  புதன்  உக்காந்திருக்காரிஷப ராசியிலே லக்னத்தில்  சந்திரன் அக்கடான்னு  இருந்தா  ஜாதகன்,  அழகனாபேரும்  புகழுமா  ஆள் மயக்கியா, செல்வத்திலே புரளாம என்ன பண்ணுவான்?  ஒண்ணாம் மடத்திலே  கேது ங்கிறதாலே  கொஞ்சம்  அதிகமாவே கேளிக்கை உண்டுஅபவாதங்களும் கூட!.  
3ம்  வீட்டிலே  செவ்வாய்   நீச்ச பங்கனா இருக்கான் என்கிறதாலே   ஆசாமி  
யுத்தத்திலே  படு  தைர்யசாலி!  ரோகிணி அழகி,   சந்திரனை  ஆக்ரமித்தவள்
எனவே  சந்திரனும் ரோஹிணியும்  சேர்ந்த  ஜாதகன்  அழகனாக ஆள் மயக்கியாக  இருந்ததில்  என்ன அதிசயம்?.  ரிஷபத்துக்கு  பசு  நேசம்  உண்டே!!  இந்த ராசிக்காரன் பசுக்களிடையே பிரபலமானவன்  இதனால் தானோ??   6ல்  புதன்,  10ல் சனி  பிரதானமாக  இருந்து  ஜாதகன்  தர்ம ஞாயத்தில்  ஸ்ட்ராங்காக  இருக்க  உதவியிருக்கிறான்அங்காரகன்  ராஹுவுடன்  சேர்க்கையால்  ஜாதகன்  ராஜதந்திரி.  
இதை கேளுய்யா!!  ரெண்டுலே உடைமையானவன்  புதன்; படு  ஜோரா 5ல்  இருக்கான்.  அதனாலே  வாய்லேருந்து  வர வார்த்தை எல்லாம்
முத்துன்னா முத்து தான்பேச்சிலே மயங்காதவா  புத்திசாலித்தனத்தால்
அடிமையாகாதவா  கிடையாது. இதை பாரு.  சூரியன்  தன்னுடைய  வீட்டிலே
குருவோட  ஸ்வஸ்தமா  இருக்கான். எதிரிகள்  பொடிப் பொடி!!  ஆசாமியை  அசைக்க முடியாது.  
இது  என்ன வேடிக்கை.  7ம் வீட்டுக்கு  சொந்தக்காரன்  அங்காரகனோடு  
களத்ரகாரகன் சுக்ரன் சேர்ந்துட்டதாலே  மனைவிகள்  கொஞ்சம்  
ஜாஸ்தி தான். பரவாயில்லை!!  ஏன்னா, ராகு  பக்கத்திலேயே இருக்கான். தெய்வீக  உறவுதான். 9லே, அதான்,  சனியோட இடத்திலே,  கேது இருக்கான்.  
யோககாரகனா சனி  7ல் இருந்துண்டு  வெற்றி மேலே  வெற்றியா தரான். யுத்தத்திலே  ஜாதகனை  அடிச்சிக்க  ஆளு  கிடையாது. புரியறதா??.  
சனி தான்   ஆயுள் காரகன், வர்கோத்தமன்  ஆச்சே. ஆசாமிக்கு  
பூரண  வயசு.  கிருஷ்ணன்  தான்  125 வயசு இருந்தானே   
எல்லாத்துக்கும்  காரணமான தெய்வத்தின் ஜாதகத்தில்  எல்லாமே 
இருப்பது  ஆச்சர்யமா!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...