Friday, December 15, 2017

NEELAKANTA SIVAN




இவர் ஒரு தமிழ் தியாகராஜ ஸ்வாமிகள்...j.k. sivan

நேற்று இரவு ஒரு அசாத்தியமான பாடலை கேட்டு அனுபவித்தேன். ''ஆனந்த நடமாடுவார் தில்லை.''.... என்ற

நீலகண்ட சிவன் (1839-1900) கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கர்நாடக இசை மேதை. இயற்கையாக அமைந்த ஞானம். சாதாரண இசைப் பயிற்சி பெறாதவர்.

நீலகண்ட சிவன்ள நாகர்கோவில் பக்கம் உள்ள வடிவீஸ்வரத்தில் 1839 ஆம் ஆண்டில் பிறந்தார், நன் பிறப்பதற்கு நூறு வருஷங்களுக்கு முன்பு பிறந்தவர். அந்தக்கால திருவாங்கூர் தலைநகரான பத்மநாபபுரத்தில் வாழ்ந்தவர். அவரது தந்தை சுப்பிரமணிய ஐயர்’ பத்மநாபபுரம் நீலக்கண்டஸ்வாமி கோவிலில் ஒரு அதிகாரியாக இருந்தார். அவரது தாயார் அழகம்மாள்.

சிவன்ஒ சில வருஷங்கள் கிராமப்பஞ்சாயத்து தலைவராக வேலை பார்த்தார். ,மதாச்சார பழக்கங்களை பின்பற்ற வேலையை விட்டுவிட்டார்.

இவரது பாடல்கள் சிலவற்றை நான் முன்பே கேட்டு ரசித்தவன். சங்கீத மஹாதேவ சாரம் (ராகா பவ்லி); என்றைக்கு சிவக்கிருபை வருமோ, என்ன வந்த்தாலும் நான் உன்னை மறப்பதில்லை ; ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்.... ஆஹா எம். கே. தியாகராஜ பாகவதர் பாடிய இந்த பாடல் இன்னும் காதில் ஒலிக்கிறது. அதை இந்த கட்டுரையுடன் சேர்த்திருக்கிறேன். லிங்க் சொடுக்கி கேளுங்கள்.

நிறைய பாடல்கள் இயற்றியிருக்கிறார் நீலகண்ட சிவன். தமிழ் மொழியில் மிகவும் பிரபலமான பாடல்கள்.

சிறு வயது முதலே கவி இயற்றும் திறன் அமைந்திருந்தது. கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகளை ஒருதரம் சந்தித்தபின் வாழ்க்கை பாதை திசை திரும்பியது. தெய்வீக பாடல்கள் நிறைய தோன்றியது. பஜனை சம்பிரதாய கீர்த்தனைகள் அவரது நேரத்தை ஆட்கொண்டது.

ஏறக்குறைய 2,000 கிருதிகள் பண்ணி இருக்கிறார். நீலகண்ட தாசர் என்று தமது முத்திரை பதித்தவர். நிறைய சிவன் கோவில்களுக்கு சென்று பாடி அந்தந்த க்ஷேத்ர ஸ்வாமிகள் மீது பாடி எல்லோரும் அவரை 64வது நாயன்மார் என்று சொல்லும்படி பேர் எடுத்தவர். ஒரு முக்கியமான விஷயம் இவரது பிரதம சிஷ்யர் தான் பாபநாசம் சிவன்.

பல வருஷங்கள் புத்ர பாக்யம் இன்றி பெற்றோர்கள் அம்பாள் அழகம்மையை வேண்டி பால் காவடி சுமந்து பிறந்த பிள்ளைக்கு சுப்ரமணியன் என்று பேர் வைத்தார்கள். குலதெய்வமான முருகன் மீது ''உன்னைக் குலதெய்வம் என்று நினைத்து சதா என் உள்ளம் நினைப்பது நீ அறியாததா...'' என்ற பாடல் முருகன் மீது அமைந்துள்ளது.

பத்மநாப புரம் ஆலயத்தில் நீலகண்டேஸ்வரர் ஆனந்தவல்லி சந்நிதிகளில் அவரை அடிக்கடி பார்க்கலாம். பஜனை பாடிக்கொண்டே இருப்பார். முத்து தாண்டவர் அருணாச்சல கவி பாடல்கள் அவருக்கு அம்மா மூலம் பாடமாகி இருந்தது. பதினாலு வயதில் அந்த கால வழக்கப்படி கல்யாணமும் ஏற்பாடானது.

தாணு ஐயர் என்ற ஜோசியர் ''இந்த பயலுக்கு கல்யாணம் பண்ணினால் அந்த பெண் ஒரே வருஷத்தில் விதவையாகிவிடும் என்று ஜாதகம் சொல்கிறதே '' என்றார். வேறு பெண் பார்க்கவும் திட்டம். சுப்ரமணியன் இதை கேட்டதும் வீட்டை விட்டு சென்றுவிட்டான்.சுசீந்திரத்தில் ஸ்தாணுமாலயம் சென்றான்.

''இல்லறமே நல்லறம்'' என்று ஒரு அசரீரி அங்கே அவனுக்கு கேட்டது. மணவாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே பக்தி யில் தொடர முடிவெடுத்தான் . அப்பா அம்மா ஏற்பாடு பண்ணிய பெண்ணை திருமணம் செயது கொண்டான்.

18வயதில் வீட்டை விட்டு சொல்லாமல் வெளியேறிய சுப்ரமணியன் ஸ்தாணுமாலயன் தேரில் ஏறி மறைந்து கொண்டு மூன்று நாள் அன்ன ஆகாரம் இன்றி இருந்தான். அவனது ஒரே நோக்கம் பகவானை எப்படியாவது தரிசிக்க வேண்டும். தியானத்தில் ஆழ்ந்தான். பல்லி பாம்பு தேள் ஆகியவை சூழ்ந்த போதும் கவலைப் பட வில்லை.

மூன்றாம் நாள் இரவு யாரோ ஒரு தம்பதி எதிரே தோன்றினார்கள். பசித்திருந்த அவனுக்கு உணவு, பால், பழங்கள் கொடுத்தார்கள். வாயில் வெற்றிலை பாக்கு தாம்பூலம் அவனுக்கு அந்த தாய் ஊட்டினாள். மின்னல் போல் உடனே அவன் முகத்தில் தேஜஸ் கூடியது. கோவிலை விட்டு வெளியேறும்போது சுப்ரமணியன் மற்றுமொரு திருஞான சம்பந்தராகி இருந்தான். ஞானப்பால் பருகியவன் அல்லவா? ''பண்டென்ன பூசை யான் செய்த பயனோ அலாது பரமனின் கருணையிலோ பாவி என்னை ஆட்கொள்ள வேண்டுமென ''என பாடினார்.

ஆனந்தவல்லியை நெஞ்சுருக நன்றியோடு இரு கைகூப்பி பாடினார் இதுவரை சுப்ரமணியனாக இருந்த நீலகண்ட சிவன்: ''தாயே எனக்கு அருள் தா அனைத்துலக தாயே என்னை கை விட்டு விடாதே''

அவரது முதல் க்ரிதி ''ஸ்ரீ நீலகண்ட தசகம்'' சில அற்புத பாடல்களை ஒன்று ரெண்டு பேர் சொல்கிறேன் : ''என்ன விதம் பிழைப்போம், எளியோரே , நாம் எப்படி தேறுவோம் சொல்வீரே ". " பணமே நீ ஒரு பிணமே ''
லலிதா மஹாத்மியம் அவரது ஒரு சிறந்த படைப்பு.

அவர் மாமனார் வில்லன் நம்பியார். சிவனது அருமை அறியாது நூற்றுக்கணக்கான கிருதிகள் எழுதி வைத்திருந்ததை எல்லாம் தெருவில் வீசி விட்டார். இரவில் விளக்கில் எண்ணெய் ஊற்றுவதில்லை. இருட்டில் கிடக்கட்டும். இவன் எழுதவில்லை என்று யார் அழுதார்கள்''. இப்படி ஒரு ஆசாமி அந்த மாமனார். சிவன் கவலைப்படவில்லை. வெற்றிலை வாயில் குதப்பிக்கொண்டே இருப்பவர்என்பதால் அடிக்கடி வாய் கொப்புளிக்க ஒரு சொம்பில் ஜலம் வைத்திருப்பார். அந்த சொம்பில் இருந்து கொஞ்சம் ஜலத்தை விளக்கில் விட்டு விளக்கு எரிந்தது!! இதே போல் கோவிலிலும் ஒரு தரம் எண்ணெய் இல்லாத போது குளத்து ஜலத்தை விட்டு விளக்குகள் எரிந்து இருக்கிறது.

108 சிவாலயங்கள் சென்ற மஹான் நீலகண்ட சிவன். எத்தனையோ அதிசயங்கள் நிகழ்த்தி இருக்கிறார். .
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

திருநெல்வேலி அருகே ஒரு ஊர். கருங்குளம் என்று பெயர். மழை பெய்யாமல் பஞ்சம் மக்களை கொடுமைப்படுத்தியது. சிலர் நீலகண்ட சிவனை அந்த ஊருக்கு அழைத்து வந்தார்கள்.

''நீங்கள் சிவ பக்தர். மஹான். எப்படியாவது எங்களை இந்த பஞ்சத்திலிருந்து விடுவிக்க மழை தருவிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்கள்.

''பகவானே மார்த்தாண்டேஸ்வரா, தாயே குலசேகரி , நீயே கதி '' என்று அந்த ஊர் சிவனை வேண்டி, நீலகண்ட சிவன் நெஞ்சுருகி ஒரு விருத்தம் பாடினார்:

" பிழைகளெல்லாம் நீ பொறுப்பாய் பெற்றவளே, பிள்ளைகளுக்கு உன் கழலிணை திருவடிகளே துணை அல்லதோர் கதி காணோம் கண் திறவாய், மழையென வந்தருள் தருவாய் '' என்று பாடுகிறார். இந்த பக்தி பிரவாகத்தை தொடர்ந்து ஜோ என்று வானம் பொத்துக் கொண்டு மழை கொட்டோ கொட்டு என்று பெய்கிறது.
நாட்கணக்கில் மழை தொடர்கிறது.

ஒரு முறை திருடர்கள் அவர் பிரயாணம் செய்யும்போது அவரைத்தடுத்து அவரிடமிருந்து பொருள்களை கொள்ளையடிக்கிறார்கள். அவர் கொள்ளைக்கார்கள் ஓடும்போது நிறுத்தி ''என்ன அவசரம், இந்த வண்டியில் என்னுடைய வாத்தியங்கள் சிலதும் இருக்கிறதே அதையும் எடுத்துச் செல்லுங்கள்'' என்று அழைக்கிறார். பேராசை பிடித்த திருடர்கள் வண்டியில் இருந்த அவரது பஜனை சங்கீத வாத்தியங்களை எடுத்துச் செல்ல தொடுகிறார்கள். அவ்வளவு தான். அவர்கள் கைகளும் கால்களும் புஸ் என்று வீங்கி கைகால்களை .அசைக்க முடியவில்லை.

கண்களில் நீர் மல்க அந்த கொள்ளைக்கார்கள் நீலகண்ட சிவன் பாதங்களில் விழுகிறார்கள். அவர் அவர்களை திருந்தி நல்லவர்களாக வாழ ஆசீர்வதிக்கிறார். அவரிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருந்தது.


ஒரு கிராமத்தில் இருக்கும்போது அவரது சிஷ்யர்கள் அங்கே இரவில் தங்க ஏதோ ஒரு வீட்டி திண்ணையில் படுக்க இடம் தேடினார்கள். வீட்டுக்காரன் அனுமதிக்க வில்லை. இதை கவனித்த சிவன் திடீரென்று

''அடாடா, நாளை என்னை தேய்த்து குளித்து விட்டு இறக்கப்போகும் இவன் ஒரு திண்ணையைக் கொடுத்து உதவ மறுக்கிறானே '' என்று சொல்கிறார். அதே மாதிரி மறுநாள் அந்த வீட்டுக்காரன் எண்ணெய் தேய்த்து குளிக்க ஆற்றுக்கு சென்றவன் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்படுகிறான். அவன் பிணம் மட்டும் எங்கோ கரையில் ஒதுங்குகிறது. தன்னை எந்த தீங்கு செய்தலும் பொறுக்கும் அவர் தனது சிஷ்யர்களுக்கு, பக்தர்களுக்கு, துன்பம் நேர்ந்தால் தாள மாட்டார்.

அவரிடம் இன்னொரு பழக்கம். எங்கே சென்றாலும் மதியம் உணவுக்கு வரும்போது நிறைய பெரு சாப்பிடும்படியாக சாதம் வடியுங்கோ என்று சொல்வார். வீட்டில் அரிசி தானியங்கள் இருக்கிறதா என்று கூட தெரியாது. முக்கால்வாசி அரிசி மணியளவு கூட இருக்காது.

அப்படித்தான் ஒருநாள் இரவு திடீரென்று ராத்திரி எட்டு மணிக்கு தனது மகனை கூப்பிட்டார்.

''நாளைக்கு ஒரு ஆயிரம் பேருக்கு அன்னதானம் பண்ணணுமே. ஏற்பாடு பண்ணு ''
''ராத்திரி எட்டு மணி ஆயிடுத்தே. இனிமே இருட்டில் எங்கே போய் என்ன பண்றது'' என்று கவலைப் பட்டான்.

''எட்டு மணின்னு கவலைப்படறியே. நாளைக்கு காலம்பற ஆறு மணிக்கு பாரு'' என்று சொல்லி விட்டு போய்விட்டார் சிவன்.

காலை ஆறுமணிக்கு சொல்லி வைத்தாற் போல, வண்டி வண்டியாக அரிசி பருப்பு தானியங்கள் எல்லாம் வீட்டு வாசலில் வந்து இறங்கின. யாரோ மஹாராஜா வின் பக்தர்கள் அனுப்பினதாம்.

தமிழ் தியாகராஜ ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்ட பக்தர் நீலகண்ட சிவனுக்கு தனது அந்திம காலம் நெருங்குவது தெரிந்தது. வயது அறுபது ஆரம்பித்தது. குடும்பத்தாரை அழைத்தார்

''எனக்கு உலக வாழ்க்கை போறும்''. மனைவி மக்கள் துடித்து போனார்கள் இதை கேட்டு. சேதி விரைவில் எங்கும் பரவியது. மஹானுக்கு கபால மோக்ஷம் நடக்கப்போகிறது. மூன்று நாட்கள் இரவும் பகலுமாக விடாமல் பஜனைகள் தொடர்ந்து ஒலித்தன.

''சிவன் உரக்க '' மஹாதேவ, மஹாதேவ, மஹாதேவா என்று உன்னை அழைத்தேன்'' என்று பாடினார். விபூதி அலங்கரித்த இரு கரங்களையும் மேலே தூக்கினார். கபாலம் வெடித்தது. பிராணன் மேலே எழும்பி பரம சிவனோடு ஐக்கியமானது. அவர் வழிபட்டு பூஜை செய்து வந்த சிறிய சிவலிங்கம் பூஜை அறையின் கதவை பிளந்து வெளிப்பட்டது மேலே சென்று விண்ணில் மறைந்தது.

எத்தனை எத்தனை மஹான்கள் நம்மோடு வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது நாம் எவ்வளவு புண்ணியம் செய் திருக்கிறோம் என்று புரியும்.

PLEASE CLICK THE LINK https://youtu.be/vdodll1aKns TO ENJOY MKT BAGAVATHAR SONG ''ORUNAAL ORUPOZHUDHAAGILUM '' IN THE OLD MOVIE ''THIRU NEELAKANTAR''

Thursday, December 14, 2017

HANUMAN AT GUDUVANCHERI







The Navagraha Yoga Hanuman in Guduvancheri...
J. K. SIVAN .

Real Estate was once a flourishing business in big cities, particularly in and around Chennai, resulting in concentration of population in certain areas only creating all sorts of problems. Water shortage, too many vehicles with no parking space, price hike in certain basic commodities and what not.

Guduvancheri is one such satellite town near Chennai. It was a sleepy village till recently and picked up its share of real estate prospects. Many agricultural fields have now disappeared yielding place to rising flats with not much change in infrastructure like proper roads, street lights etc., Price of vacant plots had gone up beyond imagination, for no reason whatsoever, in various mushroom nagars. One such is Mahalakshmi nagar where I found the admixture of both village type houses still existing until some prospective real estate trader usurping them and newly constructed flats here and there. along with certain new colorful structures.

An old bearded man welcomed me and the group. It was an ordinary housing plot of about a ground or so, in which there is a sannidhi for Anjaneyar, Goddess Bhavani, a little space for the relaxing Ananthanarayanan, et al. This temple is not far away from the main GST Road and is closer to Nandivaram Sivan temple.

The bearded man invited us for Navarathri celebrations in this temple, and we took little Aiswarya who has a rich voice and promising voice. She has won prizes for her carnatic music vocal performances.

She sang about 10 selected songs. Sri Keeranur Ramamurthi who was with us spoke a few words having visited this temple at its inception and earliest kumbabishekam, before I took over and talked about the prowess and powers of goddess Durga Parameswari and Anjaneyar.

Now let me tell you about the Anjaneyar in this remote small temple. The Hanuman here is quite rare. He has Adiseshan over his head as an umbrella, has four hands, Chathurbujas, is a Trinethra, the three eyed, and his third eye on His forehead is visible when the Naamam (thiruman) plate is shifted aside. I remember having seen such a hidden third eye of Lord Narasimha at Singaperumal koil. The Hanuman has all the nine planets (nava grahas) all over Him, Rahu at the back, Kethu over His head, moon and saturn, sun, sukra, Angarakan et al at various parts of His huge body.

This Hanuman is known as ARULMIGU SRI THRINETHRA CHATHURBUJA, NAVAGRAHA YOGA ANJANEYAR. He is seated in a yoga posture with two hands in folded position on his lap. This temple is known as Sri Yoga Santhosha Peetam.

This temple came to be established purely through hard work and earnest efforts of the bearded man. He was once a Tamilnadu Govt Pallavan bus conductor and a devotee of Hanuman for long.

Oneday he had a strange dream in which Hanuman appeared showing His huge feet to the devotee. The urge for constructing a small temple somewhere for Him, compelled ''Maruthi Dasar'', the bearded man, the poorvasrama bus conductor, who recalls the miracle in acquiring a piece of land in Mahalakshmi Nagar, Guduvancheri. The temple was construted about ten years ago where Maruti Dasar lives in a small room. Slowly and steadily the sannidhis of Hanuman, Bhavani Amman, and a small sannidhi for Bala Sayana Ranganathan have all been constucted with public support and cooperation of devotees in and around Guduvancheri.

It may be interesting to note that Maruthi Dasar wears only a gunny cloth (jute bag material) instead of a dhoti and is breathing Hanuman always.

It is worth visiting this temple whenever you pass through Guduvancheri and have the divine dharshan of Sri Thrinethra Chathurbuja Navagraha Yoga Anjaneyar, a rare combination of power and divine love.

ENGAL ARASAN



                                  இப்படிப்பட்டவன் அல்லவோ  ஆள வேண்டும்.         
    
இப்போதெல்லாம்  ராஜாக்கள் இல்லை.  ராஜா என்ற பெயர் இருந்தாலும்  ஆளுவதற்கு சிலர் வந்தாலும் அவர்களே நாட்டை சீர்கேடாக்குவதில் முதல் இடம் பெற்று  துரோகம் செயகிறார்கள்.  ஒரு  நாட்டில் எல்லோரும் நன்றாக வாழ வேண்டுமானால் (நான் அக்காலத்தைப் பற்றி சொல்கிறேன் என்பது கவனமிருக்கட்டும்) சிறந்த அரசன் தேவை. அன்பும் பண்பும் கொண்ட மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்களே. அந்த மாதிரி அரசர்களும் மக்கள் நலத்தையே மனத்தில் கொண்டு ஆண்டுவந்தார்கள். 


எங்களுக்கு அவ்வாறே ஒரு அரசன் கிடைத்தான். நாம் மிக்க பாக்ய சாலி என்பது நன்றாக நினைவில் இருக்கட்டும்.

நம் ராஜா சிறந்த குணவான். 'எடுத்தேன் கவுத்தேன்'  பேர்வழி அல்ல. எதிராளிக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கொடுத்து பிறகு தான் தண்டிப்பான். அவன் செய்வதைப்பார்த்தால்  என்ன இவ்வளவு கொடுமைகள் எதிரிகள் செயதும் பேசாமல் பார்த்துக் கொண்டு சிரித்துக்கொண்டு  இருக்கிறானே...நாள், மாதங்கள் நகர்ந்து வருஷம் ஒன்று கூட ஓடிவிடும்போல இருக்கிறதே என்று ஐயம் முதலில் நமக்கு ஒருவேளை தோன்றும். ஆனால்  எங்கள் ராஜாவுக்கு நன்றாகவே தெரியும் எப்போது அணைக்கவேண்டும், எப்போது அழிக்க வேண்டும் என்று. தீயணைக்கும் எஞ்சின் ஓடாது, நகராது. ஆனால் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அல்லவா. தக்க நேரத்தில் அது பறப்பது போல் எதுவும் வேகமாக ஓடாது.

எங்களது ராஜாவின் பராக்கிரமம் கண்டு திகைப்போம். அவனை அறியாமல் தவறாக நினைத்து நினைத்து நாம் வாடின நாட்கள் மறைந்து யுகமாக முடிந்து போகும். அவன் யாரையாவது எதிர்க்கவேண்டுமானால், படைகள் சேர்க்க ஆரம்பிக்க மாட்டான், ஆள் படை அம்பு தேட இது எதையுமே தேட நாட மாட்டான்.

''இவனால் என்ன செய்யமுடியும்? வீரமற்ற கடையன், இடையன், பயந்தாங் கொள்ளி, பெண்கள் பின்னே சுற்றுகிறவன்'' என்றெல்லாம் எதிரிகள் ஏசினாலும் அவன் பதில் சிரிப்பு ஒன்றே. 

ஒரு விஷயம் ஞாபகமூட்டுகிறேன். பொல்லாத இரக்கமற்ற அவனது மாமனே , அவனை அழித்துவிடவேண்டும் என்று அவன் சிறு குழந்தையாக இருந்த போதே ஒருத்தர் பின் ஒருத்தராக அநேக பலமிக்க ராக்ஷதர்களை அனுப்பினாலும் அவன் அவர்களை எதிர்கொள்ள நொடியில் அழிக்க, ஒழிக்க, எந்த முஸ்தீபும் தேவை இன்றி  ஆடிப் பாடிக்கொண்டு தானே இருந்தவன்.  அவன் இருந்த ஊர் மக்கள் மயங்கி,  கலங்கி,  மழை இல்லையே பயிர்கள் வாடுகிறதே என என்று கவலையுற்ற போ து நம் அரசன் கவலை கொண்டானா? அவன் தானுண்டு தனது குழலுண்டு என்று பசுக்கள், கன்றுகள், மான்கள், மடந்தைகள் என்று விளையாடிக் கொண்டிருந்தான். தக்க நேரம் வந்தது. கடுமழையிலிருந்து அவர்கள் அனைவரையும் காக்க, மலையையே சுண்டு விரலில் தூக்கி நின்றவன் நமது அரசன் அல்லவா?

எங்களுக்கு ஒரு கதி காட்டு என்று அவனிடம் சென்றால் தனது கால் கட்டைவிரலை கையில் பிடித்து வாயில் போட்டுக் கொண்டு சிரிப்பான் அந்த ராஜா குழந்தைப்பருவத்திலேயே. இது எதை உணர்த்தியது ? ''என் கால் இருக்கும்போது உனக்கென்ன கவலை '' என்று நமக்கு அவன் உணர்த்தியதன் அர்த்தம் புரிந்து கொள்ள நமக்கு தான் வெகு காலம் நேரமாகிறது.

அவன் நம்மைக் காப்பவன் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். அவன் எங்கோ மறைந்து வாழ்ந்தான். வளர்ந்தான். இருந்தாலும் சும்மாவா அங்கிருந்தான்?. இருந்த இடத்திலேயே அரக்கர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்துக் கட்டி அல்லவோ உலகம் காத்தான். அவனது சட்டத்தில் ''தானே திருந்து,  நிறைய நேரம் காலம் தருகிறேன், இல்லையேல் தீர்த்து விடுகிறேன்'' என்ற ஒரே நிபந்தனை தான்.

ஒரு ராஜாவுக்கு என்னென்ன தெரியவேண்டும் என்று எங்கள் ராஜாவிடம் தான் மற்றவர் தெரிந்து கொள்ளவேண்டும். தந்திரம், மந்திரம்,சர்வ சாதாரணம் அவனுக்கு. தான் வலிமையுள்ளவனாக காட்டிக் கொள்ளவே மாட்டான். எங்க ராஜாவிடம் தான் ஆங்கிலேயன் camouflage என்றால் என்ன என்று கற்றுக்  கொண்டானோ?

என் ராஜா விசித்ரமானவன். புரிந்து கொள்ள எளிதானவன். அதே சமயம் புரிந்து கொள்ள முடியாதவன். இரண்டுமே எப்படி? காலம் கனிந்தால் புரிபவன். அமையான பசுவின் கன்று போல் சாது என எண்ணி தீங்கிழைக்க நினைப்பவர் உலகத்தையே அசைக்கும் ஆலகால விஷத்தைவிட அவன் கொடியவன் என்று அனுபவித்துப் புரிந்து கொள்வார்கள். இது நான் சொல்ல வேண்டாம் சரித்திரம் பேசுகிறது.

நம் ராஜா பற்றி சொல்லவேண்டுமானால் துஷ்ட நிக்ரஹன், சிஷ்ட பரிபாலனன். எதிரிகளை வேர் மட்டுமல்ல வேரடி மண்ணும் இல்லாமலேயே வெந்து போக பகைவரைச் சுட்டுப் பொசுக்கிவிடுவான். அதே நேரம் துன்பம் எதுவாயினும் '' என் ராஜா, கண்ணா '' என்று மனமுருகி வேண்டினால், இந்த பூமி மட்டுமல்ல, வானமும் கூட ஆயிரமாயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்கள் எல்லாமே ஒட்டு மொத்தமாக கணத்திலே மாற்றிவிடுவான் அந்த மூங்கில் மந்திரக் கோல் மன்னன்.

நேரம் வந்தால் மட்டுமே, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எங்கள் ராஜா வேறு வழியின்றி அவனது பிரத்யேக ஆயுதமான சக்ரத்தை கையில் எடுப்பான். அப்போது தர்மம் பாரில் தழைக்க வேண்டும், தக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். இதை நிறைவேற்றும்போது பகை எந்த ரூபத்தில் வந்தாலும், தடை எப்படிப்பட்ட தானாலும் மாய்ந்து விடும் என்பதில் சந்தேகம் வேறா?

எங்கள் ராஜா கண்ணனைப் பற்றி நினைத்தாலே அவன் புகழ் பேசினாலே கவிதையாக வார்த்தைகள் வந்து விழுகின்ற மாயம் கவனித்தீர்களா? அவனைக் காலமெல்லாம் போற்றுவேன்.

வாசலில் பெருக்கி மெழுகி கோலம்போட்டு திண்ணையைத் துடைக்க வந்தவனைக் கூட தனது மந்திரியாக்கிக் கொள்ளும் அன்பு படைத்தவன் அல்லவா எங்கள் ராஜா.

அடுத்த வேளைச் சோற்றுக் கென்ன வழி என்று தெரியாமல் அவனைத் தேடி வந்தேனே? என்ன செய்தான் தெரியுமோ? எனக்கு நிகர் யாருமில்லை என்று உலகோர் போற்றுமளவிற்கு என்னை செல்வந்தனாக்கினான் - இது குசேலனே சொல்வது போல் காதில் விழுகிறதா? அப்படியென்றால் முற்றிலும் சரியே.

எங்கள் ராஜாவிடம் செல்லும்போது எனக்கு ஒரு வித்தையும் தெரியாதே. வெறும் சோற்றாலடித்த பிண்டம். எண்ணிப்பாருங்கள் இப்போது எனக்கு எத்தனை கலைகள் தெரியும் என்று. உங்களால் நிச்சயம் எண்ணவே முடியாது. வேத சாஸ்திரங்கள் எனக்கு அத்துபடி.

எங்கள் ராஜாவே, கண்ணா, எம்பெருமானே நீ வாழ்க வாழ்க. இந்த கலியுகம் அழிந்து புவி மீண்டும் புனருத்தாரணம் பெற அருள்வாய் தெய்வமே. கண்ணா. எங்கள் உலகம் நீ தோன்றிய உலகம் அண்ணலே. எங்கள் அவலம் நீங்கி, நீ அதை நீக்கி, நாங்கள் மீண்டும் புகழில் ஒங்க அருள் புரிவாய் பரந்தாமா கண்ணா. எங்கள் அரசே.

(மகா கவி சுப்ரமணிய பாரதியார் ''கண்ணன் என் அரசன்'' என்று அருமையாக சில பாடல்களைப் பாடி இருக்கிறார். அதைப் பிழிந்தெடுத்து வடித்தது தான் மேலே எழுதப் பட்டது.)’



                                  கண்ணன் -- என் அரசன்


பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்;

கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே;
எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம்
இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே.

படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்;
‘இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்’
என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான்;

கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
கோலு யர்த்துல காண்டு களித்திட,
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான்;4

வான நீர்க்கு வருந்தும் பயிரென
மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும்,
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்
தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான்;5

காலினைக் கையினால் பற்றிக் கொண்டுநாம்
கதியெ மக்கொன்று காட்டுவை யென்றிட்டால்.
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;
நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே?6

நாம வன்வலி நம்பி யிருக்கவும்,
நாண மின்றிப் பதுங்கி வளருவான்;
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;
சிறுமை கொண்டொளித் தோடவுஞ் செய்குவான்;7

தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்;
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;
வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்குவான்;8

காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
கணத்தி லேபுதி தாக விளங்குவான்;
ஆல கால விடத்தினைப்போலவே,
அகில முற்றும் அசைந்திடச் சீறுவான்;9

வேரும் வேரடி மண்ணு மிலாமலே
வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்டதுன்பங்கள் கணத்திடை மாற்றுவான்;10

சக்க ரத்தை யெடுப்ப தொருகணம்;
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;
இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ?
இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன் காண்!11

கண்ண னெங்கள் அரசன் புகழினைக்
கவிதைகொண் டெந்தக் காலமும் போற்றுவேன்;
திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்
தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான்.12

நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;
நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்குகல் லாதவன் என்னுளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.13

கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!
கலி யழிந்து புவித்தவம் வாழ்கவே!
அண்ண லின்னருள் நாடிய நாடுதான்
அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே!

Wednesday, December 13, 2017

ENGAL VAMSAM



எங்கள் வம்சம்  j.k. sivan 

                                                 பழைய நினைவுகள்...  
                             

காலம்  என்பது  நிற்காமல்  வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்  ஒரு  பிரேக் இல்லாத  வாகனம்.  அது  நின்றது  என்றால்  சகலமும் முடிவுறும்.    அதில் பிரயாணம் செய்யும் நாம்  எப்போது  திரும்பி பார்த்தாலும் இனிக்கும்.


கடந்த காலத்தை நினைப்பது  என்பது  இறைவன் அளித்த ஒரு அற்புத பரிசு.  பழைய நினைவுகள் வாழ்க்கைக்கு  தெம்பை அளிப்பவை என்று எல்லோரும் ஒப்புக்கொண்டு தலை ஆட்டுவீர்கள். 

ஆம், அவரவர் வாழ்க்கையில் நடந்தது அவரவர்க்கு புத்துணர்ச்சி தருவது. சில  நினைவுகள்  பொதுவாகவே எல்லோருக்கும் சந்தோஷம் அளிப்பவை. நான் தேர்ந்தெடுப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி தரவேண்டும் என்ற ரகத்தை சேர்ந்தது.

++

பரசுராம  பாரதியின் ஜேஷ்ட புத்திரன்  ராமஸ்வாமி  பாரதி  அப்பாவைப்போலவே  வாக் பலிதம்  பெற்றவர் ஆகிவிட்டார். சொன்னது  நடக்கும்  என்று  சாத்தனூர்   வேளாண் குடி மக்கள்  நம்பி வந்தனர்.  கல்யாணங்களுக்கு நடத்திக்கொடுப்பதில்  வரும்  வருமானம் தவிர சரஸ்வதி  சம்பாவனை வரும்படி,   ஊர்காரர்களுக்கு  அறிவுரை சொல்வதில்  கிடைப்பது,   ஊரார்  விட்ட  மானியம்   ''ஏத்துக்கு  ஒரு குறுணி '' யில் கிடைத்த உணவு  தானியங்கள்  எதேஷ்டமாக  அவர்  குடும்பத்துக்கு  உதவியது.


ஊரில்  செக்கான்   சாமிநாதன் என்று   ஒருவன்  வாணியன்,  எண்ணெய்  ஆட்டும்  செக்கு  வைத்திருந்தான். படுகையில்  நிறைய  எள்ளு  விதைத்து நல்ல  போகம்.  ஆனால்  ஊர் பஞ்சாயத்து கட்டுப்பாட்டின் படி  முதல் வருஷமும்  ''ஏத்துக்கு   ஒரு குறுணி   எள்ளு''  கொடுக்கவில்லை. ரெண்டாவது வருஷமும்  கொடுக்கவில்லை.

ராமசாமி பாரதி  ஒருநாள்  அவனை  ஊர் கிணற்றருகே பார்த்து விட்டார்.   அவன்  எண்ணை விற்பதற்காக , எண்ணெய் நிரம்பிய பீப்பா  வண்டியை தள்ளிக்கொண்டு வந்தான்.

'' சாமிநாதா என்னடா  தண்டம் ரெண்டு வருஷமாக   நீ எனக்கு  தரலே''  என்று கேட்டார் ராமஸ்வாமி பாரதி.

''நிலமை  சரியில்லே  சாமி. அப்பாலே  தாரேன்,  எங்கே போவுது பாக்கி.  அதுக்கின்னா  இப்போ''  என்று  அலட்சியமாக  சொல்லிவிட்டு  போனான்.  பாரதி மறுவார்த்தை பேசவில்லை.

 பாரதி  திண்ணைப் பள்ளிக்கூடத்தில்  உட்கார்ந்திருக்கும்போது  வெகுநாள்  கழித்து  செக்கான்   அந்த பக்கமாக  போனான்.

 ''சாமிநாதா ''  என்று  கூப்பிட்டும்  காது கேளாததுமாதிரி  பார்த்தும்  பார்க்காமல்  அலட்சியமாக போனான்.  ராமஸ்வாமி பாரதி சாந்த குணம் கொண்டவரானாலும்  வேண்டுமென்றே  அலட்சியம் பண்ணிய  அவன் மீது  மனம் ஒடிந்து  வருந்தினார் .

 திண்ணைப் பள்ளிக் கூடத்திலி ருந்தபடியே அப்போது அவர்  ஒரு  ஆசு கவி பாடினார்:

 ''    வாரேன்   என்றான்  வரவில்லை
      தாரேன்  என்றான்  தரவில்லை
      சேரான்  செக்கான்   சாமிநாதன்
      பாராக் கண்கள் படைத்தானே ''

இயல்பாக  அவன்  பாராதது  போல் சென்றதைப்பற்றி  அவர்  பாடினார்.    சில நாள் கூட  ஆகவில்லை.   திடீரென்று  ஒரு நாள்  சாமிநாதனுக்கு கண்கள்  பார்வை  இழந்தன.    அவ்வூர் ஜனங்கள்  இது  பாரதியின்  வாக்கு பலன்  என்று  புரிந்துகொண்டார்கள்.  ஊரெங்கும்  இதே  பேச்சு.

சாமிநாதன்  எங்கெங்கோ அலைந்து  பல வைத்தியங்கள்  பண்ணிப்  பார்த்தும்  குணமில்லை.  தான் செய்த தப்பு அவனுக்கு உரைத்தது.  எள்ளும்  எண்ணையும்   அதிகமாகவே கொண்டு  வந்து ராமசாமி பாரதியிடம்'
 கொடுத்தான் .  ஆனால்  அவர் அதை  ஏற்றுக்கொள்ளவில்லை. ஊர்  ஜனங்களுக்கு  அவர்  மேல்  இருந்த   மதிப்பும் பக்தியும்    இந்த சம்பவத்திற்குப் பிறகு ரொம்ப அதிகமாயிற்று.

சாமிநாதன்  எண்ணைக்கடை  சாத்தனூரிலிருந்து  மகாராஜபுரம் போகும்  வழியில்  இருந்ததாம்.  சில காலத்தில் அவனுக்கு  ஒரு  பிள்ளை  பிறந்தது.  துரதிர்ஷ்ட வசமாக  அந்த  குழந்தைக்கும்  பிறவியிலிருந்தே பார்வை  இல்லை என்பார்கள்.

எங்கள்  தாத்தா  வசிஷ்ட  பாரதியார்  80- 85  வருஷங்களுக்கு  முன்னர்  அந்த  பகுதியில் செல்லும்போது  இந்த விவரம்  சேகரித்தார்.

 +++

ராமஸ்வாமி  பாரதியார்  4  மைல்  தொலைவில்  இருந்த  திருவையாறு  க்ஷேத்ரத்துக்கு  அடிக்கடி   செல்வார்.  சப்தஸ்தான உற்சவங்களில் பங்கேற்பார்.  பரம்பரையாக இருந்த  ராம  பக்தியோடு  அதீத  சிவ பக்தியும்  உண்டு. அவர்  எப்போதும்  தோய்த்து உலர்த்தி  வெளுத்த  வஸ்த்ரம்,  பட்டை  பட்டை யாக  விபூதி   ருத்ராக்ஷ  தாரணம்,  வாக்கில் சிவ  ராம நாம  ஸ்மரணத்தோடு   இருப்பதைக்  கண்டு  அனைவரும்  இவர்  சிவப்பழமோ,தவப்பழமோ  என்று  வியந்தனர். 

நான்  போன வாரம் திருவையாறு முதலான  சப்தஸ்தான க்ஷேத்ரங்களுக்கு சென்று வந்தேன். அதைப் பற்றி எழுதுவதாக இன்று தீர்மானம் செய்து  முதலில்  திருவையாற்றைப்  பற்றி இங்கு  கொஞ்சம்  சொல்கிறேன்.

 ஊர் மக்கள்  திருவாதி, ஐயாறு, திருவையாறு என்றெல்லாம்  சொல்வார்கள்.  மஹா சிவ க்ஷேத்ரம்.  இங்கு பெரும்  தரிசனம்  தான்  கைலாச தரிசனம் என்பதற்கு  பிரமாணம்    பெரியபுராணத்தில்  வரும்  தொண்டர் புராணம்.  அப்பர் என்று  பெயர் பெற்ற  திருநாவுக்கரசர் சைவ சமயக்குரவர்களில் முதல்வர்.  அறுபத்து மூன்று   நாயன்மார்களில்  நால்வரில்  முதல்வர்.  அவர் கைலாய தரிசனம்  காண  விரும்பி,  நடந்து, தவழ்ந்து, புரண்டு, உருண்டு, சென்ற போதும்,  காண  முடியாத காட்சியை, மகேஸ்வரனான பரம சிவன் அருளால் அங்கு ஒரு  தடாகத்தில்  மூழ்கியவர்   அங்கிருந்து,  இங்கு  திருவையாற்றின் தென்  ப்ரஹாரத்தில்  அக்னி மூலையில்  உள்ள சிவ  தீர்த்தமென்னும்  தடாகத்தில் இருந்து  எழுந்து  ஆச்சரியமாக பார்த்தார் .   திருவையாறே, கயிலாயமாக  தோற்றம் அளித்தது.    ப்ரஹாரத்தில்  காண்பவர்கள்  சிவ கணங்களாக  தோன்றினர்.     காணும் யாவுமே   சிவ சக்தி ஸ்வரூபமாகவே காட்சியளித்தது. '' யாதும்  சுவடு படாமல்  ஐயாரடைகின்ற போது 

''மாதர் பிறைக்கண்ணியானை,  ........கண்டேன்  அவர்  திருப்பாதம்   கண்டறியாதன  கண்டேன் ''   என பாடியவர்   அல்லவா அப்பர்.

திருவையாறு  நான் சென்றபோது மனதுக்கு சந்தோஷம் அளிக்கவில்லை. எவ்வளவு அதை புனிதமின்றி அசுத்தமாக்க முடியுமோ அப்படி நமது மக்கள் பாழ் படுத்துவது கண்டு மனம் வெதும்பினேன். எவ்வளவு புண்யம்  வாய்ந்தது  அந்த பஞ்சநதி.எத்தனை மஹான்கள் கால் பட்டது.  அங்கே நீராடினேன். கரையில் ஒரு டேங்கில் பிடித்து வைத்த தண்ணீரில்....  

பாரதிகள் திருவையாற்றிற்கு  தவறாமல்  வருவார். கங்கையிற் புனிதமாய  காவிரி ஸ்நானம் செய்து  மனைவி  காமாக்ஷியோடு தெற்கு  கோபுர  வாயிலில்  காட்சி தரும்   ஆட்கொண்டார் சந்நிதியை வணங்கி  நிறைய  குங்கிலியம்  இட்டு   ''பவ சங்கிலியை''  அறுத்துவிட்டோம்  என்று  பிரார்த்தனை  பண்ணிக்கொண்டு  கோவிலில் நுழைந்து  சிவகங்கையில்  ஆசமனம்   பண்ணி, மேற்கே  திரும்பி   அப்பர் சுவாமிகளுக்கு  தரிசனம்  தந்த  தக்ஷிண  கைலாச மூர்த்தியை தரிசனம்  பண்ணி,  வலம் வந்து  கிழக்கு  அணுக்கன் வாயிலில் நுழைந்து நடு  இடை ஆடி  நந்தியைத் தொழுது  ஐயாரப்பனை தரிசித்து  உள்   பிரதட்சிணம் செய்து நந்திகேஸ்வரர் தவம்  செய்த  ஜப்பேசர் மண்டபத்தில்  சிவ பஞ்சாக்ஷர்  மந்திரம்  ஜபம் செய்து  பிறகு  பரிவார  தேவதைகளை பணிந்து  வடக்கே உள்ள  தர்மாம்பிகா  சந்நிதியை நமஸ்காரம் பண்ணி  வணங்கி விட்டு  பிறகு  மனிவியோடு  வீடு  செல்வது  வழக்கம்.
நான் முன்பு சென்றபோது பஞ்ச பூத லிங்கங்களை எவரும் அருகே சென்று தரிசிக்க முடிந்தது. இப்போது கம்பி வலை கட்டி காட்சிப் பொருளாக்கி விட்டார்கள்.  கோவில் பராமரிப்பு என்பது துளியும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிற மதத்தவர் போல் நம் மதத்தவரும் நடந்து கொள்வது ஏனோ?

++++

அப்பரின்  தேவாரங்கள்  தேன்  சுவை சொட்டுபவை.  எளிய  தமிழில் சொற்சுவை பொருட்சுவை கொண்டவை.   நாவுக்கே அரசர் எழுதியது எப்படி  இருக்கும்  என்று  சொல்ல வேண்டுமா?.   நிறைய    பிறகு தேவாரம் பாடல்களை பற்றி  பேசுவோம்

அப்படியே  எனது சமீபத்தைய சப்தஸ்தான  தரிசனம்  பற்றியும்  சில  வார்த்தைகள் சொல்கிறேன்.......

 

A DAY WITH DAMODARA



தாமோதரனுடன் ஒரு நாள்..J.K. SIVAN

12.11.2017 அன்று ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்கம் ''தாமோதரனுடன் ஒரு நாள்'' என்ற விழாவை காலை 8 மணியிலிருந்து மாலை 8 மணி வரை தொடர்ந்து நடத்தியது. அதில் ஒரு நிகழ்ச்சியாக அற்புதச் சிறுவன் அவ்யுக்த் அரைமணி நேரத்திற்கு மேலாக ஒரு பிரசங்கம் நடத்தினான். வருங்காலத்தில் ஒரு வேளுக்குடி நமக்கு தயாராகிவருகிறார் என்று அவனது பிரசங்கம் நிரூபித்தது. ''பாண்டவ தூதன் கிருஷ்ணன்'' என்ற தலைப்பில் அவன் பேசியதை நேரில் கேட்டு அனுபவிக்காதவர்களுக்கு இந்த காணொளி உதவும். இந்த லிங்க் அந்த நிகழ்ச்சியை உங்கள் செவிக்கு இன்பத்தை ஊட்டும் https://youtu.be/p1hLNLPxxlQ

Tuesday, December 12, 2017

NEETHI SATHAKAM

ராஜா பர்த்ருஹரியின்  நீதி சதகம்:    


சுபாஷிதம்  - 11


परिक्षीणः कश्चित्स्पृहयति यवानां प्रसृतये
स पश्चात्सम्पूर्णः कलयति धरित्रीं तृणसमाम् ।
अतश्चानैकान्त्याद्गुरुलघुतया‌உर्थेषु धनिनाम्
अवस्था वस्तूनि प्रथयति च सङ्कोचयति च ॥ 1.45 ॥

parikṣīṇaḥ kaścitspṛhayati yavānāṃ prasṛtaye
sa paścātsampūrṇaḥ kalayati dharitrīṃ tṛṇasamām |
ataścānaikāntyādgurulaghutayā‌உrtheṣu dhaninām
avasthā vastūni prathayati ca saṅkocayati ca || 1.45 ||
பரிக்ஷீணஃ கஶ்சித்ஸ்ப்றுஹயதி யவானாம் ப்ரஸ்றுதயே
ஸ பஶ்சாத்ஸம்பூர்ணஃ கலயதி தரித்ரீம் த்றுணஸமாம் |
அதஶ்சானைகான்த்யாத்குருலகுதயா‌உர்தேஷு தனினாம்
அவஸ்தா வஸ்தூனி ப்ரதயதி ச ஸங்கோசயதி ச || 1.45 ||


அவனுக்கு நல்ல பசி, காதை அடைத்து, கண் பஞ்சடைத்து, உடம்பு நொந்து போய் விழுந்து கிடைக்கும்போது ஒரு கவளம் சாதம் கிடைக்கிறது. அந்த நேரத்தில் அந்த ஒரு கவளம் சோறு  உலகை விட பெரிதாக அவனுக்கு தோன்றுகிறது.உயிர் வருகிறது. பஞ்ச காலத்தில்  ஒரு கைப்பிடி தானியம் கிடைக்காதா என்று ஏங்குகிறான்.  வறட்சி தீர்ந்து மீண்டும் சுபிக்ஷமாக செல்வந்தனாக வாழும் காலத்தில் இந்த உலகையே ஒரு கையளவு புல்லாக நினைக்க தோன்றுகிறதே!  ஏன்?  பெரியதோ சிறியதோ, ஒரு பொருளை அடைந்தவனின்
மனோபாவம் தான்.  அவனவன் அதிர்ஷ்டத்தின் காரணமாக அவனிடம் சேரும் செல்வ நிலை அவனை உலகத்தில் அவன் காணும் பொருள்களை பெரிதாகவோ சிறிதாகவோ, வேண்டியதாகவோ, வேண்டாததாகவோ நினைக்க செய்கிறது. 

 सत्यानृता च परुषा प्रियवादिनी च
हिंस्रा दयालुरपि चार्थपरा वदान्या ।
नित्यव्यया प्रचुरनित्यधनागमा च
वाराङ्गनेव नृपनीतिरनेकरूपा ॥ 1.47 ॥

satyānṛtā ca paruṣā priyavādinī ca
hiṃsrā dayālurapi cārthaparā vadānyā |
nityavyayā pracuranityadhanāgamā ca
vārāṅganeva nṛpanītiranekarūpā || 1.47 |


ஸத்யான்றுதா ச பருஷா ப்ரியவாதினீ ச
ஹிம்ஸ்ரா தயாலுரபி சார்தபரா வதான்யா |
னித்யவ்யயா ப்ரசுரனித்யதனாகமா ச
வாராங்கனேவ ன்றுபனீதிரனேகரூபா || 1.47 ||

ஒரு அரசவையில்  நாட்டியமாடும் பெண் அதிகாரம் கொண்டவள். மேலிடத்து ஆதரவு. அவளால் நினைத்ததை சாதிக்க முடியும்.  அந்தவூர்  ராஜாவைப் போல அவள். எப்போது என்ன செய்வாள் என்று அனுமானிக்க முடியாது.  ராஜாவைப்போல் சில சமயம் இது தவறு, பொய் ,இது நிஜம், இது கொடுமை, இது ஏற்புடையது, இது கொடூரம், இது தயாளமான செயல், இது தர்மம், இது அவசியம் தேவையானது, என்று  எல்லாம் மனதில் தோன்றி செயலாகும், பணத்தை  வாரி இறைக்க செய்யும்.  பணத்தை அள்ளி  குவித்து வைக்கவும் செய்யும். எல்லாம் மனம் போன போக்கு.

यद्धात्रा निजभालपट्टलिखितं स्तोकं महद्वा धनं
तत्प्राप्नोति मरुस्थले‌உपि नितरां मेरौ ततो नाधिकम् ।
तद्धीरो भव वित्तवत्सु कृपणां वृत्तिं वृथा सा कृथाः
कूपे पश्य पयोनिधावपि घटो गृह्णाति तुल्यं जलम् ॥ 1.49 ॥

 

yaddhātrā nijabhālapaṭṭalikhitaṃ stokaṃ mahadvā dhanaṃ
tatprāpnoti marusthale‌உpi nitarāṃ merau tato nādhikam |
taddhīro bhava vittavatsu kṛpaṇāṃ vṛttiṃ vṛthā sā kṛthāḥ
kūpe paśya payonidhāvapi ghaṭo gṛhṇāti tulyaṃ jalam || 1.49 ||

யத்தாத்ரா னிஜபாலபட்டலிகிதம் ஸ்தோகம் மஹத்வா தனம்
தத்ப்ராப்னோதி மருஸ்தலே‌உபி னிதராம் மேரௌ ததோ னாதிகம் |
தத்தீரோ பவ வித்தவத்ஸு க்றுபணாம் வ்றுத்திம் வ்றுதா ஸா க்றுதாஃ
கூபே பஶ்ய பயோனிதாவபி கடோ க்றுஹ்ணாதி துல்யம் ஜலம் || 1.49 ||

எவன் நெற்றியிலே என்ன எழுதி வைத்திருக்கிறானோ அந்த பகவான் அது தான் நடக்கும். அவனுக்கு என்ன என்று விதித்திருக்கிறதோ அது தான் கிடைக்கும். அவன் ஏழையோ, பணக்காரனோ, அப்படித்தான் ஆகிவிடுவான். அவன் நீரற்ற பாலைவனத்தில் வாடவேண்டும் என்றிருந்தால், அவனை மஹா மேருவின் மேல் உச்சியில் அமர வைத்தாலும் அங்கும் வாடியே தீரவேண்டும். மனசை தளரவிடாமல் கெட்டியாக பிடித்துக்  கொள்.   பணக்காரனைப் பார்த்து பெருமூச்சு விடாதே. பொறாமை கொள்ளாதே.  உன் கையில் வைத்திருக்கும் குடம், அது உப்புத்தண்ணீர் நிறைந்த  கடல் நீர் என்றாலும்,  சுமாரான சுவை யுள்ள கிணற்று ஜலம் என்றாலும்,  இனிக்கும் சுவையான  கங்கை நீர் என்றாலும் அதே அளவு தான் கொள்ளும். இதை மறக்காதே. 

 
त्वम् एव चातकाधारो‌உ
सीति केषां न गोचरः ।
किम् अम्भोदवरास्माकं
कार्पण्योक्तं प्रतीक्षसे ॥ 1.50 ॥

tvam eva cātakādhāro‌உ
sīti keṣāṃ na gocaraḥ |
kim ambhodavarāsmākaṃ
kārpaṇyoktaṃ pratīkṣase || 1.5

த்வம் ஏவ சாதகாதாரோ‌உ
ஸீதி கேஷாம் ன கோசரஃ |
கிம் அம்போதவராஸ்மாகம்
கார்பண்யோக்தம் ப்ரதீக்ஷஸே || 1.50 ||

''ஹே  மேகமே, சூல் கொண்ட கருமேகமே , உன் மழைக்காக  ஒரு சொட்டு  நீருக்காக சாதக பக்ஷி எப்போதும் காத்திருப்பது யாருக்கு தான்  தெரியாது? நீ உதவுவாய் என்று அதற்கு தெரியும். காத்திருக்கும்.  எப்போது வரவேண்டுமோ அப்போது நீ வருவாய் மழையை அமோகமாக தருவாய் என்று  அறிவோம்.  எதற்கு எங்கள் வேண்டுதலுக்காக, அழுகை, கூக்குரலுக்காக  காத்திருக்கிறாய் மழை மேகமே ? ''  என்று  ராஜா பர்த்ருஹரி நீதி சதகத்தில் சொல்லியிருப்பதுடன் இன்று நிறுத்திக்கொள்கிறேன்.

jks 3rd story on vittal

This is my 3rd story for children on LORD PANDURANGAN, VITTAL,  recorded by Hindu Culture TV channel - j.k. sivan  https://youtu.be/GdjObZkH-I8

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...