Sunday, December 11, 2022

LIFE LESSON

 கோபாலசாமியின்  அறிவுரை.  நங்கநல்லூர்   J K  SIVAN 


ரொம்ப  படித்தவர்கள்  தான்  ஞானிகள் என்பது இல்லை. படிக்காதவர்கள் கூட  நிறைய  யோசிக்கிறார்கள், அவர்கள் தான் அதிகம் யோசிப்பவர்கள். தங்களுக்குள் கேள்விகள் கேட்டுக்கொண்டு பதில் தேடுபவர்கள்.  
கோபாலசாமி  குதிரை வண்டி ஓட்டுபவன் மட்டும் இல்லை.  பழைய  MKT  பாகவதர்  சினிமா வில் வந்த பக்தி  பாட்டெல்லாம் அற்புதமாக அப்படியே  சங்கீதம் தெரியாமலேயே  பாடும்  வேதாந்தி. வயது  72.  கோபாலசாமி  ''சொப்பன  வாழ்வில் மகிழ்ந்து,   ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்,   சத்வகுண போதன்''  பாட்டெல்லாம்  பிச்சு உதறிடுவான்.  குஷியாக   குதிரை வண்டியில்  ஏறிக்கொண்டு  வழியெல்லாம் பாடிக்கொண்டே போவான்...அது ஒரு காலம். உயிரோடு  பயணிகள்  அவன் வண்டியில் சென்றது எத்தனையோ வருஷங்கள் முன்னே. இப்போது  பேசாத, அசையாத, படுத்த உயிரற்றவர்கள் தான் அவன் குதிரை வண்டியில் பயணிக்கிறார்கள்.  கோபாலசாமி  பாடுவதை பேசுவதை நிறுத்திக் கொண்டான்.

இப்போது அவனுடைய  உதவியாளன்  குதிரையை பராமரிப்பவன் சுப்பிரமணி.  அவன் எப்போதும்  கோபாலசாமியை  கேள்விகள் கேட்டு அறிவுரை பெறுபவன்.  கோபாலசாமியின் வாரிசு.

''டேய்   சுப்பிரமணி, என்னையும் ஒருநாள்  இந்த வண்டியிலே தூக்கிக்கிட்டு போனப்பறம் இந்த வண்டியும் குதிரையும் உனக்கே வச்சுக்கோ''

ஒருநாள்  சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரே  ஜெனெரல் ஆஸ்பத்திரி வாசலில்  அவர்கள் பேச்சில் கொஞ்சம் காதில் விழுந்ததைச்  சொல்கிறேன்:
''..................''
சுப்பிரமணி,  இப்போ  நீ  கேட்டியே  அது ஒண்ணும்  புதுசு இல்லை.  ஏற்கனவே  எப்பவோ, உனக்கே  தெரிஞ்சுது தான்.  ஏன் அப்போ உனக்கு அதை இப்போ எடுத்து சொல்லணும் றியா ?  அது தான் விஷயம்.  நமக்கு தெரிஞ்சிருக்கு என்கிறதே நமக்கு தெரியறதில்லே.  எங்கேயாவது எப்போவாவது   யாராவது    எடுத்து  சொன்னா  லபக்னு   மனசு பிடிச்சிக்கும். 

''அது  என்ன விஷயம் நயினா,  கொஞ்சம் சொல்லேன் ?

நம்பளுடைய  வாழ்க்கையிலே  நாம்   எப்பப்பவோ, யார் யாரையோ  சந்திக்கிறோமே  அவங்க யாருமே  ஏதோ தானாவே சும்மனாங் காட்டியும்  நம்ம கிட்டே வந்தவங்க இல்லைப்பா.   ஏதோ நமக்கு  சரியான நேரத்திலே  ஏதோ தெரியாததை  சொல்லிகே கொடுக்கிறதுக்கோ,இல்லேன்னா  நமக்கு  இருட்டிலே  வழிகாட்டவோ, உதவி  செய்யவோ  வந்தவங்க. கடவுளா  பாத்து நம்ம கிட்டே  ஏதோ ஒரு காரணத்துக்காக அனுப்ப பட்டவங்கன்னு  தான் தோணுது.  காரணம் இல்லாம எந்த காரியமும்  நடக்கிறது இல்லேப்பா.எங்க தாத்தா ரங்கய்யா  அடிக்கடி இதை சொல்லி கேட்டிருக்கேன்.

ஒண்ணு   தெரிஞ்சுக்கோ சுப்பிரமணி,   நாம்  எதிர் கொள்ளுகிற  கஷ்டமோ, நஷ்டமோ, இன்பமோ, துன்பமோ, வேறே  மாதிரி ஒருவேளை  இருந்திருக்கலாமோன்னு  கூட   அடிக்கடி  தோணும். நிச்சயம்  அப்படி கிடையாது. எது எப்படி நடக்கணுமோ அது அப்படி தான், அப்படி மட்டும்  தான்,  நடக்குது.   தலையால் தண்ணி குடிச்சாலும் மாறாது. அப்படித்தான் நடக்கும்.

இதோ பார்,  நாம என்ன சொல்றோம்? நினைக்கிறோம்?  ஒருவேளை இப்படி செஞ்சிருந்தா  வேறே மாதிரி  லாபகரமாக நடந்திருக்குமோ?  வேறே பலன் கிடைச்சிருக்கலாமோ?. நாம்  கொஞ்சம் வேறே மாதிரி நடந்திட்டிருக்கலாமோ?. அப்படி தானே.'' ஹுஹும்.'' ..  சான்ஸே இல்லே.  எது நடந்துச்சோ, அது அப்படி மட்டும் தான் நடக்கணும் என்கிறது தான்  விதி, அதாவது   கிருஷ்ணன் சாமி   முடிவு. நாம யார்  அதை மாத்தறதுக்கு?

ஒவ்வொரு  நேரத்திலேயும், சந்தர்ப்பமும், நிகழ்வும், வாழ்க்கையிலே  எது எப்படி எப்போ நடக்கணுமோ அப்படி தான் அந்தந்த நேரத்திலே  அதுக்கேத்த மனிஷங்களாலே  நடைபெறுது.   ஆமாம். பக்காவா,   சரியான சமயத்திலே, சரியான நேரத்திலே  டாண்  ணு  நடக்குது. அப்பறம், இப்பறம்,  எல்லாம் அங்கே கிடையாதுப்பா.

நடந்ததை நினைச்சுப் பாக்காதேடாம்பாங்க.  நீ நினைச்சுப் பார்த்தா, நாமளா  இப்படி நடந்தோம், நாமா இதைச் செய்தோம், அடேயப்பா எப்படி நம்மாலே முடிஞ்சுது ன்னு ஆச்சர்யப்பட  வைக்கும்  அது எல்லாமே. .  அது தான் அந்த கிஷ்டன்   செய்யற  வேலை  ப்பா. 

'' தம்பி எதுவுமே  நிரந்தரம் இல்லே. பொழுது விடிஞ்சா காலியாயிடும்,  பூடும் .  கியாரண்டீ எதுவும் இல்லேப்பா. இது ஏம்ப்பா  நமக்கு  மறந்து பூடுது?  மாறிக்கிட்டே  இருக்குது எல்லாமே, சுத்துதுப்பா  உலகம், அதோட எல்லாமே சேர்ந்து தானே  சுத்துது.  சுத்தறது   எப்படி நிலைச்சு இருக்கும்?   நாம  எல்லாரும் ஒரே மாதிரியா இருக்கிறோம்? ஒரேமாதிரியா பேசறோம், நினைக்கிறோம், எதையாவது செய்றோம்? அது தான் மாறுதல்,  எல்லாம்  கிஷ்டன் வேலை. இது புரிஞ்சுக்குனு   அடப்   போய்யா சரிதான் .  ''என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு பாடு''    போய்  ''பன் ''னு  தின்னுட்டு  டீ  குடிப்பா?  

சுப்பிரமணி. நான் சொல்றதே  மனசிலே  நல்லா எழுதி வச்சுக்கோ.  நீ  யாருக்கு நல்லவனா இருக்கியா இல்லையா ன்றது  முக்கியம் இல்லே. உனக்கு நீ  நல்லவனா  நம்பும்படியா  எப்பவும் இருந்துக்கோ. உன்னையே நீ ஏமாத்திக்காதே.   புடிச்சா  நீயும்  கிஷ்டன் சாமியை  கும்பிடு. அவனை நம்பு. நிச்சயம்  அவன் தான் காப்பாத்தறவன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...