Tuesday, December 13, 2022

COURT DECISION

 பாசம் ஒரு ரூபாய் - #நங்கநல்லூர்_J_K_SIVAN



ராமநாதய்யர் ஏழை என்று கனவிலும் நினைக்க முடியாது. வேதங்கள் அறிந்த ஸம்ஸ்க்ரித பண்டிதர். கல்லூரி ஆசிரியர். வசதியான பூ ஸ்திதி ஊரில் உள்ள வர். உள்ளூர் ராமர் கோவிலின் தர்மகர்த்தா. ஒரே மகன் கோதண்டராமன். நன்றாக படித்து கிராமத்திலி ருந்து குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்து நங்க நல்லூரில் வாசம். ஒரு நிலம் வாங்கி தோட்டத்தோடு ஒரு அழகான வீடு ராமநாதய்யர் கட்டினார். பள்ளிப்படிப்பு மடிந்து கோதண்டராமன் கல்லூரிக்கு சென்றான். அங்கும் மிக நன்றாக படித்து பொறியியல் வல்லுன ராக பட்டம் பெற்றான். டில்லிக்கு வேலைக்கு சென்றான். சில வருஷங்களில் அமெரிக்கா சென்று விட்டான்.

ஒரே மகனை பிரிந்து ராமநாதய்யர் சுசீலா தம்பதியர் ஏக்கமடைந்தனர். முன்பெல்லாம் அடிக்கடி டில்லியிலிருந்து வந்து சில நாட்கள் பெற்றோருடன் இருக்கும் வழக்க முண்டு. கோதண்டராமன் அமேரிக்கா போனவுடன் பெரிய உத்யோகத்தில் சௌகர்யமாக வாழ்ந்தான். இந்தியாவுக்கு அடிக்கடி வருவது சாத்தியமில்லை.வருடத்துக்கு ஒருமுறை வந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக மூன்று நாலு வருஷங்க ளுக்கு ஒருமுறை என்று வர ஆரம்பித்தான். அங்கே யே கல்யாணம் பண்ணிக் கொண்ட பின் அவ்வளவு தான் போனில் கூட பேச நேரம் இல்லை.

அமெரிக்காவிலிருந்து மீண்டும் டில்லி வந்த பின்னும் கோதண்ட ராமனால் ஊருக்கு வரவோ அப்பாவை பார்ப்பதற்கோ நேரமில்லை. அம்மா காலமாகி விட்டாள் . அதற்கும் வர இயலவில்லை.

மகனின் பிரிவு ராமநாதய்யரை ரொம்ப வாட்டியது. தனிமையில் மன வியாகூலம் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. வசதிகளுக்கு ஒன்றும் குறை வில்லை. தொடர்பு பிள்ளையோடு முற்றிலும் நின்று விட்ட நிலையில் அவன் மேல் ஒரு வழக்கு தொடுத்தார்.

ஒவ்வொரு மாதமும் வசதியாக இருக்கும் மகன் அப்பாவுக்கு மாதம் பணம் நேரிலே வந்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை. நீதி மன்றம் வழக்கை நியாயமான கோரிக்கை என்று ஏற்றது.

கோதண்ட ராமனுக்கு கோபமும் ஆச்சர்யமும் ஒருங்கே வந்தது.

''அப்பா எதற்கு என் மேல் இப்படி வழக்கு போடடிருக்கிறார்? வசதிகளுக்கு குறைவில்லையே''
என்று அதிசயித்தான். அவன் அமெரிக்க மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இதெல்லாம் புரியவில்லை.
கோர்ட் விசாரணையில் நீதிபதி அதிசயித்தார்.

ஏன் வசதியுள்ள ராமநாதய்யர் மகன் ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் நேரில் தனக்கு உயிர் பிரிகிற வரை வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஆனால் அவர் வாதம் நியாயமான கோரிக்கை, உரிமை இருக்கிறது என்று யோசித்தார்.
தீர்ப்பு ராமநாதய்யருக்கு சாதகமாயிற்று. தீர்ப்பெல்லாம் முடிந்து ஜட்ஜ் கைலாசம் தனியாக ராமநாதய்யரை அழைத்தார்.

''ஐயர்வாள் , மகன் நிறைய சம்பாதிக்கிறான், வசதி யோடு இருக்கிறான் என்று இருந்தும் ஏன் மாதம் ஒரு ரூபாய் மட்டும் அவன் தரவேண்டும் என்று கேட்டீர்கள். கூடவே பணம் கேட்டிருக்கலாமே ''

''ஜட்ஜ் அவர்களே, நீங்கள் கேட்பது புரிகிறது. எனக்கு மகன் சந்தோஷமாக வாழ்கிறான் என்று தெரியும், அதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
ஆனால் இப்படி ஒரு நீதி கிடைத்ததால், எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம்,
அடுத்த மாதம் முதல் மாதம் ஒரு தடவையாவது ஒவ்வொரு மாதமும் என் மகன் முகத்தை கண்ணுக்கு எதிரே என்னால் பார்க்க முடியுமே, அவன் கையால் கிடைக்கும் ஒரு ரூபாயை விட அவன் நேரில் வந்து தரிசனம் கொடுத்தால் நான் பெறப்போகும் மகிழ்ச் சிக்கு எல்லையே இல்லை. இதுவரை அவனைப் பார்க்க வோ, நேரில் பேசவோ கூட இயலாமல் போய்விட்டதே என்று தான் இப்படி ஒரு நீதி கேட்டேன்.''

பெற்றோர் பாசம் எப்படிப் பட்டது என்று எல்லோரும், முக்கியமாக குழந்தைகள் இதன் மூலம் அறிய வேண்டும் என்பது என் அவா. உலகில் மிகவும் சிறந்த பாக்யம் பெற்றோர் நீண்டகாலம் உயிரோடு இருப்பது, அதுவும் அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வது எல்லோருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம். அது கிடைத்தவர்கள் அதை உதாசீனம் பண்ணு வதோ மிஸ் பண்ணி விட்டு பின்னால் வருந்துவதில் பயனில்லை.அது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். எந்த புண்ய நதியில் குளித்தாலும், எந்த க்ஷேத்ரம் போனாலும் மன சாக்ஷியின் உறுத்தல் தீராது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...