Sunday, December 11, 2022

PESUM DEIVAM


 பேசும் தெய்வம் - #நங்கநல்லூர்_J_K_SIVAN


''நான் இருக்கேன் உனக்கு.''

இசை  என்றால்  அநேகருக்கு  சினிமா  பாட்டுகள் தான் ஞாபகம் வரும். வேறு தெரிந்துகொள்வதில் விருப்பமில்லை
சிலருக்கு  கர்நாடக சங்கீதம், அதில் பிடித்த ராகங்கள் நினைவுக்கு வரும். 
சிலருக்கு  பக்தி பாடல்கள் மட்டுமே, அது  சினிமாவில் இருந்தாலும், கீர்த்தனைகளாக இருப்பினும்,  மனதில் பகவானை நினைக்கச் செய்தால்  அது மட்டுமே  கவனத்தை கவரும். இதற்கு சங்கீதம்  முறையாக தெரிந்திருக்க அவசியம் இல்லை.   
நான் கடைசி ரகம்.  அதுவும்  பாஷை புரிகிறதோ 
இல்லையோ,  ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ்  என்று பல மொழிகளில்  அற்புதமாக மனதை வருடும்  கீர்த்த னைகளை  அருமையான குரலில் பாடுபவர்களை  தெய்வமாக கொண்டாடு வேன்.  என் மனதை தொட்டவர்கள் அப்படி சிலபேர் தான்  MKT,  TMS, பாலமுரளிகிருஷ்ணா,  PBS,  மதுரை மணி அய்யர், GNB, மதுரை சோமு,  MSS, MLV என்று பல பேர்.

கர்நாடக சங்கீதத்துக்கு உயிர் ஊட்டுவது மிருதங்கம் எனும் அதிசய வாத்யம், சொற்கள் அதில் பேசும். பாலக் காடு மணி ஐயர் , TK  மூர்த்தி, காரைக்குடி மணி  ஆகியோர் வாசிப்பு ரொம்ப பிடிக்கும். TK மூர்த்தியை மடிப்பாக்கத்தில்  அவரது இல்லத்தில்  நேரே சந்தித்து அவரோடு அவர் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு ஒரு கட்டுரை கூட பகிர்ந்து கொண்டிருக்
கிறேன்.  கர்நாடக சங்கீதம் தெய்வீகமானது. மஹான்கள் வாக் கேய காரர்களால் இயற்றப்பட்ட  கீர்த்தனைகள்  அர்த்த புஷ்டி வாய்ந்தவை. கண்களில் பக்தி ரஸம் ஆனந்தக்  கண்ணீராக பெருக, நெஞ்சை உருக  வைப்பவை. 

சங்கீதம் என்றால் மஹா பெரியவா நினைவும்  எப்போதும்  தானாகவே வரும். அவர்  சங்கீதத்தில் நிபுணர். வீணை வாசிக்க தெரிந்தவர்.  எண்ணற்ற  வித்வான்களை அழைத்து  கீர்த்தனைகள் பாட வைத்து ரசித்தவர் . ஆசிர்வதித்தவர்.  

ஒரு சம்பவம்  எப்போதோ  படித்தது நினைவுக்கு வருகிறது.  சொல்கிறேன்:

யாரோ  ஒரு  மிருதங்க வித்வான், தன்னுடைய  சிறு பிள்ளையோடு மஹா பெரியவா தரிசனத்துக்கு  காஞ்சி மடம் வந்தார்.  பையனும்  மிருதங்கம்  அப்பாவிடம் கற்றுக்கொண்டு வாசிப்பவன்.  பெரியவா  சந்நிதியில் ஒரு கச்சேரி.  அதில்  பையன் மிருதங்கம் வாசித்தான்.  மகா பெரியவா  கச்சேரி முடிந்தவுடன் அந்த பையனை அழைத்து ஆசிர்வதித்து அவனுக்கு ஒரு பட்டுத்துண்டு,  சால்வை பரிசளித்து கௌரவித்தார்.  

45 வருஷங்கள் ஓடிவிட்டன. பையன் இப்போது நடுத்தர வயதினர். ஆகாயவாணி  வானொலி நிலையத்தில் இசைப்பணி. மிருதங்க வித்வான்.  அவர்  ஒருநாள்  மஹா பெரியவா தரிசனம் பெற  காஞ்சி மடம்  சென்றார். போகும்போது தனக்கு முதன் முதலில் மஹா பெரியவா அளித்த   அந்த  சிவப்பு கலர்  பட்டுத் துண்டையும்  எடுத்துச் சென்றார். 

''இந்த பட்டு வஸ்த்ரம்  மஹா பெரியவா எனக்கு பரிசா அளித்து  ஆசிர் வாதம் பண்ணி இன்று நான் சௌகர் யமாக  மிருதங்க வித்வானாக வாழ்கிறேன். உங்க கருணை''என்று கண்ணீர் மல்க கூறி அந்த  சிவப்பு  பட்டு வஸ்திரத்தை எடுத்துக்  காட்டினார். 

''அப்போ உனக்கு  ஒன்பது வயசு''   

பளிச்  சென்று  பேசும் தெய்வம் சொன்னபோது  அந்த வித்துவான் நிலை குலைந்து போனார்.  அருகே இருந்த பக்தர்களும் சேர்ந்து தான்.  எவ்வளவு ஆயிரக்கணக் கான   பக்தர்களை  தினமும் சந்திக்கிறார்.  அதுவும் 45 வருஷங்களுக்கு முன்பு நடந்ததை நேற்று நடந்தது போல் சொல்கிறாரே..!   அது தான் மஹா பெரியவா..

இன்னொரு கூடுதல்   விஷயம்... அந்த வித்வான்  வெளியூரில் எங்கேயோ  சில காலம்  வசிக்க நேர்ந்தது.  அவரால்  மஹா பெரியவா படம் இல்லாமல்  இருக்க முடியாது. தினமும் அதை வணங்கி த்யானம்
 பண்ணுபவர். அவரது பெட்டி பிரயாணத்தில்
தொலைந்து போய்விட்டது.  பெரியவா படம் இல்லை
யே! என்ன செய்வது? மிகவும் ஆசாரமானவர் ,தானே சமைத்து சாப்பிடுபவர்,

அரிசி எங்கே கிடைக்கும்  என்று தேடி  ஒரு கடையில் ஐந்து கிலோ அரிசி வாங்க சென்றார். கடைக்காரர்  இந்தியர் தமிழர் என்று அறிந்து மகிழ்ந்தார்.  அரிசியை ஒரு பேப்பர் பையில் போட்டு சுற்றி கொடுத்தார்  கடைக்காரர்.  

வீட்டில் அரிசியை ஒரு பாத்திரத்தில்  கொட்டி வைக்க  பேப்பர் பையை பார்க்கிறார்.

அந்த பையின் மேல்  மஹா பெரியவா புன்னகையோடு  அபய ஹஸ்தம் அளிக்கும்  படம் ஒரு பாதி பையை அலங்கரித்து  அழகாக கசங்காமல் இருந்தது. 

அந்த அரிசியை தயார் செய்து வியாபாரம் பண்ணி னவர்  பெரியவா பக்தரோ என்னவோ  அரிசி பேப்பர் பையின் மேல் பெரியவா படம் பிரிண்ட் செய்திருந்தார்.   
அந்த பையில் ஐந்து கிலோ அரிசி இந்த கடைக் காரர் கொடுத்திருக்கிறார்.  வித்வான்  மன நிலை அப்போது எப்படி இருந்திருக்கும்......?!    

தெய்வம் எங்கும் இருக்கிறது, உணர்ந்தால்  மகிழலாம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...