Sunday, December 18, 2022

LIFE LESSON



இது நமக்குண்டான  பொது விஷயம் 
நங்கநல்லூர் J K  SIVAN 

அன்பர்களே, நண்பர்களே,   இது  வயோதிக வாலிபர்களான நமக்கு ஒரு பிரத்யேக பதிவு.  

ஐம்பது வயதாகிவிட்டாலே  நம்மைத் தேடி வரும் பட்டம்  'கிழவன், கிழவி, பெரிசு.' போன்றவை. மரியாதையாக  முதியவர்கள் என்று நம்மை  ஓரம் கட்டி  ஒரு  குரூப்பில் சேர்த்து விடுகிறார்கள். 

பெரிசுகள்  நம்மைப் பற்றி  மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்  என்பதை விட  டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள்  என்று தெரிந்தால் ஆச்சர்யமாக இருக்கும். நான் எங்கோ படித்து அறிந்து கொண்ட விஷயம் இது தான்:

பெரிசுகள்  பேசிக்கொண்டே  இருக்கவேண்டும். அப்போது தான்  ஞாபக மறதி குறையும்.
நாம் பேசிக்கொண்டிருந்தால்  இளசுகள்  என்ன சொல்கிறது?  ''அது கிட்டே போய் மாட்டிக்காதே. பிடிச்சுக்கும், அறுத்துத்  தள்ளிடும்''.  ஆகவே இளசுகளை நெருங்காமல் நமக்குள்ளேயே பேசுவோமே.

பேசிக்கொண்டே இருப்பதால்  என்ன  நன்மை தெரியுமா?   பேசுவதால்  மொழியும்  மூளையும் இணைந்து மூளையின் செயல்பாடு தொடர்ந்து கொண்டே இருக்கும். அது நல்லது.  நிறைய பேசவேண்டும், வேகமாகவும் பேசவேண்டும்.  வேகத்தால் மூளையும்  வேகமாக  வேலை செய்யும்.  வேகமாக பேசும்போது மூளையை   ஆழ் மனதிற்குள்  ஓட வைத்து எத்தனையோ  விஷயங்களை, எண்ணங்களைத்  தேடி எடுத்துக் கொண்டு வேகமாக  வாய்க்கு அனுப்புகிறது.   நான்  ஏன் நிறைய  பழங்கால விஷயங்களை
உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன் என்ற ரஹஸ்யம் இப்போது புரிகிறதா?

பழசை,அனுபவங்களை,  நினைத்துப் பார்க்க வைக்கிறது.  தனிமையில்  பேசாமல்  உம்மென்று உட்கார்ந்து கொண்டிருக்கும்  பெரிசுகளுக்கு வெகு சீக்கிரம்  ஞாபக மறதி வியாதி வந்துவிடுமாம். 

இன்னொரு விஷயமும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.  பேசிக்கொண்டே இருப்பதால்,  மனோ வியாதிகள் அண்டாது.  மன அழுத்தம் குறையும்.  உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் உள்ளே  போட்டு அமுக்கி வைப்பதால்  அந்த மூட்டையின் கனம் அதிகமாகி,  மூளையை  திணற அடித்து விடுகிறது.  பெரிசுகளை பேச விட்டால்  உள்ளே இருக்கும் சுமையை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே  கொட்டி  விட  வாய்ப்பு இருக்கிறது.

டாக்டர்கள் ஆராய்ச்சி செய் து சொல்வதில் ரொம்ப பிடிக்கும் விஷயம் என்ன தெரியுமா?பெரிசுகள் பேசுவதால் அவர்களின் முக  தசைநார்கள் வலுப்படுகிறது. தொண்டைக்கு சக்தி கூடுகிறது. பேசுவதால் நுரையீரல்களின் வேலை சுருங்கி விரிவது  கூடுகிறது ரொம்ப நல்லது. அதன் திறன் அதிகமாகிறது. கண் காதுகளின்  செயல்பாடு பாதிக்கப் படுவதில்லை.   காது கேளாமை சீக்கிரம் நெருங்காது. தலை சுற்றாது. அதாவது எதிரே  எல்லாமே  விர்ரென்று நம்மை சுற்றி  ஓடாது.

கடைசியில் ஒரு அறிவுரை.   என்னைப்போன்ற  எல்லா பெருசுகளே,  நம்மை  alzemeir
 வியாதி, அதாவது  மறதி முழுமையும் ஆட்கொள்ளாமல் பாதுகாத்துக்கொள்ள  நாம் அடிக்கடி பேசிக்கொண்டே இருக்கவேண்டும்.  

பேச்சினால் ஆபத்து எப்போது வரும் என்றால் மற்றவர்களை குறை சொல்லும்போது தான்.  அவன் வாயாலே கெட்டான்  என்று பேர்  வாங்க வைத்துவிடும்.

மற்றபடி  கிருஷ்ணனை ராமனை முருகனை சிவனைப்  பற்றி பேசும்போது பாடும்போது தொந்தரை எதுவும் இல்லை.சரியா?


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...