Tuesday, December 13, 2022

ram temple ayodhya


 அயோத்யா ராமர் கோவில் சிற்பி

#நங்கநல்லூர்_J_K_SIVAN

கோவில் கட்டுவது என்றால் ஒருவருடைய உழைப்பால் முடியும் காரியம் அல்ல. ராஜ ராஜ சோழன் ப்ரஹ தீஸ்வரர் கோவிலை கட்டினான் என்றால் அது முழுமையான தகவல் இல்லை. சோழன் கட்ட ஆசைப்பட்டான். ஒரு பழைய கோவில் மாடலைக் காட்டினான். ''அது மாதிரி, ஆனால் பெரிசா.''... என்று தான் சொன்னான். அவனுக்கு எவ்வளவு கல்,மண், ஸ்தபதிகள், தச்சர்கள் வேண்டும் என்று தெரியாது. எங்கிருந்து கல் வர வேண்டும் என்றும் தெரியாது. எத்தனை காலம் ஆகும் என்றும் தெரியாது..கட்டின ஸ்தபதிகளுக்கும் கட்ட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. கட்ட சந்தர்ப்பம் கிடைத்தபோது சந்தோஷமாக கூலிக்கு வேலை செய்தவர்கள். அழகாக கட்டும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களிடம் பணம் வசதி கிடையாது.

யாரோ ஒரு மஹான், தலைமைச் சிற்பியாக இருக்கலாம், இப்போதுள்ள architect மாதிரி சகல விவரங்களும் தெரிந்த அனுபவசாலி, ராஜாவிடம் அவர் எண்ணம் பூர்த்தியாக என்னென்னவெல்லாம் தேவைப்படும், எத்தனை காலம் ஆகலாம் என்று சொல்லி இருக்கலாம்.

''ராஜா எங்கே கட்டவேண்டும்? என்று கேட்டறிந்தபின் எவ்வளவு இடம் வேண்டும், எவ்வளவு கல் வேண்டும், அது எங்கே கிடைக்கும், எத்தனை கை தேர்ந்த சிற்பிகள், உதவியாளர்கள் வேண்டும், சாரங்கள் எப்படி அமைக்க வேண்டும், ஆட்கள், யானை குதிரைகள் எல்லாம் லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறான்.ஆகம சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று தெரிந்தவனாக இதெல்லாம் மனதில் தீர்மானமாகி வரைபடம் போட்டுக்கொண்டு தான் பிரகதீஸ்வரர் ஆலயம் எழும்பியது இல்லையா.

ரூபாய் நோட்டை காந்தி நோட்டு என்கிறோம், காந்தி ஜி யா பிரிண்ட் பண்ணினார்?, அவரா டிசைன் பண்ணி னார்?, அவர் படத்தை சிரிப்பது போல் மரியாதைக்காக போட்டிருக்கிறோம்.

ராஜராஜன் மூல காரணம் என்பதால் அவன் முயற்சி யால் எழும்பிய ஆலயம் என்பதால், அவன் எண்ணம் உருப்பெற்றதால் அந்த பெரிய கோவில் பெருவுடை யார் கோயில், ப்ரஹதீஸ்வரர் ஆலயம், ராஜராஜ சோழன் பெயர் ரெண்டுமே என்றும் இணை பிரியாத சரித்ரம் ஆகிவிட்டது. என்றும் அழியாத அமர ஆலயம் ஆகிவிட்டது.

சந்திரகாந்த் சோம்புராவுக்கு 77 வயசு. சிறந்த ஆலய கட்டிட குஜராத்தி நிபுணர். இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நூற்றுக்கணக்கான ஹிந்து ஆலயங்களை நிர்மாணித்தவர்.

உச்ச நீதி மன்றம் அயோத்யாவில் ராமர் கோவில் கட்டலாம் என்று தீர்ப்பு வந்ததும் அடேயப்பா எத்தனை டெலிபோன் அழைப்புகள் அவருக்கு. ஹல்லோ சொல்லியே களைத்துவிட்டார். களிப்பும் அடைந்தார்.
அவர் தான் கட்டவேண்டும் என்று அன்புக்கட்டளையை மீற முடியுமா? அவருக்கும் பரம சந்தோஷம்.

ஒரு போனஸ் செயதி. அவருடைய தாத்தா ப்ரபாசங்கர் தான் 1940களில் சோம்நாத் சிவாலயத்தை உருவாக் கிய சிற்பி.
ஆகவே சரியான ஆளைத்தான் பிடித்திருக்கிறார்கள். சரியான மயன் குடும்பம். சந்திரகாந்த் கட்டியது தான் லண்டனில் உள்ள ஸ்வாமிநாராயணன் ஆலயம். உலகின் பெரிய ஆலயங்களில் ஒன்று.

அயோத்யாவில் ராமர் கோவில் எப்படி இருக்கும் என்று வரைபடம் தயாராகியது. அதை முடிவு செய்வதற்கே ஆறு மாத காலம் ஆனது. சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கரா நிலம் விவகாரங்கள் தீர்ந்து நீதிமன்றத்தால் கோவில் கட்ட அளிக்கப்பட்டது. ரெண்டு மாடி கட்டிடம் , சுற்றுப்புற மதில்சுவர், 270 அடி நீள அஸ்திவாரம் 141 அடி உயரம், நான்கு வாசல் ஆலயம். தெற்கு வாசலில் நமது தென்னக கோவில்கள் போல் கோபுரம். ராஜஸ்தா
னிலிருந்து செந்நிற கற்கள்.உறுதியானவை தருவிக்கப் பட்டன.

சந்திர காந்த் சோம்புராவை அடையாளம் காட்டியது விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சிங்கல்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...