Sunday, November 26, 2017

THIRUPPORUR

யாத்ரா விபரம் J.K. SIVAN

விண்ணில் தாரகனை எதிர்த்தவர்!

சென்னைக்கருகே காஞ்சிபுர வட்டத்தில், மிக முக்கியமான ஒரு சுப்ரமணியசுவாமி கோவில் திருப்போரூரில் இருக்கிறது. சோழர் பல்லவ ராஜாக்கள் காலத்தை சேர்ந்த கோவில். 2ம் நரசிம்ம பல்லவன் (கி.பி.691) கால கல்வெட்டு மண்டபத்தூண்கள் இரண்டில் உள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் கல்வெட்டு (கிபி 1076) இவ்வூரை ''ஜெயங்கொண்ட சோழ மண்டல ஆமூர் கோட்டம் குமிழி நாட்டு திருப்போரியூர் சுப்பிரமணிய தேவர்'' ஆலயம் என்கிறது.

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவிலில் சந்நிதிகள் தந்தைக்கு உபதேசம் செய்த ப்ரணவமந்த்ரத்தை ''ஓம்'' எனும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது ஆச்சர்யம்.

தேவசேனாபதியாகி சூரனை எதிர்த்து அவன் சக்திவாய்ந்த சகோதரன் தாரகாசுரனை வதம் செய்த கோலத்தில் கந்தசுவாமி இங்கே காட்சி அளிக்கிறார். ஆகவே தாரகாபுரி என்ற பெயர் நாளடைவில் திருப்போரூராகியது என்பார்கள். இன்னொரு பெயர் சமராபுரி. கந்தசஷ்டி கவசத்தில் ''சமராபுரிவாழ் சண்முகத்தரசே'' என பாலதேவராய சுவாமி வர்ணிக்கிறார்.

இக்கோவில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார்.

சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோவில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது.

இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம்.

ஷண்முகனுடன் அசுரர்கள் யுத்தம் செய்யும்போது மாயையில் மறைந்து தாக்கினார்கள். ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் அவர்களை முருகன் கண்டு சம்ஹாரம் செய்ததால் இந்த இடம் ''கண்ணகப்பட்டு (கண்ணில் அகப்பட்டு) என்று திருப்போரூர் அருகில் உள்ளது.

சிதம்பர சுவாமிகள் மதுரை மீனாட்சி சொக்கநாதரை அனவ்ரதம் த்யானிப்பவர். மீனாட்சி கலிவெண்பா பாடியவர். அவரது த்யானத்தில் ஒரு அழகிய மயில் தோகை விரித்தாடியது . கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி கட்டளை இட்டாள்:

‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது. அங்கே குமரக்கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுப
வர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருள, திருப்போரூர் வந்து கந்தசுவாமி திருக்கோவிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் மகான் சிதம்பர சுவாமிகள் நிர்மாணித்தார். அவருடைய திருமடம் அருகே உள்ளது.

சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் வெளிப்பட்டு, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை திருடர்கள் திருப்பணிக்கான பொருள்களை திருட முயன்று உடனே கண் பார்வை இழந்தனர். அவர்கள் பார்வை இழந்து கதறி சிதம்பர சுவாமிகளை வணங்கி மீண்டும் கண் பார்வை பெற்றனர். நன்றியோடு தாங்கள் களவாடிய தங்கம், வெள்ளி, காசு, பொருட்களை திருப்போரூர் ஆலய திருப்பணிக்கு கொடுத்து விட்டு சென்றனர்.

இந்தப்பகுதியை அப்போது ஒரு நவாப் ஆண்டு வந்தான். அவன் மனைவிக்கு தீராத வயிற்று வலி. நவாப் சிதம்பர ஸ்வாமிகளை வேண்டி அவர் முருகன் அருளினால் அவன் மனைவிக்கு திருநீறு பூச, அவளுக்கு உடனே வலி நீங்கி, நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் கட்டிக்கொண்டிருக்கும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நில தானம் வழங்கினான். அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில்..ஆற்காடு நவாப் திருவுருவ படம் இங்கே உள்ளது

ஆலயத்தின் தெற்கே ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கை. திருக்குளத்தில் நீராழிமண்டபம். குளத்தில் 8 கிணறுகள். ஆகவே, வற்றாத நிலை. தைப்பூசவிழாவில் பிரமாதமாக தெப்போற்சவம் நடக்கும்.

கிழக்குப் பார்த்த ராஜகோபுரம் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி– தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கீழே ஒரு சிறு பீடத்தில் கந்தசுவாமி இங்கே சுயம்புமூர்த்தி. பிரதான பூஜைகள் செய்ய சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். அபிஷேகம் கிடையாது. விசித்திரமாக இங்கே முருகன் பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார்.

கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக்கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜா, வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் உள்ளன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், 'உபதேச மூர்த்தி'' சன்னிதிகள்.

சிவபெருமானது மடியில், தந்தையின் திருமுகத்தைப் பார்த்தபடி முருகன் அமைந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புத திருஉருவம் தான் ''உபதேச மூர்த்தி''.
உபதேச மூர்த்தி விக்கிரஹத்திற்கு மரிக்கொழுந்து சாத்தி, நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

ஆலயத்தில் சம்ஹார







முத்துக்குமார சுவாமி வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளார். தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபடுவோர்க்கு எதிரிகள், பகைவர்கள் கிடையாது..

வெளி பிராஹாரத்தில் விநாயகர்,சனீஸ்வரர் சந்நிதிகள். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகலும்.

ஸ்தல விருக்ஷம் வன்னி மரம். அருகே வன்மீகநாதர், புண்ணியகாரணி அம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வன்னிமர விநாயகர், இடும்பன், சூரியன் சன்னிதிகளும் உள்ளன. இங்கே பைரவருக்கு நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் காண்கிறார்..

திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் எல்லாம் இங்கிருந்து சுமார் 14 கி. மீ.தான்.

'' திருப்போரூர் சந்நிதி முறை'' என்று சிதம்பர சுவாமி 762 பாடல்களை முருகன் மீது பாடியுள்ளார்.வள்ளலார் பாம்பன் சுவாமிகள், சந்தானலிங்க சுவாமிகள், அருணகிரிநாதர் பாடல்கள் பெற்ற ஸ்தலம். .

விநாயகர் இங்கு கணநாதனாக முன்புற பகுதியிலேயே கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பதால் அவரை வணங்கிய பின் தம்பி கந்தசாமியை ராஜகோபுரம் வழியாக கருவறைக்கு சென்று வணங்கவேண்டும் . அருகே சிதம்பர சுவாமி சந்நிதி. பெரிய வட்ட வடிவிலான மண்டபம். கொடிமரம் மயில் வாகனம் பலிபீடம் உள்ளது. 24 கால் மண்டபம் வழியாக உள்ளே சென்றால் வலதுபுறத்தில் தெய்வயானை சந்நிதி . இடது புறத்தில் கருவறை மூலவரான முருகன் வள்ளி தெய்வயானை விக்கிரஹங்களுக்கு வில்வமாலை இங்கேயே தொடுக்கிறார்கள். கடைகளில் விற்கும் மற்ற மாலைகள் சாற்று வதில்லை.

உள் பிராகாரத்தில் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் அமைத்துள்ள ஸ்ரீசக்கர யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் விநாயகர், வள்ளி– தெய்வானையுடன் கூடிய முருகர், சிவன், உமையவள், சண்டேசர், அஷ்டதிக் பாலகர், பைரவர்களுக்கு உரிய மந்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.. கூர்மம், அஷ்டநாகம், அஷ்டகஜங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இச்சக்கரம் அமைந்துள்ளது. தினமும் இதற்கு பூஜைகள். விசேஷகாலங்களில் சிறப்பு பூஜை.

கோயில் நேரம்: காலை 7 மணிக்கு - நண்பகல் 12.30 மணி- மாலை 4.30 மணி-இரவு 8.30 மணி வரை.

Saturday, November 25, 2017

A DUTY BEFORE US

                                   A  DUTY BEFORE  US    j.k. sivan 
                                                            
We inherit properties left as legacy by our ancestors. We either develop, modify, demolish and renew, or repair and live in it. It all depends on its status, condition  and suitability for present  needs and pattern of our  life.  We always try best to  enhance  the  utility for our happy,  comfortable  living and plan for its fitness to meet  the demands of the future.

Stop to think for  a minute.  The world we live in, is  such a a gift of Nature to us.  It has  been enjoyed by our ancestors. They nurtured,  maintained  it,  improved upon it, planted and grew trees, dug wells, lakes, tanks and temples,  and built  bridges and dams for conserving water --  all for our  happy living. They lived with Nature, depending fully on what  Nature offered in plenty, and ensured they derive more from Nature by helping it, improving  upon it, and expanding the scope of a better living than what they were gifted at the beginning. 

In fact they were more knowledgeable and wiser than us.  We are proud that we are better educated and know science and economics. Regrettably, we broke their finest system in the garb of advanced civilization and modernisation.

What is education?  To learn to kill ourselves and others by various  short sighted systems,  ignoring  ecological balance, and disturbing nature in its entirey?   Our scientific development and knowledge had wrongly channelled us in more ways than one.

Our invention of the plastic, dependence on rubber, chemicals, and pvc, polythene products  etc., cement, pesticides, chemical fibres in place of pure cotton, for wearing our garments,  metal tar etc-- we thought  are  for  our mprovised  modern, easy and beneficial living.  It has disturbed the nature  and  slowly and steadily makes it detrimental for our normal happy living.  

Diseases spread  faster and brings innumerable disorders and  difficulties, because of ecological disturbance,  use of  chemicals, and  poisoning the food  nature  has been giving  all along by  using  artificial means and pestiticides, chemical manures etc.,

Nature relies on recycling its own products and offer  comfort and safe materials and  stuff  which we disturb by  introducing  in lieu  the indestructible harmful  chemical based products which  cannot be recycled easily.  The side effects  of  each and every modern introduction is proving more harmful. It has become unavoidable.  Health is not cared for and reliance  on nature’s cure is overlooked and poisonous  and harmful antibiotics are introduced  into our biological system from childhood. 

Say  ''No'' to plastic.  Carry with you cloth bag or bamboo basket  for buying your groceries and  vegetables. Refuse when offered  by the vendors and shop keepers. If no taker, then the demand for such harmful things will fade and disappear slowly  as none would manufacture or sell,

Dont  buy chemical mixed products for use on your body such as creams and deodorants  etc.,  Use  natural products  like sandal wood,  neem,  and  home  made   products for contact with your skin.  Encourage  using  paper bags. It  can be  recycled and re- used . There will be no pollution.  

Agriculture fields are fast disappearing  eaten by flat promoters and real estate investors.  Villages are no longer the same as they were during the days of our ancestors.   Walk to the shops and avoid using  two wheelers .  Use  public vehicles such as train and bus wherever  time  permits and possible. Accordingly  plan your day and strictly follow it.   Teach children to become interested in gardening and use of cotton  etc, instead of artificial fibres and silk.  Now the rains have made the earth soft and regenerated, plant saplings. grow your own kitchen garden.

We are a recognized large agrarian country. Why  our agricultural products are becoming scarce and the price demanded for them is soaring high?  because of inadequate land and labour to work upon it.  Our  unscrupulous acts , encouraged by most of us  results in fertile agrarian lands of produce being made concrete jungles.. ..  money money and greed for money had usurped us.   

Trees are cut and plants are destroyed for various  commercial and business reasons for becoming rich.  Everyday we read and see pictures of red sanders and wood stealthily cut from our protected forests. We are naturally inviting disasters by  causing failure of  seasonal rains and water supply and storage facilities. 

We  have  so many ideas to disturb nature and spoil the beautiful and bountiful  mother earth under the guise of modernisation and advancement. It is nothing short of suicide. 

 Let every one  try to plant a tree  if you have  space in your house or  grow creepers and small plants in  tubs,  cement troughs and  big  containers  even if living  in flats watering them daily  and replacing the soil from time to time. You will find them a happy company and  the joy and benefit you derive  out of this is matchless and incomparable.  Grow green chillies, coriander leaves, tomatoes and greens at home for your own use and the joy of seeing the flowers and vegetables grown by you is matchless.

HUMAN BODY

உன் உடம்பு.. தெரியுமா உனக்கு...?
J.K. SIVAN

ஏன் தலையில் கையை வைத்துக்கொண்டு விசனமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் என்று கிருஷ்ணன் என்னெதிரே வந்து நின்று கேட்டால் என்ன சொல்வேன்.

'ஏன் என்னை இந்த உலகத்திலே பிறக்க வைத்தாய். படுகின்ற அவஸ்தை தாங்கமுடியவில்லையே.

கிருஷ்ணன் சிரித்தான்.

''நான் கஷ்டப்படுவதைப் பார்த்து இவ்வளவு சிரிப்பா உனக்கு?''

''அடே முட்டாளே, உலகத்திலேயே பிறவிகளில் மேன்மையானது மனித பிறவி. அதை உனக்கு கொடுத்ததற்கு திட்டுகிறாயே?''

''ரொம்ப லக்ஷணமாக இருக்கிறது இந்த பிறவி. கொஞ்சம் கூட நிம்மதி இல்லை, நாய் படாத பாடு. செத்துடலாம் போல இருக்கு இந்த உடம்பை வச்சுண்டு படற அவஸ்தைக்கு .''

''நீ வரவழைத்துக்கொண்டதற்கு நீ தான் அனுபவிக்கவேண்டும். என்னை ஏன் குறை கூறுகிறாய்?''

''ரொம்ப பெருமை பட்டுக்கொள்ளாதே அப்படி எந்த விதத்தில் என் உடம்பு மற்ற பிறவிகளின் உடம்பை விட சிறந்தது என்று மார் தட்டிக்கொள்கிறாய் கிருஷ்ணா?''

மனிதா உன் உடம்பை அற்புதமாக பிரமன் படைத்ததை மறந்து பேசாதே. நான் சொல்ல வேண்டாம் இந்தா. உங்களில் ஒருவன் ஒரு விஞ்ஞானி எழுதியதையாவது படி. நான் சொல்வது அப்புறம் தான் உன் மண்டையில் ஏறும்.'இதெல்லாம் புரிந்தால் தான் நான் சொல்வது உனக்கு புரியும். அவசரப்படாதே.'

கிருஷ்ணன் நீட்டிய ஒரு அச்சடித்த காகிதத்தில் என்ன படித்தேன்.

யாரோ எழுதியது மனித உடலைப் பற்றி. ஆச்சரிய தகவல்கள். உண்மையிலேயே அது சுவாரஸ்யமாக இருக்கிறது.

நுரையீரலில் 300,000 மில்லியன் ரத்த நாளங்கள். இதை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்தால் 2400 கி.மீ (1500 மைல்) நீளம்....

ஆணின் உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உண்டாகி... அந்த ஆள் ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும்.

தூங்கும்போது மனிதனின் உயரம் 8mm அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். காரணம்: உட்காரும்போது,/ நிற்கும் போது, பூமியின் புவி ஈர்ப்பு விசையினால் எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தம்.

ஒவ்வொரு சிறுநீரகமும் கிட்னி ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

மனிதன்பகாசுரன். ஒவ்வொருவனும் வாழ்நாளில் குறைந்தது 50 டன் உணவை உண்டு 50,000 லிட்டர் நீர் குடிக்கிறான்.

கண்களின் தசை ஒரு நாளில் 100,000 முறை அசைகிறது. அதற்கேற்ப சமமாக கால்களுக்கு வேலை தரவேண்டும் என்றால் அப்பாடா, தினமும் 80 கிலோமீட்டர் ...... ந.. .. ட.....க்........ க...... வேண்டும்.

நம் உடம்பு சுமார் 30 நிமிஷத்தில் அரை கேலன் தண்ணீரை கொதிப்பதற்கு வேண்டிய சூட்டை தருகிறது..

பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது கொஞ்சம் கூட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு உண்டு. .

நமது ஒரு தனி ரத்த அணு, நமது முழு உடம்பையும் சுற்றிவர ஒரு நிமிஷம் தான் ஆகும்.

மனித உடம்பில் பெரிய செல் பெண்ணின் உடம்பில் உருவாகும் கரு முட்டை தான். ரொம்ப சின்னது ஆணின் விந்து, செல்.

நடக்கிறோமே . ஒரு அடி எடுத்து வைக்க, 200 தசைகள் வேலை செய்கிறது. நமது ரெண்டுகால்களின் பாதங்களில் மட்டுமே 250,000 வியர்வை சுரப்பிகள் உள்ளது.

திகு திகுவென எரியும் ஆசிட் நமது வயிற்றில் இருக்கிறதே அந்த ஜீரணம் செய்யும் ஆசிட், zink (துத்தநாகம்)அப்படியே கரைத்துவிடும் சக்தி உள்ளது.

நமக்கு மூளை இல்லை என்று எவன் சொன்னான். நமது மூளையில் britaanica encyclopaedia போல 5 மடங்கு கூடவே விஷயம் சேர்த்து வைத்துக்கொள்ள முடியும் சார்.

பல்லு மேலே வெள்ளையா எனாமல் இருக்குதே, அது தான் நம்ம உடம்பிலேயே hard கடினமானது.

ஒரு ரகசியம் சொல்லட்டுமா. உங்க கட்டைவிரல் நீளமும் உங்க மூக்கு நீளமும் ஒண்ணுதான் சார்.

பாக்டீரியா கிட்ட வரக்கூடாது என சொல்லாதேங்கோ .உங்க காலில் ஒரு ட்ரில்லியன் trillion பாக்டீரியா !!

பிறக்கும்போது உடம்பிலே 300 எலும்புகள். வளர்ந்து பெரியவனானதும் 206 எலும்புகள் தான். நமது மொத்த எடையில் 14% இந்த எலும்புகள் தான். ரொம்ப ஸ்ட்ராங் தொடை எலும்பு, கான்கீரிட்டை விட ஸ்ட்ராங்..

நமது எடையில் 7% இரத்தம். ஆஹா! அனுதினமும் 450 கேலன் ரத்தத்தை kidney சிறுநீரகம் க்ளீன் செய்யுது..

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் . உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் 120 நாள் தான் இருக்கும். அப்பறம் மாறும். ஒரு ;நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன. பிறக்கின்றன.

உடம்பிலே இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம். நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு. நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

நமது இதயம் ஒரு வருஷத்துக்கு 35 மில்லியன் முறை லப் டப் னு துடிக்கிறது.ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் barrel பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது. இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
நமது மூளை 80% நீரால் ஆனது.
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான். மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்:
கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்கள்.

இதெல்லாம் தெரிந்துகொண்டால் இப்படி அற்புதமாக பிரமன் படைத்த உடம்பை ஒன்பது வாசல் கோவில் என்று போற்ற தோண்றவேண்டாமா. அதனுள் பரமனை அனுபவித்து நன்றி சொல்லவேண்டாமா. இது புரிந்தபின் கீதை படிப்போம்.

Friday, November 24, 2017

TAMIL OCEAN

தமிழ்க்கடலில் சில முத்துக்கள்   J.K. SIVAN 

 உலகத்தில் இருக்கும் அத்தனை சமுத்ரங்களையும் ஒன்றாக  சேர்த்தாலும்  அது நமது தமிழ்க்கடலுக்கு ஈடாகாது என்று சொல்லும் அளவுக்கு எத்தனையோ  விஷயங்கள்  இருக்கிறது  நமது தமிழ் இலக்கியத்தில்.  அப்போதும் அப்போது  தேடும்போது சில அற்புதங்கள் கண்ணில் படுகிறது. அது பற்றி ரெண்டு விஷயங்கள் சொல்கிறேன். 

ஒரு புலவர், வழக்கம்போல் வறியவர். காசு வாசனை பார்க்கக்கூட கிடைக்காதவர். எங்கோ ஒரு தனவந்தரை சந்திக்கிறார். புலவரது துரதிர்ஷ்டம்  அந்த  தனவந்தர்  நொடித்து போயிருக்கிறார்.  இருந்தும் ஏதோ கடன் வாங்கியாவது கொஞ்சம்  புலவருக்கு பரிசளிக்கிறார்.  அவரளித்த பரிசை போற்றி ஒரு கவி பாடுகிறார். ரொம்ப சிம்பிள். அர்த்தம் இட்லி சாப்பிடுவது போல் எளிதாக இருக்கிறது. 

''இந்த காவிரி ஆற்றங்கரையில் நிற்கிறேன்.  நிறைய  வெள்ளமாக ஓடும்போது வளம் கொழிக்கிறது. தண்ணீர் ஓடும்போது எத்தனையோ நிலங்கள் உயிர்கள் சந்தோஷமாக அனுபவிக்கிறது.  தண்ணீர் வற்றிவிட்டது இந்த ஆற்றில். அப்போதும்  மக்கள் அதை தேடி வருகிறார்களே.  '' என்னிடம் தண்ணீர் இல்லை, ஓடுங்கள்'' என்றா விரட்டுகிறது?  என்னை தோண்டி பாருங்கள் கொஞ்சமாவது உங்கள் தாகம் தீர்க்கிறேன்'' என்று எல்லோருக்கும்  ஆற்று மணலில்  ஊற்று மூலம் மகிழ்ழ்விக்கிறதே.   இந்த  ஆற்றை பார்த்தபோது எனக்கு ஆதரவளித்த அந்த தனவந்தர் ஞாபகம் தான் வருகிறது.  பாவம் பிச்சை எடுத்தாவது எனக்கு தானம் செயகிறாரே..   இது தான் அந்த பாடல்.

''கொடுத்தாவி காக்கின்ற காவேரி வற்றிக் குறைந்திடினு
மடுத்தோண்டி நீருண்ணுவார் அதுபோல் இந்த மானிலத்தி
லடுத்தாரை ரட்சிக்குந் தாதா வென்பார்க்கு அடையாளம் பிச்சை
யெடுத்தாகிலுங் கொடுப்பார் வெள்ளை நாவல் இருப்பவனே''


அதே புலவரே இன்னொருவரோ யாரோ, ரொம்ப அலுத்துப் போய்விட்டார். பசியோடும் ஏமாற்றத்தோடும் நடந்து திருப்போரூர் வந்து விட்டார்.  அடேடே  இங்கே  முருகன் இருப்பானே.  அவனை தரிசித்து அவனிடம் முறையிடுவோம்  என்று  நடக்கிறார். திருப்போரூர் கோவில் வந்துவிட்டார். வேலவனை, முருகனை பார்த்துவிட்டார்.  
ஓ வென்று கதறுகிறார்.   

நான்  எந்த  இலக்கணப்பிழையற்ற பா  வில்  பாடினாலும்  எவர் காதிலும் விழவில்லை. உன் தந்தை, தாய், மாமன் மாமி ஒருத்தருக்கும்  காது கேட்கவில்லையே அப்பா. நீ  தமிழக கடவுள். நீயாவது உன் வேலை கொஞ்சம் கீழே வைத்துவிட்டு என் பாக்களை கேட்டு அருள் புரியக்கூடாதா?

எல்லோரையும் புகழ்ந்து போற்றி, எனக்கு தெரிந்த, சந்தப்பா, விருத்தப்பா, கலிப்பா, வெண்பா, இசைப்பா, கொச்சகப்பா, தனிப்பா   எவ்வளவோ ''பா'' க்களில்  என் சாமர்த்தியம் காட்டினேன். ஹுஹும்..  இதெல்லா பாவிலும்  ஆச்சர்யமான கிரந்த பாவிலும், வெல்லப்பாகு  போல் இனிமையாக பாடினான். சிரிக்க சிரிக்க விகடப்பாவும் பாடினேன். ''அட, போய்யா,  என்று காதிலே கூட வாங்காமல் விரட்டுகிறார்கள், இனி நான் செய்வது ஏதப்பா?  பேசாமல் உன் திருப் ''பா''தத்தை பிடித்துக் கொள்கிறேன்.   அப்பனே, கந்தப்பா, முருகப்பா, திருப்போரூர் வாழும் வேலப்பா, உன்   கை  காட்டப்பா  ( நானிருக்க பயமேன் என்று அபய  ஹஸ்தம்) 
மெய்யான தெய்வமே, மெய்யப்பா, உடனே கை காட்டப்பா'' என்று பாடுவது எனக்கு ஆனந்தத்தை தந்தது. உங்களுக்கு??

இந்த தனிப்பாடல் தான் அது: 


''சந்தப்பா, விருத்தப்பா, கலிப்பா, வெண்பா
தாழிசைப்பா ,கொச்சகப்பா ,த் தனிப் பாவுக்கும்
விந்தை யப்பாவாகிய கிரந்தப் பாவும்
வெல்லப் பாவது போல விகடப் பாவும்
எந்தப்பா வுரைத்திடினும் ஒரு பேறில்லா
ஏதப்பா விக்குநின திணைப் பாதத்தைக்
கந்தப்பா முருகப்பா போரூர் வாழ்வே
கையப்பா மெய்யப்பா காட்டப் பாவே.''

WANTED A SERVANT.2

  வாண்டெட் வேலைக்கு ஆள் - 2     J.K. SIVAN

வேலைக்கு  ஆள்  கிடைப்பது எவ்வளவு கஷ்டம், அப்படி கிடைத்தாலும்  வேலை நடக்காமல் துன்பம் மட்டுமே  சேர்வது பற்றியும் சொன்னேன் அல்லவா.  இந்த மாதிரி சூழ்நிலையில் தான் ஒரு அபூர்வ சம்பவம் நடந்தது. 

நல்ல ஒரு ஆள்  சொன்னதை  செய்து திருப்தி படுத்துபவன் கிடைக்கமாட்டானா  என்று ஏங்கும்போது தான் இது நடந்தது.                                                

திடீரென்று ஒருநாள்  அந்த ஆள்  வேலைக்கு  கிடைத்தான் அல்லவா?  நம்பிக்கையில்லாமல்  அவனுடன்  பேச்சு நடந்தது.

''யாருப்பா  நீ ?''

"இங்கே  தானுங்க -

''என்ன பண்ணிட்டிருக்கே?''
''நாங்க  மாடு, கன்னு மேய்க்கிற  இடையருங்க.  வீட்டோட  இருந்து  எல்லா  வேலையும்  செய்வேனுங்க. ''
''சரியான நாட்டுப்புறமாக  இருக்கிறதே. பார்ப்போம் வேறே என்னதான் தெரியம் என்று என்று பேச்சு கொடுத்தேன்.  
''வேறே என்ன எல்லாம் செய்ய தெரியும் உனக்கு ''
'வழக்கமா  வீடு  பெருக்கிறது, துணி துவைக்கிறது.  சின்ன புள்ளைங்களைப்  பொறுப்பா  பாத்துக்கிறது.  அவங்களை   இஸ்கோலு   கூட்டி போறது இந்த மாதிரி வேலை எல்லாம்   கூட  செய்வேனுங்க. ''
''அட இதெல்லாம் கூப்பிட செய்வியா? அப்புறம் ''
'' டமாசா   பாட்டு  எல்லாம்  கூட புள்ளைங்களுக்குச்  சொல்லித்  தருவேனுங்க. நானு  வளக்கிற  பசங்க  அழுவவே அழுவாதுங்க.  சதா  சந்தோசமா  சிரிக்கும்.
''ம்ம்   ஓஹோ...''
''வந்துங்க....  ராவிலே  தனியா  போவ  சொல்ல   துணைக்கு வருவேனுங்க.  ஒரு கஷ்டமும்  இல்லைங்க. கூப்பிட்ட  குரலுக்கு ஓடியாருவேனுங்க.''
''ஆமா   ஆளு  வாட்ட சாட்டமா இருக்கியே''  சொல்லு?''
'' எவனாச்சும்  கோணா   மாணான்னு  வாலாட்டினா  ஒரே  போடு தாங்க.  அவன்  டவுனாய்டுவான்.  நம்ம கிட்டே  எவனும்  வாலாட்ட முடியாதுங்க''. 
''இவ்வளவு சொல்றே  உன்  பேர்  என்னான்னு  சொல்லலியே பா''
''என்னைத் தெரிஞ்சவங்க  ''டே  கண்ணா'' ன்னு  கூப்பிடுவாங்க''.
''தம்பி,   உன்னைப் பார்த்தா  நல்லவனா இருக்கே. சிரிச்ச  முகம்.  சந்தோஷமாகவே  இருக்குதுப்பா   உன்கூட  பேச.  ரொம்ப மகிழ்ச்சி.  நீ  சொன்னதெல்லாம்  பிடிச்சிருக்கு.   அது சரி.  என்ன கூலி  கேட்பே  வேலை செய்ய?''

''இன்னா சாமி இது. இப்படி கேட்டுட்டே.  பொஞ்சாதியா, குழந்தையா, குட்டியா?.  ஒத்தை ஆளு  நானு.  தனியா  எனக்கு என்று  ஒரு    வீடு  வாசல் ஏதுமில்லை. பார்க்கறதுக்கு  இளமையா  இருக்கலாம்.  எனக்கு  ஆன  வயசு எனக்கே  தெரியாதுங்க.''
''அடேயப்பா  என்ன கூலி கேப்பே?''
'' காசு  என்னங்க  காசு. இன்னிக்கு வரும்  நாளைக்கு  போவும்.  எனக்கு  வேண்டியதெல்லாம்   மனசு தாங்க.  என்னைப்  பிடிக்குதான்னு  சொல்லுங்க.... .  உங்களுக்கு  எது வேண்டுமின்னாலும்  செய்யறேன்.''

இது மாதிரி  ஒரு  பழஙகாலப்  பைத்தியம்  கிடைக்குமா?.  உடனே  வேலைக்கு எடுத்துக்கொண்டேன். என்னோடேயே  இருக்கிறான்.  நிழலாய்க்  கூடவே  இருந்து எல்லா  வேலையும் தானே  எடுத்துப் போட்டுக்கொண்டு   செய்கிறான்.

நாளாக நாளாக  அவன்  இல்லாமல்  நான்  இல்லை   என்று  ஆகிவிட்டது.  இவனைப்போல்  இன்னொருத்தன்  இந்த  வையகத்தில்  இல்லை  எனலாம்.  என் குடும்பத்திலே அவனும்  ஒருத்தன் என்கிற மாதிரி  எல்லோருக்கும்  அவனைப்பிடித்து விட்டது. தக்காருக்கு தக்க மாதிரி  வேறே  யாரால்  பழக  முடியும்?

 சுருக்கமாகச்  சொன்னால்,  அவன்  தான் எனக்கு எல்லாமே.  பெருக்குவது.  யாராவது வீட்டில் தப்பு செய்தால் அடக்குவது. புத்திமதி சொல்கிறது.  பிள்ளைகளுக்கு அவன்தான் வாத்தியார். வளர்ப்புத் தாய்  என்று கூட  சொல்லலாம். உடம்பு யாருக்காவது  சரியில்லை என்றால்  ஓடி யாடி  உதவுகிற  வைத்யனும் கூட.  விடியல்  காலை  வீடு பெருக்கி  வாசல் தெளித்து  பால்  வாங்குவது முதல்  இரவு  கதவு  எல்லாம்  தாழ்ப்பாள்  போட்டு விளக்குகளை  அணைப்பது வரை  ''ஏ  கண்ணா''  என்று  அவன்பேர்  சொல்லி  கூப்பிடாமல்  ஒன்றுமே  முடியாது.  

அவனுக்கு  தெரிந்த  வேதாந்தம் விஞ்ஞானம்  அசாத்தியம்  எனலாம்.  அப்படியே  அசர வைக்கும். பண்பில், நட்பில்,  நேர்மையில்,  பாசத்தில்  அவனிடம்  கட்டுண்டு  அனைவரும்  எங்கள்  வீட்டில்  திளைக்கிறோம். இவ்வளவு சொல்லியும்  இன்னும்  நிறைய  சொல்ல இருக்கிறது.

பாரதியார்  சொன்னதைத் தான்  நான்  சொல்கிறேன்.

கண்ணனை  நான்  ஆட்கொண்டேன், கண் கொண்டேன், கண்டு கொண்டேன், கண்ணன் எனை  ஆட்கொள்ள காரணமும்  உள்ளனவே.

மேற்சொன்னது  யாவும்  பாரதியாரின் ''கண்ணன்  என்  சேவகன்''  பாட்டின் வார்த்தைகளை  வைத்து  பின்னப்பட்டவை. இவ்வாறே  கண்ணன்  உங்கள்  மனத்திலும் வீட்டிலும்  ''எஜமான் வேலைக்கு''  ' வேளா  வேளை வரட்டுமே!'

                              கண்ணன் என் - சேவகன்

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ... 5

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
என்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்; ... 10

சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் ... 15

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; ... 20

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் ... 25

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்''
என்றுபல சொல்லி நின்றான் ''ஏது பெயர்? சொல்'' என்றேன்
''ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை'' என்றான்.
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்; ... 30

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
''மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு'' கென்றேன். ''ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் ... 35

ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை'' யென்றான்.
பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை . ... 40

ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் ... 45

வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் ... 50

பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான். ... 55

இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்! கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், ... 60

தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்! கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!

 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...