Sunday, June 28, 2020

GITANJALI


தாகூர்  J K  SIVAN  

                     



                  ஒரு அமர கவிஞன் 

நமதுஞாபக சக்தி இருக்கிறதேஅபாரம். இன்று காலை என்ன சாப்பிட்டோம் என்பது கூடநினைவில் இல்லை.  நாம் எப்படி என்றோ வாழ்ந்த மகான்களை நினைக்கப்போகிறோம்? .தாடிக்காரர்களில் சிலர் மோசமாக இருப்பவர்களும் உண்டு அருமையானவர்களும் உண்டு.  பறவைகளில் குருவி,  ராஜாளி, கிளி,  கருடன் இல்லையா அது போல். நான் சொல்லும் தாடிக்காரர் வசதியானவர். எதையும் அறுக்க, வெட்ட, உடைக்கச்  சொல்லாதவர்.அமர காவியங்களைப்  படைத்தவர். உலகம் புகழ்ந்த காவியக் கவியோகி  ரவீந்த்ரநாத்தாகூர் (1861-1941).   


தாகூர்  ஒரு விசித்திரமான மனிதர்.  அவர் மனதில் ஓடும் எண்ணங்களை வரிசைப்படுத்த முடியாது.   வெள்ளத்தை   குடத்தில் பிடிக்கமுடியுமா?

ஆழ் மனத்தில்  அரும்பும்  எண்ணங்களை, வெளியே காணும் இயற்கை சூழலோடு பொருத்தி கலந்து அளிக்கும்  கவிஞன். இதுவரை காணாத தோற்றங்கள்.  இயற்கையோடு  ஒன்றிய எண்ணக்குமுறல்கள்.  பக்தி அடிநாதம் இணைக்கும் கற்பனைக் கட்டிடம்.

அதனால் தான்  நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுத்தார்கள்.   கீதாஞ்சலி கண்ணனை பற்றி அவன் நாமத்தை பற்றி கூறவில்லை. புல்லாங்குழல் அங்கே யாழாக  காட்டப்பட்டது.  உருவமற்ற அவன்  தோன்றினான், பேசினான், உதவினான், அணைத்தான், ஆதரித்தான், வழிகாட்டினான். வழி நடத்தினான்.

வங்காள மொழியில்  53 பாடல்களையும்  ஆங்கிலத்தில் மற்ற  தொகுப்புகளி லிருந்து  50 என்று மொத்தம்  103 கவிதைகள் கீதாஞ்சலியாக நமக்கு  பரிசளிக்கிறார்  தாகூர்

ஒரு தனித்த  இதயத்தின் வெளிப்பாடுகளாக இவை பல்வேறு சூழ்நிலைகளில்  மக்கள் மேல் அன்பு, தயை, கருணை, இரக்கம் கொண்டதாக  அமைந்துள்ளது ஆச்சர்யம்.

தாகூரின் எழுத்தில் எப்போதுமே  உள்ளே  ஒரு மெல்லிய சோகம், ஏக்கம் தெள்ளத் தெரியும்.  ஒருவேளை   தாகூரின் மனைவி  ம்ருநாளினி மறைவாலும்,  மகள் ரேணுகாவின் மறைவாலும் (1902)  தந்தை தேவேந்த்ரநாத் தாகூரை இழந்ததாலும்  (1905) , மகன்  சமிந்திரா 1907ல் மறைந்ததாலும் தனிமை முழுசாக அவரை விழுங்கிவிட்டதோ?   அடுத்தடுத்து  மரணத்தின் சோகம்  அவரை ஆட்கொண்டதோ?  அவர்  கவிதைகளில் அடிக்கடி  வரும்  திடீர் மழை தான் அந்த துக்கத்தின் சாயலோ?

இறைவனின் கருணையை பாடும் வரிகளில் இயற்கையாக,  காணும் யாவையிலும் அவனை  உணர்வதை  தாகூர் வர்ணிக்கும் அழகே கீதாஞ்சலி.

எங்கோ வெகு தூரத்தில் இருப்பதாக  அறியும்  அவனை  அவன் சுவாசம் கழுத்தில் படும் அளவு நெருக்கமாகி  அவரால் உணரமுடிகிறது. தினசரி வாழ்வில் தெய்வீகத்தை அனுபவிக்க முடிகிறது.  இருளில் ஒளி, ஒலியில்  ஒன்றிட முடிகிறது.

அரசனாகவும் ஆண்டியாகவும் அவனை அணுகமுடிகிறது.  காற்றில், கொடியில் மலரும் அரும்பில் ஆண்டவன்  அன்பை அனுபவித்து அவனை  அணைக்கிறார்.

தனிமையில் ஒரு வனப்பிரதேசத்தில்  இப்போது  உத்தரகாண்டத்தில், ஒரு பழைய இல்லத்தில்  தாகூர்  தனிமையாக  வசித்து  கீதாஞ்சலி எழுதினார் . அங்கே  சிறுத்தை, பாம்புகள், வன விலங்குகள், ஊர்வன, நடமாட்டம் அதிகமிருந்தும்  அவர் பாறைகள்  மேல் கரித்துண்டுகளால்   கீதாஞ்சலி கவிதைகளை எழுதி மகிழ்ந்தார்  என்பார்கள்.  கங்கையில் படகு வீட்டில் இருந்துகொண்டு இரவெல்லாம் மிதந்துகொண்டே  இயற்கையோடு ஒன்றி  எழுதுவார்.   அவரது சிதிலமான வீட்டு படங்களை பார்த்தேன். இணைத்திருக்கிறேன்.
 
எனக்கும் தான்  82 நடக்கிறது.   என்ன பிரயோஜனம்?  தாகூர்  80  வருஷ  வாழ்நாளில் சாதித்தது எத்தனையோ யுகங்களுக்கு போதுமானது. குருதேவ்  என்றுஎல்லோராலும் போற்றப்பட்டவர். சிறந்த தத்துவ ஞானி.நமது முண்டாசு கவிஞனுக்கும் காந்திஜிக்கும்ரொம்ப பிடித்தவர்.அவர் எழுதிய கீதாஞ்சலி அற்புதமான ஒரு காவியம் . அடிக்கடி   எடுத்து சிலது அப்பப்போ  படிப்பேன் .ஆஹா அதை கொஞ்சம் அள்ளி வீசினால் என்ன?

ஏற்கனவே  உங்களுக்கு  தாகூரின்  காபூல் காரன், ராய் சரண், சுபா, போஸ்ட்மாஸ்டர்,  படிக் சக்கரவர்த்தி  போன்ற  மனதைப் பிழியும் கதைகளை சுருக்கி தந்திருக்கிறேன்.  நேற்று  ஒரு ஊரிலே ஒரு ராஜா.....கொடுத்தேன்.

தாகூர்  பிஞ்சிலே பழுத்தவர்.  முதல் வங்காள மொழிகவிதைத் தொகுப்பு 17 ஆவது வயதில்.

கீதாஞ்சலி   தாகூரின்அற்புதமான மனம் கவரும் எண்ணச் சிதறல். எல்லா மொழிகளும் எல்லோருக்கும் தெரியாது. வங்காளியில் படிக்க முடியாவிட்டாலும்  அவரே  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தகு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.  இல்லாவிட்டால் நம்மால் எப்படி அதை படிக்க முடியும். 

தாகூர்  குடும்பத்தில் பல கலைஞர்கள்,  கவிஞர்கள்  உள்ளார்கள். கோகோந்த்ரநாத், அபனீந்திரநாத், தேவேந்திரநாத், த்விஜேந்திரநாத்  தாகூர்கள்   பலே பலே   .கீதாஞ்சலியில்  இனி  தினமும் ஒன்று அறிந்து கொள்வோம்.

Saturday, June 27, 2020

HUMAN BODY 3

KNOW YOUR BODY    3. J K SIVAN
                                                                           
   THE SPLEEN 

Dear Friends
I am thankful to all those who contacted me to thank me for the articles on our body.  Well it is some basic knowledge  to know about our system of  body function.   This is the third in the series 
We shall today know something about the Spleen  (மண்ணீரல்) in our body.  Almost all animals have spleen.  It is the filter for purifying the blood..  It removes microbes and worn out or damaged red blood cells..  It affects the number of red blood cells that carry oxygen throughout your body, and the number of platelets, which are cells that help your blood to clot. It does this by breaking down and removing cells that are abnormal, old, or damaged.

The spleen varies in size and shape between people, but it’s commonly fist-shaped, purple, and about 4 inches long. Because the spleen is protected by the rib cage, you can’t easily feel it unless it’s abnormally enlarged.
When blood flows into the spleen, red blood cells must pass through narrow passages within the organ.   Healthy blood cells can easily pass, but old or damaged red blood cells are broken down by large white blood cells. The spleen will save any useful components from the old blood cells, including iron, so they can be reused in new cells. The spleen can increase in size in order to store blood 
The organ can widen or narrow, depending on the body's needs. At its largest, the spleen can hold up to a cup of reserve blood.
We talk much about immune system during this crisis we face with Corona. Spleen is an important organ in the immune system.  It  produces the  white blood cells for fighting infection and synthesize antibodies.   Spleen  though it  performs many functions in the body, is  not vital for our survival.  Other parts adapt to situation in the absence of spleen. pt and increase their ability to fight infection and remove redundant red blood cells.
Do you know where is spleen in our body?   It is located in the left upper quarter of the abdomen, beneath the ninth to the twelfth rib. In healthy adults, the organ measures around 10 to 12 centimetres in length and weighs around 150 to 200 grams.  It is in two compartments, the red pulp and the white pulp, and is surrounded by a dense fibrous covering called the splenic capsule.

The splenic artery delivers blood to the spleen where it is filtered by the red pulp. The red pulp is made up of cords of connective tissue and wide blood vessels called splenic sinusoids. Blood passes through the cords and into the sinusoids where it is drained into the large trabecular veins of the spleen.

When your spleen enlarges, it can’t filter your blood as efficiently as it once did. It may accidentally filter out normal red blood cells and platelets, leaving fewer healthy blood cells in your body. An enlargement of the spleen that leads to the destruction of too many blood cells is a condition called hypersplenism.

An enlarged spleen  may not cause symptoms at first. Eventually, it can become painful. If your spleen enlarges too much, it can rupture. The spleen can also become injured or rupture immediately after a hard hit to the abdomen, a rib fracture, or other accident. This can lead to removal of the spleen.

The spleen is the largest organ in the lymphatic system. It is an important organ for keeping bodily fluids balanced, but as already stated above, we can  possibly live without it.
If the spleen detects potentially dangerous bacteria, viruses, or other microorganisms in the blood, it — along with the lymph nodes — creates white blood cells called lymphocytes, which act as defenders against invaders, The lymphocytes produce antibodies to kill the foreign microorganisms and stop infections from spreading.

Symptoms of a lacerated or ruptured spleen include pain or tenderness to the touch in the upper left part of the abdomen, left shoulder and left chest wall, as well as confusion and lightheadedness. If you experience any of the symptoms after a trauma, seek emergency medical attention immediately.

Treatment options depend on the condition of the injury. Lower-grade lacerations may be able to heal without surgery, though they will probably require hospital stays while doctors observe your condition. Higher-grade lacerations or ruptures may require surgery to repair the spleen, surgery to remove part of the spleen, or surgery to remove the spleen completely.

An enlarged spleen, also called a splenomegaly, is a serious but typically treatable condition. "An enlarged spleen puts one at risk for rupture," Anyone can get an enlarged spleen, but children suffering from mononucleosis, adults with certain inherited metabolic disorders including Gaucher's and Neimann-Pick disease, and people who live or travel to malaria-endemic areas are more at risk.

Cancers that originate in the spleen are relatively rare. When they do occur, they are almost always lymphomas, blood cancers that occur in the lymphatic system. Usually lymphomas start in other areas and invade the spleen. According to the National Cancer Institute, adult non-Hodgkin lymphoma can have a spleen stage. This type of spleen invasion can also happen with leukemia, blood cancer that originates in bone marrow. Rarely, other types of cancers — like lung or stomach cancers — will invade the spleen.

Spleen cancer symptoms may resemble a cold or there may be pain or fullness in the upper abdomen. An enlarged spleen can also be the result of spleen cancer.



Friday, June 26, 2020

KALAMEGAM



                 
    மீண்டும் காளமேகம்  J K  SIVAN

டாக்டர் ஸ்ரீனிவாசன் என்று ஒரு கோயமுத்தூர்  நண்பர். நேரில் பார்த்ததில்லை. எழுத்தால் பழக்கம்.  இப்படி தெரிந்த நண்பர்கள்  எண்ணிக்கை  லக்ஷத்தை   நூறை தாராளமாக தாண்டிவிடும்.


காளமேகத்தை பற்றி நான் எழுதிய  பாடல் விமர்சனத்துக்கு  பரிமாறலாக தான் ஒன்று அனுப்பி இருந்தார். அற்புதமாக இருக்கிறது.   அதை ரசியுங்கள்.  

'' பாணர்க்கு ஏவுவதும் பைம்புனலை மூடுவதும்
தாணு உரித்ததுவும் சக்கரத்தோன் வூணதுவும்
எம்மானை ஏத்துவதும் ஈசனிடத்தும் சிரத்தும்
தை மாசி பங்குனிமா தம்''

 மேலே  கொடுத்த  காளமேகம் பாடல் புரியவில்லை. திரும்ப படித்தல்  ஏதோ   பாணர்கள்,  தாணு,  பெருமாள், ஈசன்  என்று  ஏதோ   சொல்லிவிட்டு  கடைசியில்  மூன்று தமிழ் மாதங்களை   தை  மாசி, பங்குனி என்று முடிக்கிறார். என்னய்யா இது?  இதற்கு  ஜாலிலோ  ஜிம்கானா  பாட்டே  நன்றாக  புரியும்போலே இருக்கிறது. 

இப்போது கொஞ்சம் என்னருகே உட்காருங்கள். பாடலை அக்குவேறு ஆணி வேறாக  பிரிப்போம்.

 தை மாசி பங்குனிமா தம்     : என்ற கடைசி அடியை உற்றுப்பார்த்து பிரித்தால் ?

''தை  மாசு  இபம்  கு  உனி  மாது  அம்''     என்று ஆகிறது அல்லவா.  அதை அப்படியே  வாணலியில் சுட வைத்துவிட்டு அடுத்த அடிக்கு போவோம். 

பாணர்க்கு ஏவுவது --  பாணர்கள்  என்றால்  துணி தைக்கும் தையல் காரர் என்று ஒரு அர்த்தம். அவர்களுக்கு என்ன கட்டளை இடுகிறோம்    :
தை   :  துணியை தைத்துக்கொடுங்கள். 

பைம்புனலை மூடுவது --   தண்ணீரின் மேலே மூடியிருப்பது --மாசு  அதாவது --அசுத்தம்
தாணு உரித்தது --சிவபெருமான் உரித்தது யானையாக வந்த கஜமுகாசுரனை வதைத்து அவன் தோலை உரித்தது.

சக்கரத்தோன்  ஊண் உண்டது:  --திருமால் அவதாரமான கண்ணபிரான்  என்ன சாப்பிட்டான்? 

கு        என்றால்  பூமி --அதாவது  மண். கிருஷ்ணன்  குட்டியாக இருக்கும்போது மண்ணை தின்றான் அல்லவா. 

எம்மானை ஏத்துவது --அதாவது போற்றுவது -

-உனி --அதாவது  நினைத்து 
ஈசன் இடத்தும் சிரத்தும் --மாது  -  பரமேஸ்வரனின் இடது பாகத்தில் இருப்பவள்  உமை எனும் மாது 
 அதே போல் அவரது தலையில் இருப்பவள்  கங்கை எனும் மாது. 

அம்  என்பது அசை

இப்போது பாடலை மீண்டும் படித்துப்பாருங்கள் ரசியுங்கள்  அதன் பொழிப்புரை: 

தையல் காரரிடம்  என்ன  சொல்கிறோம்?  :     தைத்து கொடுங்கள்       தை 
குளம்  ஏரி குட்டை  நீர் நிலைகள் மேல் என்ன படிகிறது?      மாசு    அழுக்கு 
சிவன் எதை ஆடையாக பூண்டான்?    இபம்        தோல் 
மஹா விஷ்ணு  கிருஷ்ணனாக  உண்டது எது ?     கு    மண் 
பரமேஸ்வரன்  உடலில் இடப்பாகத்தில், தலையில் இருக்கும் மாதுகள்?   உமை , கங்கை 
இதை எல்லாம் கருதி, நினைத்து:   உனி 
மூன்று வார்த்தைகளில் பொருள் சொல்:   மாசி பங்குனி தை  என்ற மூன்று மாதங்களின் பெயர்கள். 
இப்படி யாராலாவது தமிழ் எழுத முடியுமா?
இன்னொன்று சொல்லி முடிக்கிறேன் .

சிவபெருமான் குடும்பம் என்ன ? நமக்கு தெரியாதா ? 
சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன்......  இதை நாம் சொல்வதற்கும் காளமேகம் அவர்களை விவரிப்பதற்கும் உள்ள  வித்யாஸம்  இந்த பாடலின் அருமை.   இகழ்வது போல் புகழ்வது வஞ்சப்புகழ்ச்சி . இதற்கு  பின்புலமாக  இருவர்  பேசுவதாக  கற்பனை பண்ணிக்கொள்வோம். ஒருவர்  வீர சைவர். மற்றொருவர்  ஒரு ஆழ்வார்க்கடியான் நம்பி  போல  வீர வைஷ்ணவர்.  சிவனைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார் பாடுகிறார்  சைவர்.  இரு காதுகளையும் பொத்திக்கொண்டு   '

''சைவா , நிறுத்து உன் புராணத்தை. உன் சிவன் யார், அவர் குடும்பத்தார் யார் என்று நான் சொல்கிறேன் கேள் '' என்று சொல்வதை போல இருக்கிறது இந்த காளமேகம் பாடல்.

''அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பறிய மாமன் உறிதிருடி;--சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும் பெருமை இவை''.


வீட்டுக்கு தலைவன்  அப்பன் யார் ஐயா ?   இரந்து உண்ணி :  கபாலம் எனும் மண்டை ஓட்டை, திருவோட்டை, கையில் ஏந்தி  அடுத்த வாய் சோற்றுக்கு  பிச்சை எடுப்பவன்,  பிக்ஷாடனர்

வீட்டுக்காரி அம்மா வைப்பற்றி  கேட்கவே வேண்டாம். அவள் யார் என்று தெரியாதா?    எங்கேயோ ஒரு மலையில்  இருப்பவள்,   ஹேமா, ஹிமகிரி தனயை,    நீலி,  நீலகலர் பெண். பச்சை பொண்ணு  பார்வதி என்று ம் சொல்வார்கள். 

அந்த பெண்ணின் சகோதரன், அதாவது அவர்கள் இரு குழந்தைகளின் மாமன் எப்பேர்பட்டவன் தெரியாதா?சின்னவயசிலேயே  பக்கா வெண்ணை திருடன்.  அவன் ஏறி உடைக்காத, திருடாத  உடைக்காத  வெண்ணை சட்டிகள் வைத்த   உறி  கோகுலம் பிருந்தாவனத்தில் ஒன்று கூட  கிடையாதே.  திருடுவதில் அவனுக்கு ஈடு இணையே கிடையாதே .அதனால்  தான்  ஒப்பிலா  என்கிறார் காளமேகம்.
அடாடா இந்த அற்புத தம்பதிகளின்  ரெண்டு பிள்ளைகளை பற்றி கேட்கவா வேண்டும் ?
ஒருத்தன், பெரியவன்  தொப்பை, தொந்தி கணபதி.  அவன் பெரிய  வயிற்றை  அவன் கால்களே சுமக்க முடியாமல் வளைந்தவை . அவன் கவட்டை காலுடன் நடந்து வரும் அழகே தனி.  இன்னொருவன் பற்றியும் சொல்கிறேன்.   ஒன்று இரண்டு இல்லை, பன்னிரண்டு வாய் அவனுக்கு  ஆறு தலைகள் கொண்டவன். இவர்களையா  பெருமையாக எண்ணி பேசுகிறாய்?



முடிந்தபோது இன்னும் தமிழ் புலவர்களை ரசிப்போம். 

THIRUK KOLOOR PEN PILLAI


திருக் கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்.


 


75. யான் சிறியேன் என்றேனோ திருமலை நம்பியைப் போலே

ஆளவந்தார்  எனும்  யமுனாச்சார்யாருக்கு  சிஷ்யர்கள் பலர்.   பிரதான சிஷ்யர்கள் ஐந்து பேர்.  அவர்களில் ஒருவர்  பெரிய  திருமலை நம்பிகள்.    திருப்பதி திருமலையில்  பிறந்து வளர்ந்தவர்.  இவருக்கு ஸ்ரீசைல பூர்ணர் என்ற பெயரும் உண்டு. 

இவருக்கு இன்னொரு மகத்தான பெருமை.  பெரிய  திருமலை நம்பிகள்  ஸ்ரீ  ராமானுஜரின் தாய்மாமன். இவரிடம், ஆளவந்தார், ராமானுஜருக்கு ராமாயணத்தை கற்றுக்கொடுக்கும் பொறுப்பினை நியமனம் செய்தார். ராமானுஜருக்கு இளையாழ்வார் எனும் இயற்பெயரை சூட்டிய பெரிய திருமலை நம்பி, திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களில் முதன்மையானவராக கருதப்பட்டவர். 

 ஆளவந்தார்  தனது பிரதான  ஐந்து சிஷ்யர்களிடமும்  ஒவ்வொருவரும்  ஒவ்வொரு சாஸ்திரத்தின் விசேஷ அர்த்தத்தை  பிற்காலத்தில்  ராமானுஜருக்கு உபதேசிக்க வேண்டும் என்று ஆளவந்தார் கட்டளை இட்டிருந்தார்.  

பெரிய  திருமலை நம்பிக்கு   ''நீ  ஸ்ரீராமாயணத்தை கற்றுக்கொடு''  அதுவே  உயர்ந்த  வைணவ சம்பிரதாய சரணாகதி சாஸ்திரம் ஆகும்.   

இப்படிப்பட்ட  பெரிய திருமலை நம்பிக்கு சகோதரி ஸ்ரீ பெரும்புதூரில்  வசித்தாள்.  அவளுக்கு  குழந்தை பிறந்திருக்கிறது என்ற சேதி வந்தது தாய்  மாமனாகிய  நம்பிகள் ஸ்ரீ பெரும்புதூர் சென்று  குழந்தையை பார்க்கிறார். 

''என்ன  ஆச்சர்யம் இது,   இக் குழந்தையின் முகத்தை கண்டதுமே   பெருமாளுக்கு   மகத்தான தொண்டு செய்யப்போகிறவன் இவன் ''  என்று  பட்டது. பெருமாளுக்கு எப்போதும் தொண்டு செய்யும்  ஆதிசேஷன்  அவர் ராமராக அவதரித்தபோது  தம்பி லக்ஷ்மணனாக வந்து   தொண்டு செய்தது  மனதில் படுகிறது.  இந்த குழந்தைக்கு   “ராமனுக்கு தம்பி '' ராமானுஜன் '' என்று பெயர் சூட்டினார். இவனை கூப்பிடுவது    “இளையாழ்வார் “ என்ற பெயரில்  இருக்கட்டும் '' என்கிறார் 

பெரிய திருமலை நம்பிகளுக்கு  ஆளவந்தாரின்  இன்னொரு கட்டளை:

 ''நீ  திருப்பதி திருமலையில் வாசம் செய்து கொண்டு  பெருமாளுக்கு   திருமலையிலே  தீர்த்த  கைங்கர்யம் பண்ணு ''  என்று ஆளவந்தார்.

ஒருநாள் தீர்த்தகுடத்தை எடுத்துக்கொண்டு கோனேரிக்கு சென்று அங்கே பெருமாளுக்கு தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு   தோளில்   குடத்தைச் சுமந்துகொண்டு,  சன்னிதிக்குச் செல்லும் வழியில் ஒரு வேடன் அவரை   நிறுத்துகிறான் .

“சுவாமி,   தாகத்தால்  தவிக்கிறேன். கொஞ்சம்  குடிக்க தண்ணீர் தாரும்”

 ''இல்லை அப்பனே, இது  மலைமேல் பெருமாளுக்கு  அர்பணிக்கவேண்டிய  தீர்த்தம்''  என்று தர மறுத்தார் 
வேடன் கையிலிருந்த  வில்லில் அம்பு தொடுத்து  குடத்தின் மீது எய்து குடத்தை அது துளைத்தது. நீர் வழிய ஆரம்பித்தது.   வழிந்த நீரை வேடன் குடித்து தாகம் தீர்ந்தான்.

இப்படி ஒரு   அபச்சாரம் நேர்ந்து விட்டதே.  எப்படி  மறுபடியும் நீர் கொண்டு மலை ஏறுவது என்று நம்பிகள் திகைக்க.   வேடன்  ''இதோ இப்படி போனால்  காட்டில் ஒரு இடத்தில் சுனை இருக்கிறது  அங்கே தீர்த்தம் கிடைக்கும்  வாருங்கள் ''  என்று  வேடன்  திருமலை நம்பியை அழைத்து செல்கிறான். தனக்குத் தெரிந்த ஓரிடத்திலே தீர்த்தம் இருப்பதாகச் சொல்லி அவரை அழைத்து வந்து ஓரிடத்தில் நிற்கிறான்.

''என்னப்பா  சுனை இருக்கிறது என்கிறாய். இங்கே ஒன்றையும் காணோமே?''

''சுவாமி  இப்போது பாருங்கள்   என்று  வேடன்  அவர் எதிரே ஒரு இடத்தில்  தனது அம்பினால்  கீறினான் 
''என்ன ஆச்சர்யம்  குபுகுபு வென்று தரையில்  அவன் கிழித்த இடத்திலிருந்து நீர்  ஊற்றாக பெருகியது.''  
பாத்திரத்திலும்  அம்பு துளைத்த இடம் பழையபடி  மூடி இருந்தது...  எதிரே ஆச்சர்யத்தோடு பார்த்த பொது வேடன் இல்லை,  ஒரு அசரீரி குரல் கேட்டது: 

''இனிமேல் இந்த  தீர்த்தத்தையே  நமக்கு நித்யம்  கொண்டு வந்து சமர்ப்பீர் ''

''ஆஹா   வேங்கடவன்  அல்லவோ வேடனாக வந்தவன்'' என்று திருமலைநம்பி தமக்கு கிடைத்த கிருபையை நினைத்து போற்றி வணங்குகிறார்.

வேடனாக வந்து வேங்கடவன் அடையாளம் காட்டியது தான் திருமலைமேல்  இன்றும்  இருக்கும் ஆகாச கங்கை. 

ஆகாச கங்கையிலிருந்து தான்  திருமலை நம்பி  வேங்கடேசனுக்கு  தீர்த்தம்  சமர்ப்பிக்கும்  நித்ய கைங்கர்யபரராக இருந்தார்.   இன்றைக்கும் தினமும்  வெங்கடேசனுக்காக ஆகாச கங்கையிலிருந்து (திருமலையில் உள்ள நீர் ஆதாரம்) தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது .  

ஒரு சமயம், ராமானுஜர்  திருமலைக்கு முதன் முறையாக வந்த போது, ராமானுஜரின் சீடர்கள் அவரை மலை மீது ஏறி..எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்ய வேண்டினர்.தவிர,  அனந்தாழ்வாரின் நந்தவனத்தையும் பார்க்க வேண்டினர்

''ஸ்வாமிகள்,  இந்த  திருமலை என்பது    ஆதி சேஷன்  அம்சம்.  அதன்மேல்  அபச்சாரமாக   என் கால்கள் படலாமா" ? என்று  பதிலளித்தார். 
 சீடர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் மலை மீது ஏற ஒப்புக் கொண்டு ஏறினார்  

 பெரிய திருமலை நம்பி   திருமலையில் இருந்தார். ராமானுஜரின் வருகையை அறிந்த நம்பி, பெருமாளின் தீர்த்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, ராமானுஜரை வரவேற்க, அவரே மலை இறங்கி சென்றார்.

தனது ஆச்சார்யான் என்ற முறையிலும், முதியவர் என்ற முறையிலும், ராமானுஜர் அவரிடம், 

‘‘அடியேன் போன்ற சிறியோனை வரவேற்க தாங்களே வர வேண்டுமா?  வேறு  யாரேனும் தாழ்ந்தவர், சிறியவர்கள் எவரையாவது அனுப்பி இருக்கலாமே ?’’ என்றார்.

திருமலை நம்பி, பெருந்தன்மையுடன், ‘‘ராமானுஜா! திருமலையில் நான்கு வீதிகளிலும் தேடினேன்; என்னைவிடச் சிறியவர் தாழ்ந்தவன்   எவரும்  கண்ணுக்கு  தென்படவில்லை.  கிடைக்கவில்லை! அதனால் நானே கொண்டுவந்தேன்.’’ என்று பதிலளித்தார். நம்பியின் தன்னடகத்தைக் கண்ட எம்பெருமானார் (ராமானுஜரின் இன்னொரு பெயர்)   பெரிதும் வியந்தார்.
.
இதில் ஒரு உள்ளர்த்தம் உள்ளது.  ஒவ்வொரு வைஷ்ணவரும் வேறு ஒரு வைஷ்ணவரைக் கண்டால் அவரைவிட விட  தன்னை தாழ்ந்தவராக ''அடியேன்''  என்று   எண்ண வேண்டும்.   ஆழ்வார்கள்  அப்படி எண்னிக் கொண்டவர்கள் . திருமலை நம்பி ஆகவே   தன்னை சிறியோன் என்றுக் கூறிக் கொண்டார்.

இதை   மனதில் கவனம் வைத்துக்கொண்டு   ராமானுஜரை திருக்கோளூரில்  கண்டபோது  அவர் கேட்ட ஒரு கேள்விக்கு  பதில் சொல்லும்போது   81  உதாரண புருஷர்களை குறிப்பிடுகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.

''ஸ்ரீ ராமானுஜரே ,  “ஸ்ரீவைணவ கோட்பாடுகளை பாராட்டி, அதன் வழி வாழ்ந்து,  பெரிய திருமலை நம்பிகளை போல   என்னை சிறியவன் என்று எப்போதாவது, என்றாவது, நான் கருதியதுண்டா, இல்லையே, அப்படி இருக்க எவ்விதத்தில் இந்த க்ஷேத்ரத்தில் நன் தங்கி வசிக்க தகுதி உடையவள் ?'' என்று  கேட்கிறாள்  திருக்கோளூர் பெண்பிள்ளை. 



PESUM DEIVAM




பேசும் தெய்வம்  J K SIVAN

                          நயன  சம்பாஷணை 


வெள்ளைக்காரன்  காலத்திலேயே  1893லேயே  விவேகானந்தர் மனத்தில் ஒரு  கவலை இருந்தது. 

''வெள்ளைக்காரன், அந்நியர்  வரவால்  ஹிந்து கலாச்சாரம், புராணம், வேதம், சாஸ்திரம், இதிகாசம், தெய்வ பக்தி, ஆன்மிகம், எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக அழியப்போகி றது....

''ஹிந்துக்கள் ஆகிய  நாம் நமது   ரிஷிகள், மஹான்கள் நமக்கு  விட்டுவிட்டுப்போன  சொத்தை  மதிப்பு தெரியாமல்  புறக்கணிக் கிறோம், பராமரித்து வளர்க்க தவறுகிறோம். அதன் பலன் கடுமையாக இருக்கும் ''.

அந்த காலகட்டத்தில் தான் 1894 ல்  காஞ்சி பரமாச்சார்யா தோன்றினார். அந்த எளிய  ஆச்சாரியார் நூறு ஆண்டுகள் வாழ்ந்து எண்ணற்ற  மக்களை சந்தித்து  நாட்டில் பல இடங்களில்   நடந்தும் பல்லக்கி லும்  சென்று  ஹிந்து சனாதன தர்மத்தை போதித்தார் புத்துணர்வு, அளித்தார். அவரைப் பற்றி எழுத எழுத வற்றாத நீரோடையாக  அற்புத தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது அல்லவா. 

அப்படிப்பட்ட பரமாச்சார்யா  திருவண்ணா மலை யில் வந்து வசிக்கத்  தொடங்கிய    (பச்சை தலைப்பாகை, தாடி,  கையில் விசிறி,  -- ரமண பக்தர் )  யோகி ராம் சுரத்  குமார் பற்றி சொல்லும்போது    ''யோகி  ஒரு உயர்ந்த மஹான், ரமணரின் கருத்துகள், சித்தாந்தத்தை
 ஆத்ம ஞானத்தை தொடர்ந்து மக்களிடையே  ராமணருக்கு பிறகு    பரப்ப  தோன்றியவர்'' என்று சொல்வார்.   

இந்த வட  நாட்டு  யோகி  இளம் வயதில் இருந்தே  ஆன்மீகத்தில்  வேரூன்றியவர். ஆத்மஞானி.  கங்கையை பக்தியோடு  வணங்கி போற்றுபவர். மணிக்கணக்காக  எத்தனையோ நாட்கள்  இரவு பகலாக  கங்கைக்கரையில் தியானம் செய்தவர். கங்கையின் ஓசை, இருளில்  ஆகாய விண்மீன்களின் அசைவு, ஒளி, இதில்  ஞானம் பெற்று தன்னை மறந்தவர்.  பல இரவுகள் அப்படியே கரையில் படுத்து உறங்கியவர்.  நாம ஜெபத்தில் நேரம் போக்கியவர். 

இந்த  திருவண்ணாமலை  யோகி  எப்போதும்  காஞ்சி  பரமாச்சார்யாவை பற்றி  சொல்லும் போது  பக்தியில் உறைந்துவிடுவார்.  கரைந்து விடுவார். 

 ''இந்த உலகமே அந்த மஹா பெரியவருக் கு
 கடமை பட்டிருக்கு'. நமது வேதங்கள், பண்பாடு, சாஸ்திரங்கள் பக்தி உணர்வு இதெல்லாம் பாதுகாத்து தர என்றே  பிறந்தவர் '  என்பார்.   

யோகியின் திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில்  அவர் அனுமதித்த முதல் படம்  பரமாச்சார் யருடையது.  அவர் படத்தின் முன்பு ஏற்றப்பட்ட   விளக்கும் என்றும் எரிந்துகொண்டே இருக்கவேண்டும் என்பார்.

இன்றும் அவ்வாறே  அந்த தீபம் ஒளி தந்து கொண்டிருக்கிறது.

ஒரு சம்பவம் சொல்கிறேன். 
காஞ்சி மடத்தில்  அப்போது  இருந்த   ஸ்ரீ  சந்த்ரமௌளி ஒரு தடவை மஹா பெரியவா ளிடம் '  எனக்கு  திருவண்ணாமலை சென்று யோகியை தரிசனம் செய்து வர பெரியவா அனுமதி தர  வேண்டுகிறேன் '' என்கிறார்

''இப்போ வேண்டாம் ''

மறுநாள் யோகிக்கு  ஜென்ம தினம்.    அன்று   காலை  ஏகாம்பரேஸ்வரருக்கு விசேஷ பூஜை அபிஷேகம் ஹோமம் எல்லாம்  ஏற்பாடு  பெரியவா பண்ணி இருந்தார்.

''சந்திரமௌளி  ''இப்போ  கிளம்பு,  திருவண்ணா மலைக்கு போய்  யோகி கிட்ட  ஏகாம்பரேஸ் வரர் விசேஷ பூஜை, அபிஷேக  பிரசாதம் எல்லாம் கொண்டு போய் கொடு''

இதை   நினைவு கூர்ந்து யோகி  '' இந்த பிச்சைக்காரன் மேல்  பரமாச்சார்யாவுக்கு அவ்வளவு காருண்யம், தயை''  என்பார். 

இன்னொரு சந்தர்ப்பம்.
''சந்திரமௌளி ,  ஐநூறு ரூபாயை  மடத்தில் ஆபிஸ் லே கேட்டு வாங்கிண்டு  திருவண்ணா மலை போ.  யோகியை அங்கிருந்து ஒரு  டாக்சியில் அழைச்சுண்டு  கோவிந்தபுரம்  ஸ்ரீ போதேந்திரா அதிஷ்டானம் போ. அங்கே  யோகியை சில மணி நேரம்  நான் தியானம் பண்ண சொன்னேன்னு சொல்லு . அப்புறம் அவரை திருவண்ணாமலையில் கொண்டு விட்டுட்டு  வா ''.
சந்திரமௌளி  திருவண்ணாமலை சென்றபோது  யோகி ஆஸ்ரமத்தில் யாரோ ஒரு டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் அவர் மகளோடு அங்கே யோகியை தரிசிக்க வந்திருந்தார்.  யோகி
எப்போதும்  ''எனக்கு தெரிந்தது ஒண்ணே ஒண்ணு  தான்.  '' ராம் ராம்'' அது தான் எல்லாமே. விடாமல்  நாள் முழுதும் சொல்லிக் கொண்டே  இருக்கவேண்டும். என் குரு எனக்கு அதை தான் உபதேசித்தார். '' என்பார். 
சில பேருக்கு  வேண்டுமானால்  இதில் இதில் நம்பிக்கை இருக்கலாம்.   ஆனால்  பலர் இதை அனுபவித்தி ருக்கிறார்கள்.  கோவிந்தபுரத்தில்  போதேந்திர ஸரஸ்வதி   அதிஷ்டானத்தில்  ராம நாமம்  இரவு பகலாக3  எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். 

சந்திரமௌளி  சொன்ன விஷயம்,  மேலும்
 அவருக்கு  பெரியவா  இட்ட  பொறுப்பு பற்றி  கேட்டதும்  யோகி  அசந்து போனார்.  1959க்கு  பிறகு  யோகி திருவண்ணாமலையை விட்டு எங்குமே செல்லவில்லை. 

''அப்பா  அப்பா என்று குருவை, கடவுளை
  தியானிப்பவர்  யோகி.  கண்ணை மூடி தியானித்தார்.   தான் கோவிந்தபுரம் போவதா வேண்டாமா  என்று உத்தரவு தியானம் மூலம் அப்பாவிடம் கேட்டார். 

 ''அப்பா  ஒரு பிக்ஷா டனர். கபாலம் ஏந்துபவர், எப்போதும் இருப்பவர். நான்  காஞ்சிபுரம் போய்  பரமாச்சார்யாவை பார்ப்பதா  கோவிந்தபுரம் போவதா.  ரெண்டும் ஒன்று தான் எனக்கு '' என்றவர்  நேராக  காஞ்சி புரத்து

க்கு  சந்திரமௌளியோடு  கிளம்பிவிட்டார் 

அவர்கள் காஞ்சிபுரம் வந்தடைந்த நேரம், பெரியவா நித்ய பூஜா அனுஷ்டானங்கள் முடிந்து தனது அறைக்கு ஓய்வுக்கு சென்றுவிட்டார். அறைக்கதவு சார்த்தியாகி விட்டது.

''பெரியவா கிட்டே  நான் வந்திருக்கேன்னு  சொல்லுங்கோ'' என்று சந்த்ரமௌளியிடம்  யோகி சொல்கிறார். சந்த்ரமௌளிக்கோ  கலக்கம்.  பெரியவா ''என்னடா நா சொன்னது ஓண்ணு  நீ செஞ்சது ஒண்ணு'' என்று கோபிப்பாரோ?? என்ன செய்வது?

யோகி கொடுத்த தைரியத்தில், மெதுவாக  பெரியவா அறை க்  கதவை மெல்லிதாக தட்டினார் . 
அந்த  திரிகால ஞானிக்கு  நடந்தது எல்லாம் தெரியாமலா இருக்கும்?. அவரே வந்து  யோகிக்கு தரிசனம் தருவார்'' என்று தோன்றியது சந்திரமௌளிக்கு .  நடுக்கம் குறைந்தது. 

உண்மையில் காஞ்சிபுரம்  கோவிந்தபுரம் ரெண்டுமே ஒன்று தான்.   கோவிந்த புர அதிஷ்டானத்தில் இருக்கும் போதேந்திர ஸரஸ்வதி  வழி தோன்றல் தானே   காஞ்சி பரமாச்சார்யா.  

யோகியின் வார்த்தைகளில் சொன்னால்   ''இந்த பிச்சைக்காரன் சாஷ்டாங்கமாக மகா பெரியவா காலில் விழுந்தேன். அவர் இவன் மேல் பெரும் கருணை கொண்டு  ஆசிர்வதித் தார்.  நீ சூர்ய வம்சமா?? என்று கேட்டார் . இந்த பிச்சைக்காரனுக்கு பதில் சொல்ல தெரிய வில்லை''

ரெண்டு யோகீஸ்வரர்களும்  நேருக்கு நேராக சில நிமிஷங்கள் பார்த்துக்கொண்டே இருந் தார்கள்.   நயன பாஷை  அங்கே  நடந்து கொண்டிருக்கும்போது  வாய் பேச்சுக்கு ஏது  இடம்?   நேரம்  நழுவிக்கொண்டே இருந்தது.
யோகி திரும்புகிற நேரம் வந்துவிட்டது.    காமாக்ஷி பிரசாதம் கை நிறைய  தன்னுடைய  ப்ரசாதத்தோடு சேர்த்து அளித்தார் யோகிக்கு.    யோகிக்கு  பரமானந்தம்.  மிகுந்த சந்தோஷத் தோடு  பிரசாதத்தை திருவண்ணாமலைக்கு எடுத்து சென்றார்.
''அண்ணாமலையார்  கோவிலில் பக்தர்க ளுக்கு  இந்த பிச்சைக்காரன் அந்த தெய்வத் தின் ப்ரசாதத்தை அளித்து  பாக்யம் பெற வைத்தான். இந்த பிச்சைக்காரன் மேல் தான் அந்த பரமாச்சார்யாருக்கு எவ்வளவு பாசம், கருணை அன்பு ''   

பெரியவாளிடமும்  யோகியிடமும்  அனுமதி பெற்று இந்த விஷயத்தை சந்த்ரமௌளி  நம் போன்ற பக்தர்களுக்கு கசியவிட்டார்.   

Thursday, June 25, 2020

HUMOUR




கண்ணே  காமாட்சி  J K SIVAN

காலம்  மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது.  இதை பற்றி நான் நினைக்கும் முன்பே  அதோ அங்கே  இரும்பு கேட் பின்னால்  வாசல் வராந்தாவில் ஒரு பிளாஸ்டிக்  நாற்காலியில் உட்கார்ந்து யோசிப்பவர் யார்?

 கொரோனாவில் பொழுது போகாத   ரிடையர்டு  போஸ்ட் மாஸ்டர்   ப்ரணதார்த்தி தான்.   தனது மனைவி   காமுவைப் பற்றி சிந்தித்தார்.   அவளுக்குமா  அறுபத்தைந்து வயது? 

''பதினெட்டு வயசுலே  கல்யாணம்.  பொட்டிப்பாம்பா  வாசுகி மாதிரி எள்ளுன்னா  எண்ணையா இருந்தவ..... நான் எங்கேயோ  அண்ணாந்து மரக்கிளையிலே  காக்காவை பார்த்து கொண்டிருந்தாலும்    ''கூப்பிட்டேளா, இதோ வந்துட்டேன் என்று ஓடி ஓடிவருவாள்.

  எப்போ ஞாயிறுக்கிழமை வரும் என்று காத்திருப்பாள். ''வாங்கோ  மைலாப்பூர் போய் உங்க  அம்மா வோட ஒருநாள்  அவாளுக்கு திருப்தியா இருந்துட்டு வருவோம்''

''சேப்பங்கிழங்கு நானாயிருக்கேன்னு  வாங்கினேன். உங்களுக்கு பிடிக்காதுன்னு இப்போ தான் தெரியறது. இனிமே என் வாழ்க்கையிலே எனக்கு பிடிச்ச சேப்பங்கிழங்கை கையாலே  தொட மாட்டேன்''

ஒருநாள் சம்பூர்ண சாஸ்திரி  புடவை  கடையிலே  என் பக்கத்திலே  பேசாம  நின்னாள்.
 ''உனக்கு பிடிச்ச கலர்லே புடவை எடுத்துக்கோ'' என்று சொன்னதற்கு என்ன சொன்னாள்?  
''என்னையே  செலக்ட் பண்ணவர் எனக்கு எது வேணும்னு நீங்களே செலக்ட் பண்ணுங்கோ''

மூன்று வருஷங்களுக்குப்  பிறகு 

எனக்கு முன் பக்கம் கொஞ்சம் கொஞ்சமா சீனாக்காரன் மாதிரி  வழுக்கை நெத்தி யிலிருந்து பின்னாலே  நகர்ந்து  கொண்டிருந் ததை மறைக்க  இடது பக்கத்தி லிருந்து நிறைய  படிய  படிய  வலது பக்கம் நோக்கி தள்ளி  தலை வாரிக்கொள்வேன்  சுப்பிரமணியம் சொல்லிக்  கொடுத்த ட்ரிக்.  அதைப்பார்த்து

''உங்க  ஹேர் ஸ்டைல் பிரமாதம்'' என்பாள்
.
எந்த அறுவை ஹாஸ்யம் நான்  சொன்னாலும்  ''ரொம்ப கலகலன்னு  உங்க வீட்டிலே எல்லோரும்  நகைச்சுவையோடு பேசறீங்க''

பத்து வருஷங்களில் அப்பறம் எப்படி மாறிட்டா?

காமுன்னு  மெதுவாக தான் ஹாலிருந்து  கூப்பிட்டேன். இருபது   அடியில் சமையல்கட்டிலே இருக்கிறவ 

 ''நான் வேலையா இருக்கேன். ஏன் அலறு கிறீங்க... ஊருக்கே  நான் காமுன்னு  தெரியணுமா.  சொல்ல வேண்டியதை இங்கே வந்து சொல்றது தானே''  குரல் என்னைவிட பெரிய வால்யூம்.

தினசரி கிழிக்கும் காலண்டரை கையில் எடுத்துக்கொண்டு வந்து ஒருநாள்  

'' இன்னும்  மூன்று நாள் இருக்கு. நானும் குழந்தைகளும் என் தங்கை ஆத்துக்கு  மன்னார்குடி போறோம். நிம்மதியாக ஒரு ரெண்டுவாரமாவது இருக்கணும்.''

''இன்னிக்கு முள்ளங்கி சாம்பார்  வெண்டைக் காய் கறி .  கொஞ்சமா எனக்கு மட்டும்  தான்  இருக்கு.   உங்களுக்கு  தான் மோர் சாதம் நார்த்தங்கா போறுமே .''

பதினைந்து இருபது  வருஷங்கள் ஆகிவிட்டது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை.  மே  மாத வெயில் சுள்ளென்று  அப்பளமாக  வாட்டு கிறது. 
பாதிக்கு மேல்  தலையில் சைனாக்காரன் சாப்பிட்டுவிட்டதால் , இடது பக்கம் இருக்கும் மிச்சத்தை  வலது பக்கம் தள்ளி வாரிக் கொண்டு மறைக்க பிரயாசைப்  பட்டபோது.

 '' எத்தனை நேரம் தான் இந்த அழகு தலையை வாருவீர்களோ. சட்டு புட்டுன்னு வாங்கோ. மொட்டைமாடிலே  வடாம் பிழியணும் .நேரமாகிறது''

தீபாவளிக்கு  புடவை எடுத்தேனே அப்போது:
 ''உங்களுக்குன்னு எப்படி தான் உலகத்திலேயே எல்லோரும் ஒதுக்கின கலர் புடவை எனக்கு எடுக்க தோண்றதோ ?''

பதில் அதிகம் சொல்லாமல்  வார்த்தை வளர்க்காமல்  நமுட்டு சிரிப்பு சிரித்தால் அதற்கும்  ஒரு கம்மெண்ட்.

 ''உங்க குடும்பத்துக்குன்னு  எது சொன்னா லும்  ஒரு  சிரிச்சு மழுப்பற குணம்  என் குழந்தைகள் கிட்டேயும் வந்துடுத்து''

ஏதாவது பதில் சொன்னால் அதற்கும் ஒரு அஸ்திரம் தயாராக வைத்திருக்கிறாள்: 
 ''உங்க மனிஷால் கிட்டே பேசி ஜெயிக்க முடியுமா. ஆங்காரம் பிடிச்ச  விஸ்வாமித்ர கும்பல்''

முப்பது வருஷம் காலம் தள்ளி விட்டேனே. அப்போது கூட:   ஒருநாள்  நண்பன் ஒருவன் கொடுத்த  கிரேசி மோகன் டிராமா பாஸ்:

''நல்ல நாள்  பார்த்து இன்னிக்கு தான்  டிராமா வுக்கு டிக்கெட் வாங்கினேளா?  .  ஒன்றரை படி அரிசி உளுந்து  நனைச்சு ஊறிடுத்தே. யார்  அறைக்கிறது?      நீங்களே போய் உங்க டிராமாவை ரசியுங்கோ.  கொஞ்சம் அமைதியா நான் வீட்டிலே வேலை பாக்கிறேன்.''

ஒருநாள்  என் காதிலே அவ என்ன சொன் னான்னு விழவே இல்லை.  நான்   ஒண்ணுமே   பதில் சொல்லலே  இருந்தாலும்.

 '' நான் எது சொல்லி என்னிக்கி காதிலே வாங்கிண்டு இருக்கியேள் ?

ஒருநாள்  சாயந்திரம்  பல் டாக்டர் வீட்டுக்கு போகும்போது  ''காமு நீ போய்  அங்கே இரு. ஒருமணிநேரம், நிச்சயம் ஆகும். நான் வந்து அழைச்சுண்டு வரேன்''   என்று தான் சொன்னேன்.

 ''ஆமாம் ரொம்ப அக்கறை. எம்மேலே. .  போறவளுக்கு வரதுக்கு வழி தெரியாதா.?
பிசாசா பிடிச்சுண்டு போகும். அப்படிதான் போகட்டுமே. நிம்மதியா  அதோடு போறேன்''

உடம்பு சரியில்லாத  என்  பெரிய அக்கா கும்பகோணத்திலிருந்து ஒரு போஸ்ட் கார்ட் போட்டதை  '' சார் போஸ்ட் '' என்று  வாசல் மர   கேட்டில் சொருகிவிட்டு போஸ்ட்மேன்  போனதை பார்த்து எடுத்து வந்தாள் .
''யாரு   லெட்டர் போட்டிருக்கா?  ன்னு தான் கேட்டேன்.
''எல்லாம் உங்களோட  அக்கா '' ரா ரா ரா ரா ஜ  லட்சுமி   விக் டோரியா மஹாராணி தான் .  இந்த  இளவரசரை  பாக்காமல் கண்ணு  பூத்து போய்டுத்தாம்''

''போறுமே   நீங்க  தலை வாறுகிற  அழகு. . இந்த  சொட்டை  உங்க குடும்ப  சொத்து.  இதை எதுக்கு மறைக்க தலை கீழ  நிக்கறேள். அழகு சுந்தர மன்மத  குஞ்சுன்னு  மனசுலே எண்ணம்.''  

''ஆ''  வென்று வாயை பிளந்து உட்கார்ந்தால்   ''கோட்டை வாசலை  மூடிக்கோங்கோ.   ஒண்ணு  கொசு உள்ளே போகும் இல்லேன்னா சாக்கடை வெளியே வரும். அப்படி ஒரு வாய். உங்கண்ணா  தம்பி ரெண்டு  பேருக்குமே  ஓட்டைவாய் மாரிமுத்துகள் ..

''என்ன  சினிமா வா ??  இங்கேருந்து அங்கே போயும்   உங்க  கொசுக்கடி தொந்தரவா? 
''எனக்கு  சினிமா  டான்ஸ்  ட்ராமா எதுவுமே  வேண்டாம்பா.  என்  அன்னாடம் பொழைப்பே இந்த வீட்டிலே   ஒரு  மெகா சீரியல் எடுக்கற மாதிரிதானே இருக்கு ''

இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
''சற்று இருங்கள்  இதோ எதற்கோ உள்ளே  கூப்பிடுகிறாள்.  போய்ட்டு வருகிறேன்.... ராக்ஷஸி. ராக்ஷஸி...''


GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...